கழிவுநீர்த்தொட்டிக்கு ஒரு மனிதரை இறக்கி அவர் விஷவாயுவில் இறக்கச் செய்வது வேறு எங்கும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசைக் கடுமையாக கண்டித்துள்ளது.
எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தண்டனை சட்டத்தை சீராய்வு செய்வது குறித்து மனுவில் உச்ச நீதிமன்றம் கருத்துக்களை கூறியுள்ளது.
சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில் சாதி பாகுபாடி இன்னும் நாட்டில் தொடர்கிறது. இன்னும் கழிவுநீர்த் தொட்டி சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்குத் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட சாதியினரை மட்டுமே சமூகம் பயன்படுத்துகிறது.
மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள்தான் ஆனால், அவர்கள் அனைவருக்கும் சமமான உரிமை , வசதிகள் அளிக்கப்படுகிறதா? கழிவுநீர்த் தொட்டிக்குள் இறங்கும் தொழிலாளர்களுக்கு முறையாக பாதுகாப்பு கவசமான முகமூடி, ஆக்ஸிஜன் சிலிண்டர், ஏன் வழங்கப்படுவதில்லை? கழிவுநீர் தொட்டிக்குள் மனிதர்களை அனுப்பி விஷவாயுவில் இறக்கச் செய்யும் அவலம் உலகில் எந்த நாட்டிலும் இல்லை.
ஒவ்வொரு மாதமும் 4 முதல் 5 பேர் கழிவுநீர்த் தொட்டியில் சிக்கி இறக்கிறார்கள். கழிவு நீர்த் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்யும் மனிதருக்குப் போதுமான பாதுகாப்பு கவசங்கள் இல்லாமல் பணியைச் செய்ய வற்புறுத்துவது மனித தன்மையற்றது.
இதன் மூலம் நாட்டில் தீண்டாமை மறைமுகமாக இருக்கிறது என்று நம்புகிறோம். இந்திய அரசியலமைப்பு தீண்டாமையை ஒழித்துவிட்டது.நான் உங்களிடம் கேட்கிறேன். கழிவு நீர்த் தொட்டியை சுத்தம் செய்யும் தொழிலாளியுடன் கை குலுக்குவீர்களா? அதற்கு இல்லை என்று தானே பதில். இந்த வழியில்தான் நாம் சென்று கொண்டிருக்கிறோம்.
சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளைக் கடந்த பின்பும் இன்னும் இது போன்ற கொடுமை நடந்து வருகிறது” என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மே 2023 – தமிழகஅரசுஅரிக்கை–ஆணை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதி களில் உள்ள தனியார் கழிவுநீர் லாரி இயக்குபவர்கள் கழிவுநீர்த் தொட்டியின் உள்ளே மனிதர்களை இறங்க அனுமதிக்க கூடாது என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. சென்னைக் குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் தலை மையில் கழிவுநீர் மேலாண்மை ஒழுங்கு முறை மற்றும் செயல் பாட்டு வழிகாட்டு தல்கள் குறித்து தனியார் கழிவுநீர் லாரி இயக்கும் உரிமையாளர், ஓட்டுநர் மற்றும் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு முகாம் சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகக் கூட்ட ரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மனிதக் கழிவு களை அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களது மறு வாழ்வு சட்டம் 2013, பிரிவு 7இன் படி, எந்தவொரு நபரும், ஒப்பந்த தாரரும் அல்லது எந்தவொரு நிறுவனமும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த வொரு நபரையும் அபாயகரமான முறையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு ஈடுபடுத்தவோ அல்லது பணியமர்த்தவோ கூடாது.
