Archive for the ‘மனு’ Category

திராவிடநாடு எதற்காக மனித மலத்தை அள்ள ஊக்குவிக்கிறது – நீதிமன்ற தீர்ப்புகள் மூலம் நலதிட்டங்கள் முதலியன (5)

ஜூன் 17, 2023

திராவிடநாடு எதற்காக மனிதமலத்தை அள்ள ஊக்குவிக்கிறதுநீதிமன்ற தீர்ப்புகள் மூலம் நலதிட்டங்கள் முதலியன (5)

2019 – கழிவுநீர்த் தொட்டிக்கு அனுப்பி விஷவாயுவில் இறக்கச் செய்யும் கொடுமை உலகில் வேறெங்கும் இல்லைஉச்ச நீதிமன்றம் வேதனை;

  • கழிவுநீர்த்தொட்டிக்கு ஒரு மனிதரை இறக்கி அவர் விஷவாயுவில் இறக்கச் செய்வது வேறு எங்கும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசைக் கடுமையாக கண்டித்துள்ளது.
  • எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தண்டனை சட்டத்தை சீராய்வு  செய்வது குறித்து மனுவில் உச்ச நீதிமன்றம் கருத்துக்களை கூறியுள்ளது.
  • சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில் சாதி பாகுபாடி இன்னும் நாட்டில் தொடர்கிறது.  இன்னும் கழிவுநீர்த் தொட்டி சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்குத் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட சாதியினரை மட்டுமே சமூகம் பயன்படுத்துகிறது.
  • மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள்தான் ஆனால், அவர்கள் அனைவருக்கும் சமமான உரிமை , வசதிகள் அளிக்கப்படுகிறதா? கழிவுநீர்த் தொட்டிக்குள் இறங்கும் தொழிலாளர்களுக்கு முறையாக  பாதுகாப்பு கவசமான முகமூடி, ஆக்ஸிஜன் சிலிண்டர், ஏன் வழங்கப்படுவதில்லை? கழிவுநீர் தொட்டிக்குள் மனிதர்களை அனுப்பி விஷவாயுவில் இறக்கச் செய்யும் அவலம் உலகில் எந்த நாட்டிலும் இல்லை.
  • ஒவ்வொரு மாதமும் 4 முதல் 5 பேர் கழிவுநீர்த் தொட்டியில் சிக்கி இறக்கிறார்கள். கழிவு நீர்த் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்யும் மனிதருக்குப் போதுமான பாதுகாப்பு கவசங்கள் இல்லாமல் பணியைச் செய்ய வற்புறுத்துவது மனித  தன்மையற்றது.
  • இதன் மூலம் நாட்டில் தீண்டாமை மறைமுகமாக இருக்கிறது என்று நம்புகிறோம். இந்திய அரசியலமைப்பு தீண்டாமையை ஒழித்துவிட்டது.நான் உங்களிடம் கேட்கிறேன். கழிவு நீர்த் தொட்டியை சுத்தம் செய்யும் தொழிலாளியுடன் கை குலுக்குவீர்களா? அதற்கு இல்லை என்று தானே  பதில். இந்த வழியில்தான் நாம் சென்று கொண்டிருக்கிறோம்.
  • சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளைக் கடந்த பின்பும் இன்னும் இது போன்ற கொடுமை நடந்து வருகிறது” என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மே 2023 – தமிழக அரசு அரிக்கைஆணை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதி களில் உள்ள தனியார் கழிவுநீர் லாரி இயக்குபவர்கள் கழிவுநீர்த் தொட்டியின் உள்ளே மனிதர்களை இறங்க அனுமதிக்க கூடாது என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. சென்னைக் குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் தலை மையில் கழிவுநீர் மேலாண்மை ஒழுங்கு முறை மற்றும் செயல் பாட்டு வழிகாட்டு தல்கள் குறித்து தனியார் கழிவுநீர் லாரி இயக்கும் உரிமையாளர், ஓட்டுநர் மற்றும் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு முகாம் சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகக் கூட்ட ரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மனிதக் கழிவு களை அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களது மறு வாழ்வு சட்டம் 2013, பிரிவு 7இன் படி, எந்தவொரு நபரும், ஒப்பந்த தாரரும் அல்லது எந்தவொரு நிறுவனமும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த வொரு நபரையும் அபாயகரமான முறையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு ஈடுபடுத்தவோ அல்லது பணியமர்த்தவோ கூடாது.

விதிகளை மீறுவோர் மீது தண்டனை: அவ்வாறு ஈடுபடுத்தினால், அந்த நபரின் மீது மேற்படி சட்டத்தின் பிரிவு 9இன்படி முதன் முறையாக மீறுபவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது 2 லட்சம் ரூபாய் அபரா தம் அல்லது இரண்டும் தண்டனை யாக விதிக்கப்படும். இரண்டாவது முறையாக மீறுபவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது 5 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என தெரிவிக்கப் பட்டது. சென்னை மாநகராட்சிக்குட் பட்ட பகுதிகளில் சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் உரிமம் பெற்ற லாரி உரிமையாளர்கள் மட்டுமே கழிவுநீர்த் தொட்டியிலி ருந்து கழிவுநீரை அகற்ற அனுமதிக் கப்படுவார்கள். மேலும், இதுநாள் வரையிலும் உரிமம் பெறாத லாரி உரிமையாளர்கள் உடனடியாக உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டும். சென்னை குடிநீர் வாரியத்தின் அங்கீகரிக்கப்பட்ட கழிவுநீர் சுத்தி கரிப்பு நிலையங்கள் மற்றும் கழிவு நீர் உந்து நிலையங்களில் மட்டுமே கழிவுநீர் வெளியேற்றம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டது. மேலும், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதி களில் சென்னை குடிநீர் வாரியத் தின் மூலம் உரிமம் பெறாத லாரிகளை ஆய்வு செய்ய சிறப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இழப்பீட்டு தொகை எவ்வாறு கொடுக்கப் படவேண்டும்?: அதன்படி, சட்ட விரோதமாக கழிவு நீர்த் தொட்டியிலிருந்து கழிவு நீரை அகற்றுபவர்களை முதன்முறை விதிமீறலுக்கு ரூ.25,000- அபராத மும், இரண்டாம் முறை விதிமீறலுக்கு ரூ.50,000 அபராதமும், தொடந்து விதிமீறும் லாரிகளை உரிய சட்ட விதிகளின் கீழ் பறிமுதல் செய்யப் பட்டு குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தேவையான அனைத்து பாது காப்பு உபகரணங்களும் / சாதனங்களும் கழிவுநீர் லாரிகளில் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பணியாளர்களை கழிவுநீர்த் தொட்டி சுத்தம் செய் யும் பணியில் ஈடுபடுத்தி. அப் பணியாளர் இறக்க நேரிட்டால், இழப்பீட்டுத் தொகை ரூ.15 லட்சத்தினை வீட்டு உரிமையாளர் மற்றும் லாரி உரிமையாளர் ஆகிய இருவராலும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட வேண்டும். பகுதிப் பொறியாளர்கள், சட்ட விரோதமாக கழிவு நீரகற்று வதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப் பாக, விரிவாக்கப் பட்ட பகுதி களில் வீடுவீடாக துண்டு பிரசுரம் மூலமும், ஒலிபெருக்கி பொருத்திய ஆட்டோக்கள் மூலமும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

