Archive for the ‘தொகை அகராதி’ Category

சூத்ர, சூத்திரன் – வார்த்தைகளுக்கு அகராதிகள், மனு ஸ்ம்ருதி  கொடுக்கும் அர்த்தம், விளக்கம் முதலியன!

ஜூன் 18, 2019

சூத்ர, சூத்திரன்வார்த்தைகளுக்கு அகராதிகள், மனு ஸ்ம்ருதி  கொடுக்கும் அர்த்தம், விளக்கம் முதலியன!

Sudra as per Nikandus

அகராதிகளில்சூத்திரன்என்ற சொல்லுக்கு கொடுக்கும் விளக்கம்: எல்லாவிதமான அகராதிகளில் கொடுத்துள்ள பொருல், விளக்கம் முதலியவற்றாஇத் தொகுத்து, கீழே கொடுக்கப் படுகிறது[1]:

  1. சதுர அகராதி, தொகை அகராதி முதலியவற்றிலும், “சூத்திரன்” என்ற வார்த்தை இல்லை.
  2. இசையினி தமிழ் அகராதியில், சூத்திரன் என்றால், நான்காவது ஜாதி, பிரம்மாவின் கால்களில் இருந்து உண்டானான் என்றுள்ளது[2].
  3. சூத்திரன் என்றால், முப்புரி நூல் அணிந்தவன் என்றும் சொல்கிறது[3].
  4. தச்சன், நான்காம் வருணத்தோன் என்றெல்லா குறிப்பிட்டு, பிறகு புஷ்பராகம், வைடூரியம் என்றெல்லாம் பொருள் சேர்க்கிறது[4].
  5. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி, இவை எல்லாவற்றையும் சேர்த்து குறிப்பிட்டுள்ளது.
  6. ஜே.பி.ஃபேப்ரிசியஸ் அகராதியில், “ (fem. சூத்திரச்சி, pl. சூத்தி ரர், com. சூத்திராள்) a Sudra, a member of the 4th caste. சூத்திரசாதி, the Sudra caste, ” என்றெல்லாம் உள்ளது.
  7. மிரான் வின்ஸ்லோ அகராதியில், “cūttirṉ The topaz, புஷ்பராகம். 2. The cat’s eye, a precious stone, வைடூரியம். (M. Dic.) cūttirṉ s. (plu. சூத்திரர்.) The last of the fourfold divisions of castes, the servile tribe, said to have sprung from the feet of Brahma. See சாதி W. p. 854. SUDRA. சூத்திரநாகம், s. One of the four high castes of the நாகம், snakes. See நாகம். சூத்திரநாபி, s. An antidote for the poison of வச்சநாபி. See நாபி. சூத்திரச்சி–சூத்திரிச்சி, s. A female of the Sudra caste, நான்காம்வருணப்பெண். (c.) சூத்திரர்தொழில்-சூத்திரவிருத்தி, s. The duties of the servile castes. See தொழில். சூத்திரன், s. (plu.) People of the fourth caste, சூத்திரர். Colloq.)”

இதிலிருந்து, தொகுத்தவர்கள், இப்பாடத்தைப் பற்றி, முழுமையாக அறிந்திருக்கவில்லை என்றும், அவரவர் இம்முயற்சியை மேற்கோண்ட போது, என்ன அறிந்தார்களோ [மற்றவர் மூலம்] அவற்றையெல்லாம் தொகுத்து எழுதி, பதிப்பித்துள்ளார்கள் என்று தெரிகிறது. “சூத்திரன்” சொல்லுக்கு கொடுக்கப்பட்டுள்ள பொருளை கவனித்தால், உயர்ந்தநிஐயிலிருந்து, தாழ்ந்த நிலைவரை குறிப்பிட்டுள்ளது தெரிகிறது. மேலும், “முப்புரிநூல் அணிந்தவன்” என்பது விசித்திரமாக உள்ளது. அதாவது, ஒரு காலம் வரை சூத்திரர் பூணூல் பொட்டுக் கொண்டிருந்தனர் என்று தெரிகிறது. ஒருவேளை ஆங்கிலேயர் ஆண்ட காலத்திலும் அப்பழக்கம் இருந்திருக்கிறது. பிறகு, ஏனில்லை என்ற கேள்வி எழுகின்றது. எப்படியாகிலும், அச்சொல் இழிவாகக் கருதப் படவில்லை.

EVR and Sudra

சூத்ரர் – Sudra / Shudra ஜாதியா Caste or அல்லது குலமா tribe?: ஆங்கிலேயர் தமது எழுத்துகளில் Sudra caste சூத்திரர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர் கேஸ்ட் [Caste] அதாவது ஜாதி அல்லது குடி [tribe] என்ற வார்த்தைகள் குழப்பத்துடன் அல்லது வேண்டுமென்றே குழப்பவே அவ்வாறு உபயோகித்தனர் என்று தெரிகிறது. சூத்திரர்கள் பூசாரிகளாகவும் இருந்திருக்கின்றனர்[5]. எவ்வாறு பல குலத்தவர் தாங்கள் சூத்திரர்கள் அது சூத்திரர் அல்ல என்று கூறிக்கொண்டார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது[6]. மேலும் சுத்தமான தூய்மையான சூத்திரர்கள் [Pure Shudras] என்று சொல்லிக்கொள்ளும் குழுக்களும் இருந்தது தெரிகிறது[7]. இது உள்ள குறிப்புகளின் படி பார்த்தால் இந்நிலை 19 ஆம் நூற்றாண்டில் வரை இருந்திருப்பது தெரிகிறது.