விதிகளைமீறுவோர்மீதுதண்டனை: அவ்வாறு ஈடுபடுத்தினால், அந்த நபரின் மீது மேற்படி சட்டத்தின் பிரிவு 9இன்படி முதன் முறையாக மீறுபவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது 2 லட்சம் ரூபாய் அபரா தம் அல்லது இரண்டும் தண்டனை யாக விதிக்கப்படும். இரண்டாவது முறையாக மீறுபவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது 5 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என தெரிவிக்கப் பட்டது. சென்னை மாநகராட்சிக்குட் பட்ட பகுதிகளில் சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் உரிமம் பெற்ற லாரி உரிமையாளர்கள் மட்டுமே கழிவுநீர்த் தொட்டியிலி ருந்து கழிவுநீரை அகற்ற அனுமதிக் கப்படுவார்கள். மேலும், இதுநாள் வரையிலும் உரிமம் பெறாத லாரி உரிமையாளர்கள் உடனடியாக உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டும். சென்னை குடிநீர் வாரியத்தின் அங்கீகரிக்கப்பட்ட கழிவுநீர் சுத்தி கரிப்பு நிலையங்கள் மற்றும் கழிவு நீர் உந்து நிலையங்களில் மட்டுமே கழிவுநீர் வெளியேற்றம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டது. மேலும், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதி களில் சென்னை குடிநீர் வாரியத் தின் மூலம் உரிமம் பெறாத லாரிகளை ஆய்வு செய்ய சிறப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
இழப்பீட்டுதொகைஎவ்வாறுகொடுக்கப்படவேண்டும்?: அதன்படி, சட்ட விரோதமாக கழிவு நீர்த் தொட்டியிலிருந்து கழிவு நீரை அகற்றுபவர்களை முதன்முறை விதிமீறலுக்கு ரூ.25,000- அபராத மும், இரண்டாம் முறை விதிமீறலுக்கு ரூ.50,000 அபராதமும், தொடந்து விதிமீறும் லாரிகளை உரிய சட்ட விதிகளின் கீழ் பறிமுதல் செய்யப் பட்டு குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தேவையான அனைத்து பாது காப்பு உபகரணங்களும் / சாதனங்களும் கழிவுநீர் லாரிகளில் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பணியாளர்களை கழிவுநீர்த் தொட்டி சுத்தம் செய் யும் பணியில் ஈடுபடுத்தி. அப் பணியாளர் இறக்க நேரிட்டால், இழப்பீட்டுத் தொகை ரூ.15 லட்சத்தினை வீட்டு உரிமையாளர் மற்றும் லாரி உரிமையாளர் ஆகிய இருவராலும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட வேண்டும். பகுதிப் பொறியாளர்கள், சட்ட விரோதமாக கழிவு நீரகற்று வதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப் பாக, விரிவாக்கப் பட்ட பகுதி களில் வீடுவீடாக துண்டு பிரசுரம் மூலமும், ஒலிபெருக்கி பொருத்திய ஆட்டோக்கள் மூலமும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
பல ஆண்டுகளாக நம் நாட்டின் தூய்மைப் பணிகளுக்கு கழிப்பறைகள் முதல் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையங்கள் வரை அனைத்து நிலைகளிலும் 50 லட்சத்துக்கும் அதிகமானோரின் உழைப்பு மிகவும் பாதுகாப்பற்ற முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமுடக்க காலத்தில் இந்திய கிராமப்புறங்களில் கட்டப்பட்ட உலா்ந்த கழிவறைகளால் மனிதக் கழிவுகளை மனிதா்களே அகற்றும் இழிநிலை ஏற்பட்டது.
மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் நம் சமுதாயத்தின் சாபக்கேட்டினை ஒழிப்பதற்கான முயற்சி கடந்த முப்பது ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக 1994-ஆம் ஆண்டில் உருவான ‘சபாய் கா்மாச்சரி அந்தோலன்’ (துப்புரவுப் பணியாளா்கள் கிளா்ச்சி) இயக்கம் அரசு ஊழியா்கள், வழக்குரைஞா்கள், கல்வியாளா்களிடையே மிகப்பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியது.
2021 ஏப்ரல் மாதம் 30-க்குள் அனைத்து மலம் மக்கல் தொட்டிகளையும் (செப்டிக் டேங்க்) கழிவுநீா் தொட்டிகள நீா் தொட்டிகளையும் சுத்தம் செய்யும் பணிகளில் முழுமையாக இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு 2020-ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் 243 நகரங்களில் ‘சஃபைமித்ரா சுரக்ஷா சேலஞ்ச்’ திட்டம் தொடங்கப்பட்டது.
2008-ஆம் ஆண்டில் 7,70,338 ஆக இருந்த மனிதக் கழிவுகளை அகற்றும் துப்புரவுப் பணியாளா்களின் எண்ணிக்கை 2018-ஆம் ஆண்டு 42,303 ஆகக் குறைந்துள்ளதாக இந்திய அரசின் அதிகாரபூா்வ தரவு ஒன்று கூறுகிறது. ஆனால், பதினான்கு இந்திய மாநிலங்களின் முக்கிய நகரங்களில் சமூக நீதி -அதிகாரமளித்தல் அமைச்சக உத்தரவின் பேரில் தேசிய தூய்மை பணியாளா்கள் நிதி மேம்பாட்டு கழகம் நடத்திய கணக்கெடுப்பு, 2018-ஆம் ஆண்டில் மனிதக் கழிவுகளை அகற்றும் துப்புரவுப் பணியாளா்களின் எண்ணிக்கை 87,913 போ் என தெரிவிக்கிறது.
2011 ஆம் ஆண்டின் சமூக-பொருளாதார ஜாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பு, 1,82,505 போ் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியினை முதன்மைத் தொழிலாகக் கொண்டிருந்தனா் எனக் கூறுகிறது. அதே சமயம் 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டில் உலா் கழிப்பறைகளின் எண்ணிக்கை சுமாா் 26 லட்சம் என மதிப்பிடப்பட்டிருப்பதால், துப்புரவுப் பணியாளா்களின் எண்ணிக்கை சுமார் 12 லட்சம் என்று சபாய் கா்மாச்சரி அந்தோலன் மதிப்பிட்டுள்ளது.