  • பல ஆண்டுகளாக நம் நாட்டின் தூய்மைப் பணிகளுக்கு கழிப்பறைகள் முதல் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையங்கள் வரை அனைத்து நிலைகளிலும் 50 லட்சத்துக்கும் அதிகமானோரின் உழைப்பு மிகவும் பாதுகாப்பற்ற முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமுடக்க காலத்தில் இந்திய கிராமப்புறங்களில் கட்டப்பட்ட உலா்ந்த கழிவறைகளால் மனிதக் கழிவுகளை மனிதா்களே அகற்றும் இழிநிலை ஏற்பட்டது.
  • மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் நம் சமுதாயத்தின் சாபக்கேட்டினை ஒழிப்பதற்கான முயற்சி கடந்த முப்பது ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக 1994-ஆம் ஆண்டில் உருவான ‘சபாய் கா்மாச்சரி அந்தோலன்’ (துப்புரவுப் பணியாளா்கள் கிளா்ச்சி) இயக்கம் அரசு ஊழியா்கள், வழக்குரைஞா்கள், கல்வியாளா்களிடையே மிகப்பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியது.
  • 2021 ஏப்ரல் மாதம் 30-க்குள் அனைத்து மலம் மக்கல் தொட்டிகளையும் (செப்டிக் டேங்க்) கழிவுநீா் தொட்டிகள நீா் தொட்டிகளையும் சுத்தம் செய்யும் பணிகளில் முழுமையாக இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு 2020-ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் 243 நகரங்களில் ‘சஃபைமித்ரா சுரக்ஷா சேலஞ்ச்’ திட்டம் தொடங்கப்பட்டது.
  • 2008-ஆம் ஆண்டில் 7,70,338 ஆக இருந்த மனிதக் கழிவுகளை அகற்றும் துப்புரவுப் பணியாளா்களின் எண்ணிக்கை 2018-ஆம் ஆண்டு 42,303 ஆகக் குறைந்துள்ளதாக இந்திய அரசின் அதிகாரபூா்வ தரவு ஒன்று கூறுகிறது. ஆனால், பதினான்கு இந்திய மாநிலங்களின் முக்கிய நகரங்களில் சமூக நீதி -அதிகாரமளித்தல் அமைச்சக உத்தரவின் பேரில் தேசிய தூய்மை பணியாளா்கள் நிதி மேம்பாட்டு கழகம் நடத்திய கணக்கெடுப்பு, 2018-ஆம் ஆண்டில் மனிதக் கழிவுகளை அகற்றும் துப்புரவுப் பணியாளா்களின் எண்ணிக்கை 87,913 போ் என தெரிவிக்கிறது.
  • 2011 ஆம் ஆண்டின் சமூக-பொருளாதார ஜாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பு, 1,82,505 போ் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியினை முதன்மைத் தொழிலாகக் கொண்டிருந்தனா் எனக் கூறுகிறது. அதே சமயம் 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டில் உலா் கழிப்பறைகளின் எண்ணிக்கை சுமாா் 26 லட்சம் என மதிப்பிடப்பட்டிருப்பதால், துப்புரவுப் பணியாளா்களின் எண்ணிக்கை சுமார் 12 லட்சம் என்று சபாய் கா்மாச்சரி அந்தோலன் மதிப்பிட்டுள்ளது.
  • 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு, சபாய் கா்மாச்சரி அந்தோலன் தரவு, தேசிய தூய்மை பணியாளா்கள் நிதி மேம்பாட்டு கழக தரவு ஆகியவற்றை ஆராயும்போது அரசாங்கத்தின் முயற்சிகள் தீவிரமாக இருந்ததால், மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் பழைமையான நடைமுறை ஏழு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 89 சதவிகிதம் குறைந்துள்ளது.
  • ஆனாலும், மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் பணி இந்திய நகரங்களில் மட்டுமே உள்ள பிரச்னை போன்று இந்திய நகா்ப்புற தரவுகளை மட்டுமே கொண்டு ஒட்டுமொத்த இந்தியாவிலும் மாற்றம் நிகழ்ந்துவிட்டது என்று கூறுவது ஏற்றுக்கொள்ள இயலாதது என்று நிபுணா்கள் கூறுகின்றனா்.
  • மனிதக் கழிவு அகற்றும் தொழிலாளா் தடை – மறுவாழ்வு சட்டத்தில் கடுமையான விதிகள் இருந்தபோதிலும் 2014-ஆம் ஆண்டில் இவ்வகைக் குற்றங்களுக்கு இந்தியாவின் எந்த ஒரு காவல் நிலையத்திலும் முதல் தகவல் அறிக்கை ஒன்றுகூடப் பதிவாகவில்லை என்கிறது சமூக நீதி – அதிகாரமளித்தலுக்கான 57-ஆவது நிலைக்குழு அறிக்கை. தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையின்படி 2015-ஆம் ஆண்டில் மனிதக் கழிவு அகற்றும் தொழிலாளா் தடைசட்டத்தின் கீழ் இரண்டு வழக்குகள் மட்டும் கா்நாடக மாநிலத்தில் பதிவாகியுள்ளது. அதில் ஒன்று மட்டுமே விசாரணைக்கு வந்தது.
  • துப்புரவுப் பணியாளா் தேசிய ஆணைய தரவின்படி 2013 – 2017 ஆண்டுகளுக்கிடையில் 608 துப்புரவுப் பணியாளா்கள் கழிவுநீா் தொட்டிகளை சுத்தம் செய்யும்போது இறந்துள்ளனா். துப்புரவுப் பணியாளா் தேசிய ஆணையம் 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலத்தில் 123 துப்புரவுப் பணியாளா்களின் இறப்பினை பதிவு செய்துள்ளது.
  • இதே காலகட்டத்தில் தில்லி பிராந்தியத்தில் மட்டும் 429 துப்புரவுப் பணியாளா்கள் இறந்துள்ளதாக சபாய் கா்மாச்சரி அந்தோலன் அறிக்கை தெரிவித்துள்ளது. எனவே தேசிய ஆணைய தரவின் நம்பகத்தன்மை குறித்து சட்ட வல்லுநா்கள் பலா் கவலை எழுப்பியுள்ளனா்.
  • 2007-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட துப்புரவுத் தொழிலாளா்களின் விடுதலை – மறுவாழ்வுக்கான சுயவேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட 42,203 தூய்மைப் பணியாளா்களில் 27,268 பேருக்கு மட்டுமே ஒருமுறை வழங்கப்படும் நாற்பதாயிரம் ரூபாய் பண உதவி வழங்கப்பட்டதாக 2017-18-ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை கூறுகிறது.
  • இந்தியாவில் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் 2014-ஆண்டு முதல், கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சுமார் 1,000 லட்சம் கழிப்பறைகளில், 13 சதவீதவீம் இரட்டைக் குழி கழிப்பறைகளாகவும், 38 சதவீதவீம் கழிவு நீா் ப்போக்குக் குழிகளுடன் (சோக் பிட்) கூடிய மலம் மக்கல் தொட்டி கொண்ட கழிப்பறைகளாகவும், 20 சதவீதவீம் ஒற்றைக் குழி கழிப்பறைகளாகவும் இருந்தன என்று 2017-18 ஆண்டுக்கான தேசிய வருடாந்திர ஊரக சுகாதார மதிப்பீட்பீ டு ஆய்வு கூறுகிறது.
  • இரட்டைக் குழி கழிப்பறை கள் தவிர மற்ற இரண்டு வகைக் கழிப்பறைகளையும் சுத்தம் செய்ய ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மனித உழைப்போ இயந்திரமோ தேவைப்படுகிறது. கழிவு நீா் ப்போக்குக் குழி, ஒற்றைக் குழி வகையிலான கழிப்பறைகள் இந்தியாவில் ஏராளமாக இருப்பதாலும், கிராமபுறங்களில் இயந்திர பயன்பாடு குறைவாக இருப்பதாலும் பெரும்பாலான கழிப்பறைகளை மனிதா்களே சுத்தம் செய்வது வெளிப்படையாக தெரிகிறது.
  • இந்திய கழிவறைப் பயன்பாட்டிலும் கட்டமைப்பிலும் பெரும் மாற்றம் ஏற்படுத்திய தூய்மை இந்தியா இயக்கம், தூய்மைப் பணியாளா் வாழ்விலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்; ஏற்படுத்தும் என நம்புவோம். நன்றி: தினமணி (06 – 03 – 2022)

© வேதபிரகாஷ்

17-06-2023

கிறிஸ்தவ-இஸ்லாம் மதங்களுக்கு மாறிய SCக்களுக்கு, தொடர்ந்து SC அந்தஸ்து கொடுக்க முடியுமா? சாத்தியக்கூறை விசாரிக்க கமிஷன் அமைக்கப் பட்டுள்ளது!

ஒக்ரோபர் 10, 2022

கிறிஸ்தவஇஸ்லாம் மதங்களுக்கு மாறிய SCக்களுக்கு, தொடர்ந்து SC அந்தஸ்து கொடுக்க முடியுமா? சாத்தியக்கூறை விசாரிக்க கமிஷன் அமைக்கப் பட்டுள்ளது!