EVR and Sudra, paraiyan

சூத்ரன், சூத்திரன் ஆக்கி, கெட்டப்பெயர் கொண்டு மற்றும் மோசமான பொருள் கொடுப்பதேன்?: திராவிட, திராவிட சித்தாந்த, திராவிடத்துவ, நாத்திக, இந்துவிரோத சிந்தனையாளர்கள், இவ்வார்த்தையை “சூத்திரன்” என்று குறிப்பிட்டு, இழிந்தவன், இழிபிறப்பாளன், வேசி மகன், தேவிடியா பையன், ….என்ற வரைக்கும் விளக்கம் கொடுத்துள்ளார்கள். இதற்கு ஈவேரா தான் காரணம்[8]. இன்றும் எழுதி-பேசி வருகிறார்கள். ஆனால், அவர்களில் யாரும் மூல சமஸ்கிருத நூல்களைப் படிக்கவில்லை, ஒழுங்காகப் படிக்கவில்லை, அல்லது அடுத்தவர் சொன்னதை வைத்து, தவறு-தவறாக எழுதி வைத்துள்ளார்கள் என்று தெரிகிறது. மனுஸ்மிருதி, புருஷ ஸுக்தம் போன்றவற்றையும் குழப்பியுள்ளனர், சுலோக எண்களையும் ஏதோ, தமது கற்பனையில் தோன்றியது போல எண்களைக் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக “சூத்ர” என்ற சொல்லையே குறிப்பிடாமல், “சூத்திரன்” என்றே எழுதி-பேசி தவற்றையே, உண்மை போல வைத்துக் கொண்டு, பிரச்சார செய்துள்ளது போலவும் தெரிகிறது. இனி அவ்வாறு ஏன் நடந்தது என ஆராயலாம்.

Manu Amruti 8.415

வேசிமகன், விபச்சாரி மகன் என்பதற்கான ஆதாரமும் இல்லை: பொதுவாக இந்த திராவிடத்துவவாதிகள், மனுஸ்மிருதியில் உள்ளது என்று சொல்லி, பொய்யைத்தான் பரப்பி வருகிறார்கள். இதோ அந்த சுலோகம்[9]:

ध्वजाहृतो भक्तदासो गृहजः क्रीतदत्त्रिमौ ।

पैत्रिको दण्डदासश्च सप्तैते दासयोनयः ॥ ४१५ ॥

 

dhvajāhto bhaktadāso ghaja krītadattrimau |

paitriko daṇḍadāsaśca saptaite dāsayonaya || 415 ||

There are seven kinds of slaves—

(1) captured under a banner, / he who is made a captive under a standard

(2) slave on food, /  he who serves for his daily food

(3) born in the house,

(4) bought,

(5) presented,

(6) hereditary, he who is inherited from ancestors, and

(7) slave by punishment./ he who is enslaved by way of punishment.

இதை, இப்படி, மொழிபெயர்த்துள்ளனர்:

சூத்திரன் என்றால் ஏழுவகைப்படும்.

  1. போரில் புறங்காட்டி ஓடியவன்,
  2. போரில் கைதியாகப் பிடிக்கப்பட்டவன்,
  3. பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியம் செய்பவன்,
  4. விபச்சாரி மகன்,
  5. விலைக்கு வாங்கப்பட்டவன்,
  6. ஒருவனால் கொடுக்கப்பட்டவன்,
  7. தலைமுறைதலைமுறையாக ஊழியம் செய்பவன்.

ஆதாரம்: மனுசாஸ்திரம், அத்தியாயம் 8, ஸ்லோகம் 415

இங்கு சூத்ர என்ற வார்த்தை இல்லை, விபச்சாரி என்று பொருள்பட வரும் எந்த வார்த்தையும் இல்லை. ஆகவே, பொய் சொல்லியே காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது.

வேதபிரகாஷ்

13-06-2019

Who were Sudras, Ambedkar

[1] தமிழ்ப்புலவர், https://tamilpulavar.org/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D

[2] [ cūttirṉ, ] s. (plu. சூத்திரர்.) The last of the fourfold divisions of castes, the servile tribe, said to have sprung from the feet of Brahma. See சாதி W. p. 854. SUDRA.

[3] cūttiraṉ, n. < sūtra. One whowears the triple cord or the sacred thread; முப்புரிநூ லணிந்தோன். (யாழ். அக.)

[4] cūttiraṉ, n. < sūtra. Carpenter; தச்சன். (அக. நி.), cūttiraṉ, n. < šūdra. 1.Person of the fourth or lowest of the originalcastes of the Hindus; நான்காம் வருணத்தோன்.(பிங்.) 2. Topaz; புஷ்பராகம். (W.) 3. Cat’seye; வைடூரியம். (W.)

[5] Francis Buchanan, A Journey from Madras through the countries of Mysore, Canara and Malabar, Vol.II, p.330.

[6] Francis Buchanan, A Journey from Madras through the countries of Mysore, Canara and Malabar, Vol.II, p.154, 172, 303, 414, 482…..

[7] Francis Buchanan, A Journey from Madras through the countries of Mysore, Canara and Malabar, Vol.II, p.404. Vol.III, p.22, 32, 184,

[8] “வைப்பாட்டிக் கதை” ‘-குடிஅரசு’, துணைத் தலையங்கம், 05.09.1926.

http://viduthalai.periyar.org.in/20091220/news28.html

[9] Gangadhara Jha, Manu Smriti, பூலர் போன்றோரும் இதே பொருளைத்தான் கொடுத்துள்ளார்கள்.