பட்டியலின மக்கள் பட்டியலில் 1950 இல் தலித் இந்துக்களைச் சேர்க்க முதல் உத்தரவு வந்தது. ஜாதி அமைப்பு மற்றும் தீண்டாமை என்ற நடைமுறை இந்து சமூகத்தில் மட்டுமே இருந்ததாக அரசாங்கம் அறிவித்து மற்ற மதத்தவர்களை சேர்க்க முடியாது என்ற நிலை உள்ளது.  இதனை சூசை வெர்சஸ் யூனியன் ஆப் இந்தியா (Soosai vs UOI 1985 SC) உச்சநீதி மன்ற தீர்ப்பிலும் உறுதி செய்யப் பட்டது. பின்னர் சீக்கியம் மற்றும் பௌத்தம் இந்து மதத்தின் கிளையாக கருதப்பட்டு அவர்களை மட்டும் பட்டியலின மக்கள் பட்டியலில் 1956 மற்றும் 1990 ஆம் ஆண்டுகள் முறையே இணைத்தனர்[1]. தவிர இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தின் பிரிவு 25ன் படி, இந்து என்றால் ஜைன, பௌத்த மற்றும் சீக்கியரும் அடங்குவர் என்றுள்ளது. அதனால், இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மற்றும் கிருத்துவ மதத்திற்கு மாறியவர்களுக்கு இந்த அந்தஸ்து வழங்கப்படாது என்று அரசு அறிவித்தது[2]. ஆனால், கிருத்துவர்கள் இதனை அரசியலாக்கி போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில், கிருத்துவத்தில் நிறவெறி, நிறவெறித்துவம், பாகுபாடு முதலியவை இறையியல் ரீதியில் இருக்கின்றன என்பதனை பலநாடுகளில் பல நேரங்களில் மெய்ப்பிக்கப் பட்டுள்ளன[3]. இதனால், “விடுதலை இறையியல்” (Liberation Theology) என்ற போர்வையிலும் தங்களது நிறவெறித்துவத்தை மறைத்து ஆர்பாட்டம் செய்வதும் வழக்கமாக இருக்கிறது.

30-08-2022 உச்சநீதி மன்ற தீர்ப்பும், கமிஷன் அமைப்பும்: கடந்த ஆகஸ்ட் 30 2022 அன்று உச்ச நீதிமன்றத்தில் ஜாதி இடஒதுக்கீட்டை மதத்திலிருந்து பிரிக்கக் கோரி தொடரப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்தது[4]. விசாரணையைத் தொடர்ந்து அரசு சார்பில் வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தலித் மதம் மாறிய இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடஒதுக்கீட்டை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை மூன்று வாரங்களுக்குள் சமர்பிப்பதாக உறுதியளித்தார்[5]. பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் போன்றவை இதை எதிர்த்து வந்தாலும், சில பிஜேபி எம்பிக்கள் ஆதரவு தெரிவித்து வந்தார்கள்-வருகிறார்கள். அரசியல் நிர்ணய சாசனப் பிரிவைத் திருத்த மூன்றில் இரண்டு ஆதரவு தேவை என்ற நிலையில், ஆதரவாக ஓட்டளிக்கவும் தயார் என்று கையெத்தும் போட்டதாக முன்னர் செய்தி வந்துள்ளது. இப்பொழுது, உச்சநீதி மன்ற விசாரணையினால், அதன் பேரில் கமிஷன்  அமைக்கப்பட்டுள்ளது[6].

அரசியல் சாசனம் (பட்டியல் சாதிகள்) ஆணை– 1950 தெளிவாக உள்ளது: நமது நாட்டின் அரசியல் சாசனம் (பட்டியல் சாதிகள்) ஆணை- 1950, இந்து, சீக்கிய, பவுத்த மதத்தை தவிர்த்து பிற மதங்களை சேர்ந்த ஒருவரும் எஸ்.சி. வகுப்பினராக கருதப்பட முடியாது என்று கூறுகிறது[7]. அதாவது ஜாதீய அமைப்பு, ஜாதி இல்லை என்று கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் பிரகடனப் படுத்திக் கொண்டு வருகின்றன. சமத்துவம், சகோரத்துவம், எல்லோரும் சமம் என்றெல்லாம் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். பிறகு அவர்களுக்கு இடவொதிக்கீடு ஏன் என்று தெரியவில்லை. ஆகவே, ஜாதியின் பெயரில் அவர்கள் இடவொதிக்கீடு கேட்க முடியாது. அப்படி கேட்க வேண்டும் என்றால், தங்கள் மதங்களிலும் அத்தகைய ஜாதிகள், ஜாதிப் பிரிவுகள் உண்டு என்று வெளிப்ப்டையாக அறிவித்துக் கொள்ள வேண்டும். ஆனால் அவ்வாறு செய்வது இல்லை. இருப்பினும், இஸ்லாமிய, கிறிஸ்தவ குழுக்கள் தங்கள் மதங்களுக்கு மாறியுள்ள தலித்துகளுக்கு எஸ்.சி. வகுப்பினருக்குரிய அந்தஸ்து, சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்று கோரி வருகின்றன[8]. ஆனால் இந்த கோரிக்கையை பா.ஜ.க. எதிர்க்கிறது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது[9], என்று முன்பே குறிப்பிடப் பட்டது.

சட்டப் பிரிவு 341-இன் கீழ் கமிஷன் அமைக்கப் பட்டுள்ளது: இந்த நிலையில், இதுதொடர்பாக ஆராய்வதற்கு சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் மத்திய அரசு ஒரு கமிஷனை அமைத்துள்ளது. மூன்று உறுப்பினர்களை கொண்ட இந்த கமிஷனில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி டாக்டர் ரவீந்தர் குமார் ஜெயின், பல்கலைக்கழக மானியக்குழு பேராசிரியர் சுஷ்மா யாதவ் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். இதற்கான கெசட் அறிவிப்பை மத்திய சமூக நீதி மற்றும் அதிகார வழங்கல் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தக் குழு, அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 341-இன் கீழ் அவ்வப்போது வெளியிடப்படும் குடியரசுத் தலைவா் உத்தரவுகளின் அடிப்படையில் இந்த விவகாரத்தை ஆய்வு செய்யும்[10]. மேலும், தலித் சமூகத்தினா் வேறு மதங்களுக்கு மாறிய பிறகு அவா்களின் பழக்கவழக்கங்கள், மரபுகள், அவா்களின் சமூக பாகுபாடு மற்றும் தாழ்வு நிலை ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கணக்கில் எடுத்துக்கொள்வதோடு, இவா்களுக்கு மீண்டும் எஸ்.சி. அந்தஸ்து அளிக்கப்படும்போது தற்போதைய எஸ்.சி. பிரிவினருக்கு ஏற்படும் தாக்கங்ளையும் ஆய்வு செய்து, அதுதொடா்பான அறிக்கையை அடுத்த 2 ஆண்டுகளுக்குள் மத்திய அரசிடம் சமா்ப்பிக்கும் என்றும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது[11].

மூன்று அங்கத்தினர் கமிஷன் ஆராய வேண்டிய அம்சங்கள்: கமிஷனின் பார்வையில், கீழ்கண்ட அம்சங்கள் ஆராயவேண்டியுள்ளது:

* வரலாற்று ரீதியாக தாங்கள் எஸ்.சி. வகுப்பை சேர்ந்தவர்கள், அதே நேரத்தில் அரசியல் சாசனத்தின் 341-வது ஷரத்தில் குறிப்பிடப்படாத பிற மதங்களுக்கு மாறி உள்ளோம் என்று கூறுகிறவர்களுக்கு எஸ்.சி. அந்தஸ்து வழங்கப்படுவது குறித்து இந்த கமிஷன் ஆராயும்.

* தலித்துகள் மதம் மாறிய பிறகு, அவர்களது பழக்கவழக்கங்கள், மரபுகள், சமூக பாகுபாடு, தாழ்வு நிலை ஆகியவற்றால் ஏற்படும் மாற்றங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளும். இது குறித்த முடிவினால் ஏற்படுகிற தாக்கங்கள் குறித்தும் இந்த கமிஷன் ஆராயும்.

* இந்த விவகாரத்துடன் பொருத்தமானதாக கருதும் மற்ற தொடர்புடைய கேள்விகளையும் மத்திய அரசுடன் கலந்தாலோசித்து அதன் ஒப்புதலுடன் கமிஷன் ஆராயும்.

மதம் மாறிய SCக்களுக்கு எப்படி SC அந்தஸ்து கொடுக்க முடியும்?: இந்த கமிஷன் டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும். இந்த கமிஷனின் தலைவர் பொறுப்பேற்றது முதல் 2 ஆண்டுகளுக்குள் தனது அறிக்கையை மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் மத்திய அரசின் ‘கெசட்’ (அரசிதழ்) அறிவிப்பில் இடம்பெற்றுள்ளன. கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமிய மதத்துக்கு மாறிய தலித் மக்களுக்கு எஸ்.சி. வகுப்பினருக்கான அந்தஸ்து வழங்கினால், அவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் வழங்கப்படுகிற இட ஒதுக்கீடு சலுகை, இவர்களுக்கும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி நாட்டில் சில குறிப்பிட்ட இனத்தை ‘பட்டியலின மக்கள்’ என்று வகைப்படுத்தி அவ்வப்போது உத்தரவுகளை பிறப்பிக்கலாம். SC களாகக் கருதப்படும் ‘இனம், பழங்குடியினர், சாதிகள் அல்லது பிற குழுக்களை’ அடையாளம் காண ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. கிறிஸ்தவர் மற்றும் முஸ்லிம்கள் இதற்கு எவ்வாறு எதிர்வினை உரிவார்கள் என்று கவனிக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

10-10-2022


[1] தமிழ்.இந்து, மதம் மாறியவர்களுக்கு எஸ்.சி. அந்தஸ்து? – மத்திய அரசு அமைத்துள்ள ஆணையத்தின் முழு விவரம், செய்திப்பிரிவு, Published : 08 Oct 2022 06:02 AM, Last Updated : 08 Oct 2022 06:02 AM.

[2] https://www.hindutamil.in/news/india/880117-sc-status-for-converts-full-details-of-the-commission-set-up-by-the-central-government.html

[3] Apartheid Enquiry Commission கூட இதனை இவரங்களுடன் எடுத்துக் காட்டியுள்ளது.

[4] தமிழ்.நியூஸ்.18, மதம் மாறிய தலித்துகளுக்கு எஸ்சி அந்தஸ்து? ஆராய குழுமத்திய அரசு அறிவிப்பு !, NEWS18 TAMIL, Published by:Ilakkiya GP, First published: October 08, 2022, 09:20 IST , LAST UPDATED : OCTOBER 08, 2022, 09:23 IST 

[5] https://tamil.news18.com/news/explainers/centre-sets-up-panel-on-sc-status-for-dalit-converts-815568.html

[6] தமிழ்.ஒன்.இந்தியா, மதம் மாறிய தலித்துகளுக்கு சலுகைகளா?.. ஆராய்ந்து முடிவெடுக்க கமிஷன்.. மத்திய அரசு நடவடிக்கை, By Mani Singh S Published: Saturday, October 8, 2022, 14:42 [IST]

[7] https://tamil.oneindia.com/news/delhi/commission-to-examine-and-decide-on-concessions-to-dalit-converts-central-govt-479570.html

[8]தினத்தந்தி, மதம் மாறிய தலித்துகளுக்கு சலுகைகள் வழங்குவது குறித்து ஆய்வு செய்ய கமிஷன்மத்திய அரசு அமைத்தது, அக்டோபர் 8, 6:11 am.

[9]  https://www.dailythanthi.com/News/India/commission-set-up-by-central-government-to-examine-the-provision-of-concessions-to-dalit-converts-809695

[10] தினமணி, மதம் மாறிய தலித் சமூகத்தினருக்கு எஸ்.சி. அந்தஸ்து: ஆய்வு செய்ய மத்திய அரசு குழு அமைப்பு, By DIN  |   Published On : 08th October 2022 12:28 AM  |   Last Updated : 08th October 2022 12:28 AM

[11] https://www.dinamani.com/india/2022/oct/08/sc-for-the-converted-dalit-community-3928696.html

திருமுறை சூத்திரர், நாவலர்-அடிகள் சத்-சூத்திரர், ஈவேராவின் சூத்திரர்: சைவ-வைணவ மோதலா, ஆத்திக-நாத்திக மோதலா?

ஜூன் 20, 2019

திருமுறை சூத்திரர், நாவலர்அடிகள் சத்சூத்திரர், ஈவேராவின் சூத்திரர்: சைவவைணவ மோதலா, ஆத்திகநாத்திக மோதலா?

Arumuga Navalar, M M Adigal

ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் (1822-1879) ஆதரித்த சத்சூத்திரர்: தமிழகத்தில் சில வேளாளார்கள், வைசியர் என்ற நிலையை கோரியபோது, ஆறுமுக நாவலர், வேளாளார்கள் தம்மை “சத்-சூத்திரர்” என்று கூறிக் கொள்ளலாம் என்று ஆலோசனை கொடுத்தார். சிலர் அதை விமர்சித்தும் உள்ளனர். 16ம் நூற்றாண்டில், கோவிலைக் கட்ட விதிமுறைகளை விளக்கும்,  ஆகமங்களில், இத்தகைய விவரங்கள் காணப்படுகின்றன, அவற்றை சில சைவ பூஜாரிகள் எழுதி வத்தனர்  என்றார். கோவில்களும், பூஜாரிகளும் வெள்ளாளர்களை நம்பி இருந்ததால், அவர்களை உயர்த்தி “சத்-சூத்திரர்கள்” ஆக்கினர். பூஜாரிகளும், நாளடைவில் தம்மை பிராமணர் என்று கூறிக் கொண்டனர். இதனால், பிறகு வந்த மறைமலை அடிகள் அத்தகைய, வெள்ளாளர்களின் ஜாதித்துவத்தை எதிர்த்தார். ஆனால், ஆரிய பிராமணர்களை விட தங்கள் ஜாதி சிறந்தது என்று சொல்லிக்கொண்டார். அதனால், சூத்திரர்களாக கூறிக் கொள்ள விரும்பவில்லை. ஆனால், ஈவேராவோ, சைவத்தையும் எதிர்த்தார், தன்னை சூத்திரன் என்று சொல்லிக் கொண்டார்.  இவ்விதமாக, மறைமலை அடிகளுக்கும், ஈவேராவுக்கும் பிரச்சினைகள் ஏற்பட்டன. அடிகள் என்ன முயன்றும், சைவத்தை சீர்திருத்த முடியவில்லை, ஏனெனில், ஒர் நிலையில் நாத்திகம், இன்னொரு நிலையில் விஞ்ஞானம், இறுதியில் தத்துவம் என்றிருந்து குழப்பி / குழம்பி விட்டது தான் மிச்சம்.

Saiva, Jaina sculptures

வேளாளர்களுக்கு, ஜைனர்கள் தாம் எதிரிகளாக இருந்திருக்க வேண்டும்:  ஜைனர்கள் உழவு, வேளாண்மை, விவசாயம் முதலியவற்றை எதிர்ப்பவர்கள். கண்ணுக்குப் புலனாகாத உயிரினங்களையும் பாதிக்கக் கூடாது என்றதால், முகத்தை மறைந்து [கண்கள் தவிர], அவர்கள் நடந்து செல்லும் பாதையைக் கூட, மயில்பீலி துடப்பத்தால் பெருக்கி, சுத்தம் செய்து கொண்டே நடப்பர். திகம்பரரோ, ஆடையே ஹிம்சையின் அடையாளம் என்று அதையும் துறந்து, நிர்வாணமாகவே நடந்தனர். எந்த உயிருக்கும் தீங்கு நேரக்கூடாது என்றதால், தீவிர ஜைனர்கள், ஒருநிலையில், எதையும் உண்ணாமல், வடக்கிருந்து இறக்கவும் துணிந்தனர், இன்றும் சிலர் துணிகின்றனர். ஒருவேளை, ஜைனர்களில் அத்தகைய முறைகளைப் பின்பற்றுவோர், உயர்ந்தவர்களாகக் கருதப் பட்டிருக்கலாம். ஆனால், எல்லா ஜைனர்களும் அவ்வாறாக இல்லை, நன்றாக உண்டு, வளர்ந்திருக்கிறார்கள். க்ஷத்திரியர்களாக-வைசியர்களாக சிறந்திருக்கிறார்கள்.

Jaina picture

ஜைனர்கள் 100% அஹிம்சாவாதிகள் என்றால், க்ஷத்திரவைசியர்களாக இருந்திருக்க முடியாது: ஆகவே, இந்த மூன்று வகுப்பினரும் – ஜைன முனிகள், அரசர்கள் மற்றும் வியாபாரிகள் – சிறந்து, செல்வர்களாக இருந்த நிலையில், ஊழியம் செய்ய மக்கள் தேவைப் பட்டிருக்கிறார்கள். அவர்கள் இல்லாமல், வைசியர்களுக்கு வேண்டிய பொருட்கள் உற்பத்தி ஆகியிருக்காது, வியாபாரம் செய்து பொருள் ஈட்டியிருக்க முடியாது. க்ஷத்திரியர்களுக்கும் வீரர்கள் கிடைத்திருக்க மாட்டார்கள். மேலும், சரவணபெலகோலாவில் மற்ற இடங்களில் ஜைன சிற்பங்கள், கோவில்கள் செதுக்க-கட்ட தேவைப்பட்ட சிற்பிகள், வேலையாட்கள் முதலியோர் ஜைனர்களாக இல்லை என்றதால், அவர்கள் இந்துக்கள் தான். ஆக, ஜைனர்கள் தாம், அத்தகையப் பிரிவினரை தங்களது மூன்று பிரிவிகளுக்கு கீழாக வைத்து பாவித்திருக்க வேண்டும். தம்மிடம் இருந்த பணபலத்தினால், வேலையை வாங்கியிருக்கிறார்கள்.

Periyar-adigal-changed hue

ஜைனர்கள் விசயத்தில் அடிகளுக்கும், ஈவேரா தொண்டர்களுக்கும் ஏற்பட்ட சச்சரவு: 22—07-1928 அன்று மறைமலை அடிகள் ராமசாமி நாயக்கர் மற்றும் சுயமையாதை இயக்கத்தினரின் நடவடிக்கைகளைக் கண்டித்துப் பேசினார். அப்பொழுது, என். தண்டபாணி பிள்ளை மற்றும் ஜே.எஸ். கண்ணப்பன், திருஞான சம்பந்தரால்,   ஜைனர்கள் கழுவேற்றப் பட்டதைக் குறிப்பிட்டு கேள்விகள் கேட்டார்கள்.  அடிகள், அவையெல்லாம் கட்டுக் கதை என்றும், உண்மை இல்லை என்றும் விளக்கினார். ஆனால், அவர்கள் ஏற்காமல், மேல்-மேல் கேள்வி கொண்டு கலாட்டா செய்தனர். இதனால், அவையில் சச்சரவு ஏற்பட்டது. ஆனால், குடி-அரசில் மாறுபட்ட விவரங்களை வெளியிட்டனர். அடிகள் அரங்கத்தில் உள்ளவர்களைத் தூண்டி கொலை செய்ய முயன்றார் என்ற ரீதியில் எழுதப்பட்டது. அடிகள் தரப்பில், “திராவிட பொய்மை நடந்த வண்ணம் உரைத்தல்” என்று சிறு சுற்றும் தயாரிக்கப் பட்டு விநியோகிக்கப் பட்டது[1]. அடிகள் 1950ல் தான் காலமானார். ஆனால், அதுவரை அவர் ஈவேராவின் பிள்ளையார் உடைப்பு முதலியவற்றை எதிர்த்தாரா இல்லையா என்று தெரியவில்லை.

Vellalar, Kaundar etc

சூத்திரர்வேளாளர் பற்றி 19-20 நூற்றாண்டுகளின் நிலை: களப்பிரர்-ஜைன காலத்தில், தமிழகத்தில் நடந்த கொடுமைகள், திரிபுகள், சமூக சீரழிவுகள் முதலியவற்றை முறைப்படி ஆராய்ச்சி செய்யாமலும், ஆவணப் படுத்தாமலும் தமிழக ஆராய்ச்சியாளர்கள் உள்ளனர். சங்க இலக்கியங்களில் காணப்படும் “வேளிர்,” தொல்காப்பிய “வேளாண்” முதலியவற்றை வைத்துக் கொண்டு, இணைப்பதற்கு சில ஆராய்ச்சியாளர் முயன்றுள்ளனர்[2]. வைணவர்களுக்கும், ஜைனர்களுக்கும் ஏன் மோதல்கள் ஏற்படவில்லை என்று தெரியவில்லை. சைவர்களுக்கும் ஜைனர்களுக்கும் மோதல் ஏற்பட காரணம் என்ன? இதை மதரீதியில் நோக்க முடியுமா? ஆதாரங்கள் என்ன? களப்பிரர் காலத்திலுருந்து தொடர்வதும் திகைப்படைய செய்கிறது.  விவசாயம், உழவு விசயத்தில் சைவ வேளாளர்களுக்கும், ஜைன அஹிம்சா வாதிகளுக்கும் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. தொல்காப்பிய வேளாண் மாந்தர் சூத்திரர் ஆக முடியாது, அதேபோல, மறைமலை அடிகளின் சூத்திரரும், இவர்களும் ஒன்றா என்றும் சொல்லமுடியாது. வேளாளர், வியாபாரம் செய்வதற்காக, தம்மிலிருந்தே, வைசியரை உண்டாக்கினர் என்று மறைமலை அடிகள் சொல்வது ஏற்புடையாதாக இல்லை[3]. அவர் சூத்திரர்களையும் வேளாளர் கூட்டத்தில் இணைக்கிறார்[4]. தமிழகத்தில் “வர்ணாஷ்ரமத்தைத்” தோற்றுவித்து அதை நடைமுறைப் படுத்தியவர்கள் தமிழர்களான வேளாளர்களே என்று முடிவுக்கு வருகிறார் அவர். கீழ்கண்ட, 18 பிரிவுகளையும் வேளாளர் என்றதில் சேர்த்தார்.

1.       கைக்கோளர்,

2.       தச்சர்,

3.       கொல்லர்,

4.       கம்மாளர்,

5.       தட்டார்,

6.       கன்னார்,

7.       செக்கார்,

8.      மருத்துவர்,

9.       குயவர்,

10.   வண்ணார்,

11.    துன்னர்,

12.    ஓவியர்,

13.    பாணர்,

14.    கூத்தர்,

15.    நாவிதர்,

16.    சங்கறுப்பார்,

17.    பாகர்,

18.   பறையர்

Vel, velir, velan, velala, vellala etc

வேளாளர் உயர்ஜாதியாக்க முனைந்த திட்டத்தில் என்ன உள்ளது?: ஈவேராவோ, வேளாளரை சூத்திரர் என்றே குறிப்பிடுகிறார்[5]. வேளாளர்-ஜைன மோதல்கள் தான், சைவ-ஜைன மோதல்களாக மாறின. இதை மறைக்க வேளாளர்கள் பிராமணர்களை விட உயர்ந்தவர் என்று காட்டிக் கொள்ள உருவான திட்டம் தான், பிராமண எதிர்ப்பு. இதை ஆரம்பித்தவர்கள் பெரும்பாலோர் உயர்ஜாதிக்காரர்கள் – முதலியார், செட்டியார், பிள்ளை, ரெட்டி, என்று தான் இருந்தனர். பதவிகள் பெற்று செல்வம் சம்பாதித்து, மேம்பட்டனர். ஆனால், கீழ்ஜாதியினரோ இன்றும் அப்படியே அல்லது இன்னும் கீழே போக நேர்ந்தது. பிராமணர் இப்போராட்டங்களில் இல்லை மற்றும் ஒதுங்கி விட்ட நிலையில், தாக்குதல்களுக்கு ஆளானவர்கள், கீழ் ஜாதியினர் தான். சில குடிகள் தங்களை சூத்திரர் என்று சொல்லிக் கொண்டு பலன்களைப் பெற முயன்றன. சிலர் மறுத்து தாங்கள் உயர்ந்தவர் என்று காட்டிக் கொள்ள முயன்றனர். சில ஜாதியினர் பிற்பட்டவர் BC, எஸ்.சி SC, எஸ்.டி ST, என்றிருந்தாலும், பிற்பட்டவர்களில் சிலர் மிகவும் பிற்பட்டவர் என்று சொல்லிக் கொண்டு, இடவொதிக்கீடு கேட்டுப் போராடினர், எம்.பி.சி – MBC, என்ற தகுதியைப் பெற்றனர். ஆனால் எஸ்.சி SC, எஸ்.டி ST சமூகத்தவர், மிகவும் போன்ற MSC, MST – நிலையைக் கேட்கவில்லை.

© வேதபிரகாஷ்

16-06-2019

thiruvika- between adigal and evr

[1] ஆனால், இப்பொழுது, இவ்விவரங்கள், ஆவணங்கள் முதலியவை மறைக்கப் படுகின்றன. பொது மக்கள் உண்மை அறிய வேண்டும் என்றால், இவ்விவரங்கள் தெரியப்படுத்த வேண்டும்.

[2]  எஸ். ராமச்சந்திரன், http://www.sishri.org/velaalar1.html, http://www.sishri.org/velaalar2.html ஏழு கட்டுரைகளையும் இங்கு வரிசையாக வாசிக்கலாம்.

[3]  மலர்மன்னன்,  திராவிட இயக்கம்: புனைவும், உண்மையும், கிழக்குப் பதிப்பகம், சென்னை,

[4] V. Ravi Vaithees, Religion, Caste and Nation in South India, Maraimalai Adigal, the Neo-Saivite Movement and Tamil Nationalism, 1876-1950, Oxford University Press, 2015.

[5] பசு.கவுதமன், .வெ.ராமசாமி என்கிற நான், பாரதி புத்தகலயம், 2009.

சூத்ர (शूद्र), சூத்ரா (शूद्राः), சூத்திரர்: சமஸ்கிருதம்-தமிழ் தெரியாமல் வளர்த்த பொய்மை திரிபு விளக்கம்!

ஜூன் 19, 2019

சூத்ர (शूद्र), சூத்ரா (शूद्राः), சூத்திரர்: சமஸ்கிருதம்தமிழ் தெரியாமல் வளர்த்த பொய்மை திரிபு விளக்கம்!

Sudra, Shudra, Cuttiran - explanation- Vedaprakash

சூத்ர [शूद्र] வார்த்தை, அலசல்: சமஸ்கிருதத்தில், சூத்ர [शूद्र] சொல் உள்ளது உண்மை.

சூத்ர [शूद्र] என்பது தமிழில், சூத்ரா என்று குறிப்பிட்டு, பிறகு அது சூத்திரர் ஆகியது. இது மிகத்தவறானதாகும். ஆனால், தொடர்கிறது.

தமிழில் “த” மற்றும் “ச” எழுத்திற்கு, மற்ற மொழிகளைப் போன்று நான்கு வர்க்கங்கள் இல்லை. அதனால், त, थ, द, ध  என்றவற்றை “த” என்றே குறிப்பிடப் படுகிறது. “ச”வும் च, छ, ज, झ என்றில்லாமல், ஒரே மாதிரி உபயோகப் படுகிறது. தமிழ் மற்றும் சமஸ்கிருத உயிர்-மெய் எழுத்துகள் கொடுக்கப் பட்டுள்ளன, அவற்றில் க, ச, ட, த, ப எழுத்துகளுக்கு வர்க்கங்கள் இல்லாததைக் கவனிக்கலாம்

உயிர்மெய் சமஸ்கிருதம்
க, ங, ச, ஞ, ட,

ண, த, ந, ப, ம, ய

ர, ல, வ,

ழ, ள, ற, ன

क, ख, ग, घ, ङ

च, छ, ज, झ, ञ

ट, ठ, ड, ढ, ण

त, थ, द, ध, न

प, फ, ब, भ, म

य, र, ल, व,

श, ष, स, ह

இதனால் தான், இப்பிரச்சினை உருவானதா அல்லது வேண்டுமென்றே, அத்தகைய விளக்கம் கொடுக்கப் பட்டதா என்று ஆராயலாம்.

தமிழ்-தமிழ் என்று கூப்பாடு போட்டு, உணர்ச்சி தூண்டி பேசி, கத்தி, பிரச்சாரம் செய்தாலும், தமிழை ஒழுங்காக, தொல்காப்பியர் போதித்த இலக்கணத்தையும் மறந்து தான், இவ்வாறு எழுதி-பேசி, “சுத்திரர்களை” உண்டாக்கியுள்ளார்கள் போலும்.

Sudra, Shudra, Cuttiran - explanation- Vedaprakash-2

 சூத்ர [शूद्र] = சூத்ரா =“சூத்திரர்” என்றாகி, அது இழிசொல்லாக கருதப் பட்டது. போதா குறைக்கு அந்த பிழையானதற்கு திரிபு வுளக்கம் கொடுக்கப்பட்டது.

சூத்ர [शूद्र] ஒருமை என்றால், பன்மை சூத்ரர் [शूद्राः  [சமஸ்கிருதம்]/ शूद्रों [இந்தி]] என்றுதான் வரவேண்டும். ஆனால், அதை “சூத்திரர்” என்று குறிப்பிட்டதும் மிகத் தவறாகும்.

பிறகு ரிக்வேதத்தில் [10:90] வருகின்ற புருஷஸுக்தம் [पुरुषसूक्तम्] என்ற சுலோகத்தில் வரும் கீழ் கண்ட வரியை வைத்துக் கொண்டு, திரிபுவாதம் தொடங்கியது:

राजन्य: कृत: ब्राह्मणोऽस्य मुखामासीद्वाहू। ऊरू तदस्य यद्वैश्यः पद्भ्यां शूद्रो अजायत॥१३॥

இதே வரி, சுக்ல யஜுர்வேத சம்ஹிதை 30.1-16; அதர்வ வேத சம்ஹித 19.6 முதலியவற்றிலும் காணலாம்.

அவரது முகம் பிராமணன் ஆயிற்று .

கைகள் சத்ரியன் ஆயிற்று .

தொடைகள் வைசியன் ஆயிற்று .

அவரது பாதங்களில் இருந்து சூத்திரன் தோன்றினான்.

13வது வரி, இப்படி இருக்கிறது என்றால், 15வது வரியில், “……பாதங்களில் இருந்து பூமியும், காதில் இருந்து திசைகளும் தோன்றின அவ்வாறே எல்லா உலகங்களும் உருவாக்கப் பட்டன….” என்றுள்ளது [9]

ஆகவே சூத்ர [शूद्र] என்றது கெட்ட வார்த்தை இல்லை, சமஸ்கிருதம் தெரியாமல், தமிழும் அறியாமல், உளறிய பொய்மை-திரிபு விளக்கம் இது.

Purusha Suktam cosmogony appreciated by Ambedkar

சூத்ரரும், பூமியும் ஒன்றா?: பாதங்களில் இருந்து சூத்திரன் தோன்றினான்…“……பாதங்களில் இருந்து பூமியும், காதில் இருந்து திசைகளும் தோன்றின, அதாவது, கால்களிலிருந்து சூத்திரன் மற்றும் பூமியும் தோன்றின என்றால், சூத்திரனும், பூமியும் சகோதரர்கள். மற்ற எல்லோரும், இவர்கள் இல்லாமல் இல்லை என்றாகிறாது. ஆக இதெல்லாம் ஒரு உருவகம் என்றாகிறது. மேலே குறிப்பிட்டபடி, “15வது வரியில், “……பாதங்களில் இருந்து பூமியும், காதில் இருந்து திசைகளும் தோன்றின அவ்வாறே எல்லா உலகங்களும் உருவாக்கப் பட்டன….” என்றுள்ளது” என்பதற்கு ஏற்ப, பூமியுடன், நிலத்துடன், மண்ணுடம் தொடர்பு படுத்தப் பட்டனர்.

Caturvarna, Ambedkar object to 11 and 12

புருஷ ஸுக்தம் முழுமையாகக் கொடுக்கப்படுகிறது: வேடிக்கை என்னவென்றால், படித்தவர்கள் கூட சூத்திரர் என்றதற்கு, ஏதோ ஏற்புடைய விளக்கம் கொடுக்க வேண்டும் என்று பல்வேறு விளக்கம் கொடுக்கிறார்கள். வசதிற்காகவும், ஆராய்ச்சிற்கு உதவியாகவும், “புருஷ சுக்தம்” முழுவதும் – 25 சுலோகங்கள், கீழே கொடுக்கப்படுகிறது:

सहस्रशीर्षा पुरुषः सहस्राक्षः सहस्रपात्। स भूमिं विश्वतो वृत्वात्यतिष्ठद्दशांगुलमं॥१

पुरुष एवेदम् यत् भूतम् यच्च भव्यम्। उतामृतत्वस्येशानो यदह्नेना तिरोहति॥२

एतावानस्य महिमातो ज्यायांश्च पूरुषः। पादोऽस्य विश्वा भूतानि त्रिपादस्यामृतं दिवि॥३॥

त्रिपादूर्द्ध्वः उदैत् पुरुषः पादोस्येहा पुनः। ततो विष्वं व्यक्रामच्छाशनान शने अभि॥४

तस्मात् विराडजायत विराजो अधिपूरुषः। सहातो अत्यरिच्यत पश्चात् भूमिमथॊ पुरः॥५

यत् पुरुषेण् हविषा देवा यज्ञमतन्वत। वसन्तो अस्या सीदाज्यम् ग्रीष्म इद्ध्म शरधवि॥६

सप्तास्यासन्परिधयस्त्रिः सप्त समिधः कृताः। देवा यद्यज्ञं तन्वाना अबध्नन्पुरुषं पशुं॥७॥

तं यज्ञं बर्हिषि प्रौक्षन्पुरुषं जातमग्रतः। तेन देवा अयजन्त साध्या ऋषयश्च ये॥८॥

तस्माद्यज्ञात्सर्वहुतः संभृतं पृषदाज्यं। पशून्तांश्चक्रे वायव्यानारण्यान्ग्राम्याश्च ये॥९॥

तस्माद्यज्ञात्सर्वहुत ऋचः सामानि जज्ञिरे। छंदांसि जज्ञिरे तस्माद्यजुस्तस्मादजायत॥१०॥

तस्मादश्वा अजायंत ये के चोभयादतः। गावो ह जज्ञिरे तस्मात्तस्माज्जाता अजावयः॥११॥

यत्पुरुषं व्यदधुः कतिधा व्यकल्पयन्। मुखं किमस्य कौ बाहू का उरू पादा उच्येते॥१२॥

राजन्य: कृत: ब्राह्मणोऽस्य मुखामासीद्वाहू। ऊरू तदस्य यद्वैश्यः पद्भ्यां शूद्रो अजायत॥१३॥

चंद्रमा मनसो जातश्चक्षोः सूर्यो अजायत। मुखादिंद्रश्चाग्निश्च प्राणाद्वायुरजायत॥१४॥

नाभ्या आसीदंतरिक्षं शीर्ष्णो द्यौः समवर्तत। पद्भ्यां भूमिर्दिशः श्रोत्रात्तथा लोकाँ अकल्पयन्॥१५॥

वेदाहमेतम् पुरुषम् महान्तम् आदित्यवर्णम् तमसस्तु पारे। सर्वाणि रूपाणि विजित्य धीरो नामानि कृत्वा भिवदन्यदास्ते॥१६

धाता पुरस्ताद्यमुदाजहार शक्रफ्प्रविद्वान् प्रतिशश्चतस्र। तमेवम् विद्वान् अमृत इह भवति नान्यफ्पन्धा अयनाय विद्यते॥१७

यज्ञेन यज्ञमयजंत देवास्तानि धर्माणि प्रथमान्यासन्। ते ह नाकं महिमानः सचंत यत्र पूर्वे साध्याः संति देवा:॥१८॥

இதன் பொருளை பல இணைதளங்கள் தமிழில் வெளியிட்டுள்ளதால், மறுபடியும் அது இங்கு கொடுக்கப்படவில்லை. இது, அண்ட-பேரண்ட, உயிரினங்கள் தோன்றுவது பற்றி உருவகமாக விவரிக்கப் படுகின்ற கவிதையாலும். அதனால், உண்மையிலேயே, அவ்வாறுதான் நிகழ்ந்தன என்பதாகாது. இங்கு நான்கு பிரிவினர் உருவானது, அவற்றின் பெயர், குறிப்பாக “சூத்ர” என்பது தான் முக்கியம். ஏனெனில், அதை வைத்துதான், சர்ச்சைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

Purusha Suktam cosmogony appreciated by Ambedkar object to 11 and 12

நான்கு வகை அரசு உத்தியோகங்கள்: அம்பேத்கர், இவ்வரிகளைக் குறிப்பிட்டு, அதிலுள்ள பேரண்டவியல் [Cosomogony] வர்ணனையைப் பாராட்டுகிறார். ஆனால், வரிகள் 11 மற்றும் 12 மீது சந்தேகம் கொள்கிறார், ஏனெனில், அதிதான், மனிதர்களைப் பிரிக்கும் மனப்பாங்கு நுழைந்து, சூத்ரரை கீழ் வைக்கிறது என்கிறார். இதற்கு ஆபதஸ்ம்ப[1], வசிஸ்ட[2] தர்ம சூத்திர வரிகளை ஆதாரம் காட்டுகிறார். பிறகு மனுவும் அதையே குறிப்பிட்டுள்ளதை எடுத்துக் காட்டுகிறார்[3]. ஆகவே, வேதகாலத்தில் இருந்த சமத்துவம் எப்படி பிரிக்கப் படுகிறது என்று நோக்கும் போது, அதனை, பின்வந்தவர்கள் செய்திருக்க வேண்டும் என்பது புலனாகிறது. அங்குதான், ஜைன-பௌத்த இடைசெருகல்கள் வேலை செய்தனவா என்று ஆராய வேண்டியுள்ளது. இன்று கூட, அரசு வேலைகளில் Class – I, II, II, IV என்றெல்லாம் உள்ளது. அதனால், அப்பிரிவுகள் எல்லாம் அடக்கி ஆள்வது, ஆதிக்கச் சாதித்துவம், ….கொண்டது என்றெல்லாம் விளக்கம் கொடுக்க முடியாது. படித்து பரீட்சையில் அதிக மார்க்குகள் வாங்கினால், Class – IV கூட Class – I ஆகலாம், அதில் எந்த பிரச்சினையும் இல்லை, ஆனால், Class – IV நேரிடையாக, Class – I  அறைக்குச் சென்று, நான் இந்த ஜாதி, அதனால், நான் இங்கே உட்காருவேன் என்று அடம் பிடிக்க முடியாது, உரிமை கோர முடியாது. இதனை அம்பேத்கரும் எதிர்க்கவில்லை. இங்கு “புருஷன்” என்று ஒரு பேரண்டவியல் [Cosomogony] ரீதியில் உருவகப்படுத்தப் பட்டுள்ளது. அதிலிருந்து, அண்டங்கள், உயிரினங்கள் முதலியவை தோன்றியதை விளக்குகிறது.

© வேதபிரகாஷ்

14-06-2019

[1] Prasna, PatalaI, Khanda I, Sutra. 4.5.

[2] Prasna, PatalaI, Khanda I, Sutra. 6.

[3]  Manu Smruti, Chapter.X, verse.4

சூத்ர, சூத்திரன் – வார்த்தைகளுக்கு அகராதிகள், மனு ஸ்ம்ருதி  கொடுக்கும் அர்த்தம், விளக்கம் முதலியன!

ஜூன் 18, 2019

சூத்ர, சூத்திரன்வார்த்தைகளுக்கு அகராதிகள், மனு ஸ்ம்ருதி  கொடுக்கும் அர்த்தம், விளக்கம் முதலியன!

Sudra as per Nikandus

அகராதிகளில்சூத்திரன்என்ற சொல்லுக்கு கொடுக்கும் விளக்கம்: எல்லாவிதமான அகராதிகளில் கொடுத்துள்ள பொருல், விளக்கம் முதலியவற்றாஇத் தொகுத்து, கீழே கொடுக்கப் படுகிறது[1]:

  1. சதுர அகராதி, தொகை அகராதி முதலியவற்றிலும், “சூத்திரன்” என்ற வார்த்தை இல்லை.
  2. இசையினி தமிழ் அகராதியில், சூத்திரன் என்றால், நான்காவது ஜாதி, பிரம்மாவின் கால்களில் இருந்து உண்டானான் என்றுள்ளது[2].
  3. சூத்திரன் என்றால், முப்புரி நூல் அணிந்தவன் என்றும் சொல்கிறது[3].
  4. தச்சன், நான்காம் வருணத்தோன் என்றெல்லா குறிப்பிட்டு, பிறகு புஷ்பராகம், வைடூரியம் என்றெல்லாம் பொருள் சேர்க்கிறது[4].
  5. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி, இவை எல்லாவற்றையும் சேர்த்து குறிப்பிட்டுள்ளது.
  6. ஜே.பி.ஃபேப்ரிசியஸ் அகராதியில், “ (fem. சூத்திரச்சி, pl. சூத்தி ரர், com. சூத்திராள்) a Sudra, a member of the 4th caste. சூத்திரசாதி, the Sudra caste, ” என்றெல்லாம் உள்ளது.
  7. மிரான் வின்ஸ்லோ அகராதியில், “cūttirṉ The topaz, புஷ்பராகம். 2. The cat’s eye, a precious stone, வைடூரியம். (M. Dic.) cūttirṉ s. (plu. சூத்திரர்.) The last of the fourfold divisions of castes, the servile tribe, said to have sprung from the feet of Brahma. See சாதி W. p. 854. SUDRA. சூத்திரநாகம், s. One of the four high castes of the நாகம், snakes. See நாகம். சூத்திரநாபி, s. An antidote for the poison of வச்சநாபி. See நாபி. சூத்திரச்சி–சூத்திரிச்சி, s. A female of the Sudra caste, நான்காம்வருணப்பெண். (c.) சூத்திரர்தொழில்-சூத்திரவிருத்தி, s. The duties of the servile castes. See தொழில். சூத்திரன், s. (plu.) People of the fourth caste, சூத்திரர். Colloq.)”

இதிலிருந்து, தொகுத்தவர்கள், இப்பாடத்தைப் பற்றி, முழுமையாக அறிந்திருக்கவில்லை என்றும், அவரவர் இம்முயற்சியை மேற்கோண்ட போது, என்ன அறிந்தார்களோ [மற்றவர் மூலம்] அவற்றையெல்லாம் தொகுத்து எழுதி, பதிப்பித்துள்ளார்கள் என்று தெரிகிறது. “சூத்திரன்” சொல்லுக்கு கொடுக்கப்பட்டுள்ள பொருளை கவனித்தால், உயர்ந்தநிஐயிலிருந்து, தாழ்ந்த நிலைவரை குறிப்பிட்டுள்ளது தெரிகிறது. மேலும், “முப்புரிநூல் அணிந்தவன்” என்பது விசித்திரமாக உள்ளது. அதாவது, ஒரு காலம் வரை சூத்திரர் பூணூல் பொட்டுக் கொண்டிருந்தனர் என்று தெரிகிறது. ஒருவேளை ஆங்கிலேயர் ஆண்ட காலத்திலும் அப்பழக்கம் இருந்திருக்கிறது. பிறகு, ஏனில்லை என்ற கேள்வி எழுகின்றது. எப்படியாகிலும், அச்சொல் இழிவாகக் கருதப் படவில்லை.

EVR and Sudra

சூத்ரர் – Sudra / Shudra ஜாதியா Caste or அல்லது குலமா tribe?: ஆங்கிலேயர் தமது எழுத்துகளில் Sudra caste சூத்திரர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர் கேஸ்ட் [Caste] அதாவது ஜாதி அல்லது குடி [tribe] என்ற வார்த்தைகள் குழப்பத்துடன் அல்லது வேண்டுமென்றே குழப்பவே அவ்வாறு உபயோகித்தனர் என்று தெரிகிறது. சூத்திரர்கள் பூசாரிகளாகவும் இருந்திருக்கின்றனர்[5]. எவ்வாறு பல குலத்தவர் தாங்கள் சூத்திரர்கள் அது சூத்திரர் அல்ல என்று கூறிக்கொண்டார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது[6]. மேலும் சுத்தமான தூய்மையான சூத்திரர்கள் [Pure Shudras] என்று சொல்லிக்கொள்ளும் குழுக்களும் இருந்தது தெரிகிறது[7]. இது உள்ள குறிப்புகளின் படி பார்த்தால் இந்நிலை 19 ஆம் நூற்றாண்டில் வரை இருந்திருப்பது தெரிகிறது.

EVR and Sudra, paraiyan

சூத்ரன், சூத்திரன் ஆக்கி, கெட்டப்பெயர் கொண்டு மற்றும் மோசமான பொருள் கொடுப்பதேன்?: திராவிட, திராவிட சித்தாந்த, திராவிடத்துவ, நாத்திக, இந்துவிரோத சிந்தனையாளர்கள், இவ்வார்த்தையை “சூத்திரன்” என்று குறிப்பிட்டு, இழிந்தவன், இழிபிறப்பாளன், வேசி மகன், தேவிடியா பையன், ….என்ற வரைக்கும் விளக்கம் கொடுத்துள்ளார்கள். இதற்கு ஈவேரா தான் காரணம்[8]. இன்றும் எழுதி-பேசி வருகிறார்கள். ஆனால், அவர்களில் யாரும் மூல சமஸ்கிருத நூல்களைப் படிக்கவில்லை, ஒழுங்காகப் படிக்கவில்லை, அல்லது அடுத்தவர் சொன்னதை வைத்து, தவறு-தவறாக எழுதி வைத்துள்ளார்கள் என்று தெரிகிறது. மனுஸ்மிருதி, புருஷ ஸுக்தம் போன்றவற்றையும் குழப்பியுள்ளனர், சுலோக எண்களையும் ஏதோ, தமது கற்பனையில் தோன்றியது போல எண்களைக் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக “சூத்ர” என்ற சொல்லையே குறிப்பிடாமல், “சூத்திரன்” என்றே எழுதி-பேசி தவற்றையே, உண்மை போல வைத்துக் கொண்டு, பிரச்சார செய்துள்ளது போலவும் தெரிகிறது. இனி அவ்வாறு ஏன் நடந்தது என ஆராயலாம்.

Manu Amruti 8.415

வேசிமகன், விபச்சாரி மகன் என்பதற்கான ஆதாரமும் இல்லை: பொதுவாக இந்த திராவிடத்துவவாதிகள், மனுஸ்மிருதியில் உள்ளது என்று சொல்லி, பொய்யைத்தான் பரப்பி வருகிறார்கள். இதோ அந்த சுலோகம்[9]:

ध्वजाहृतो भक्तदासो गृहजः क्रीतदत्त्रिमौ ।

पैत्रिको दण्डदासश्च सप्तैते दासयोनयः ॥ ४१५ ॥

 

dhvajāhto bhaktadāso ghaja krītadattrimau |

paitriko daṇḍadāsaśca saptaite dāsayonaya || 415 ||

There are seven kinds of slaves—

(1) captured under a banner, / he who is made a captive under a standard

(2) slave on food, /  he who serves for his daily food

(3) born in the house,

(4) bought,

(5) presented,

(6) hereditary, he who is inherited from ancestors, and

(7) slave by punishment./ he who is enslaved by way of punishment.

இதை, இப்படி, மொழிபெயர்த்துள்ளனர்:

சூத்திரன் என்றால் ஏழுவகைப்படும்.

  1. போரில் புறங்காட்டி ஓடியவன்,
  2. போரில் கைதியாகப் பிடிக்கப்பட்டவன்,
  3. பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியம் செய்பவன்,
  4. விபச்சாரி மகன்,
  5. விலைக்கு வாங்கப்பட்டவன்,
  6. ஒருவனால் கொடுக்கப்பட்டவன்,
  7. தலைமுறைதலைமுறையாக ஊழியம் செய்பவன்.

ஆதாரம்: மனுசாஸ்திரம், அத்தியாயம் 8, ஸ்லோகம் 415

இங்கு சூத்ர என்ற வார்த்தை இல்லை, விபச்சாரி என்று பொருள்பட வரும் எந்த வார்த்தையும் இல்லை. ஆகவே, பொய் சொல்லியே காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது.

வேதபிரகாஷ்

13-06-2019

Who were Sudras, Ambedkar

[1] தமிழ்ப்புலவர், https://tamilpulavar.org/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D

[2] [ cūttirṉ, ] s. (plu. சூத்திரர்.) The last of the fourfold divisions of castes, the servile tribe, said to have sprung from the feet of Brahma. See சாதி W. p. 854. SUDRA.

[3] cūttiraṉ, n. < sūtra. One whowears the triple cord or the sacred thread; முப்புரிநூ லணிந்தோன். (யாழ். அக.)

[4] cūttiraṉ, n. < sūtra. Carpenter; தச்சன். (அக. நி.), cūttiraṉ, n. < šūdra. 1.Person of the fourth or lowest of the originalcastes of the Hindus; நான்காம் வருணத்தோன்.(பிங்.) 2. Topaz; புஷ்பராகம். (W.) 3. Cat’seye; வைடூரியம். (W.)

[5] Francis Buchanan, A Journey from Madras through the countries of Mysore, Canara and Malabar, Vol.II, p.330.

[6] Francis Buchanan, A Journey from Madras through the countries of Mysore, Canara and Malabar, Vol.II, p.154, 172, 303, 414, 482…..

[7] Francis Buchanan, A Journey from Madras through the countries of Mysore, Canara and Malabar, Vol.II, p.404. Vol.III, p.22, 32, 184,

[8] “வைப்பாட்டிக் கதை” ‘-குடிஅரசு’, துணைத் தலையங்கம், 05.09.1926.

http://viduthalai.periyar.org.in/20091220/news28.html

[9] Gangadhara Jha, Manu Smriti, பூலர் போன்றோரும் இதே பொருளைத்தான் கொடுத்துள்ளார்கள்.