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு, சபாய் கா்மாச்சரி அந்தோலன் தரவு, தேசிய தூய்மை பணியாளா்கள் நிதி மேம்பாட்டு கழக தரவு ஆகியவற்றை ஆராயும்போது அரசாங்கத்தின் முயற்சிகள் தீவிரமாக இருந்ததால், மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் பழைமையான நடைமுறை ஏழு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 89 சதவிகிதம் குறைந்துள்ளது.
ஆனாலும், மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் பணி இந்திய நகரங்களில் மட்டுமே உள்ள பிரச்னை போன்று இந்திய நகா்ப்புற தரவுகளை மட்டுமே கொண்டு ஒட்டுமொத்த இந்தியாவிலும் மாற்றம் நிகழ்ந்துவிட்டது என்று கூறுவது ஏற்றுக்கொள்ள இயலாதது என்று நிபுணா்கள் கூறுகின்றனா்.
மனிதக் கழிவு அகற்றும் தொழிலாளா் தடை – மறுவாழ்வு சட்டத்தில் கடுமையான விதிகள் இருந்தபோதிலும் 2014-ஆம் ஆண்டில் இவ்வகைக் குற்றங்களுக்கு இந்தியாவின் எந்த ஒரு காவல் நிலையத்திலும் முதல் தகவல் அறிக்கை ஒன்றுகூடப் பதிவாகவில்லை என்கிறது சமூக நீதி – அதிகாரமளித்தலுக்கான 57-ஆவது நிலைக்குழு அறிக்கை. தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையின்படி 2015-ஆம் ஆண்டில் மனிதக் கழிவு அகற்றும் தொழிலாளா் தடைசட்டத்தின் கீழ் இரண்டு வழக்குகள் மட்டும் கா்நாடக மாநிலத்தில் பதிவாகியுள்ளது. அதில் ஒன்று மட்டுமே விசாரணைக்கு வந்தது.
துப்புரவுப் பணியாளா் தேசிய ஆணைய தரவின்படி 2013 – 2017 ஆண்டுகளுக்கிடையில் 608 துப்புரவுப் பணியாளா்கள் கழிவுநீா் தொட்டிகளை சுத்தம் செய்யும்போது இறந்துள்ளனா். துப்புரவுப் பணியாளா் தேசிய ஆணையம் 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலத்தில் 123 துப்புரவுப் பணியாளா்களின் இறப்பினை பதிவு செய்துள்ளது.
இதே காலகட்டத்தில் தில்லி பிராந்தியத்தில் மட்டும் 429 துப்புரவுப் பணியாளா்கள் இறந்துள்ளதாக சபாய் கா்மாச்சரி அந்தோலன் அறிக்கை தெரிவித்துள்ளது. எனவே தேசிய ஆணைய தரவின் நம்பகத்தன்மை குறித்து சட்ட வல்லுநா்கள் பலா் கவலை எழுப்பியுள்ளனா்.
2007-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட துப்புரவுத் தொழிலாளா்களின் விடுதலை – மறுவாழ்வுக்கான சுயவேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட 42,203 தூய்மைப் பணியாளா்களில் 27,268 பேருக்கு மட்டுமே ஒருமுறை வழங்கப்படும் நாற்பதாயிரம் ரூபாய் பண உதவி வழங்கப்பட்டதாக 2017-18-ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை கூறுகிறது.
இந்தியாவில் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் 2014-ஆண்டு முதல், கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சுமார் 1,000 லட்சம் கழிப்பறைகளில், 13 சதவீதவீம் இரட்டைக் குழி கழிப்பறைகளாகவும், 38 சதவீதவீம் கழிவு நீா் ப்போக்குக் குழிகளுடன் (சோக் பிட்) கூடிய மலம் மக்கல் தொட்டி கொண்ட கழிப்பறைகளாகவும், 20 சதவீதவீம் ஒற்றைக் குழி கழிப்பறைகளாகவும் இருந்தன என்று 2017-18 ஆண்டுக்கான தேசிய வருடாந்திர ஊரக சுகாதார மதிப்பீட்பீ டு ஆய்வு கூறுகிறது.
இரட்டைக் குழி கழிப்பறை கள் தவிர மற்ற இரண்டு வகைக் கழிப்பறைகளையும் சுத்தம் செய்ய ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மனித உழைப்போ இயந்திரமோ தேவைப்படுகிறது. கழிவு நீா் ப்போக்குக் குழி, ஒற்றைக் குழி வகையிலான கழிப்பறைகள் இந்தியாவில் ஏராளமாக இருப்பதாலும், கிராமபுறங்களில் இயந்திர பயன்பாடு குறைவாக இருப்பதாலும் பெரும்பாலான கழிப்பறைகளை மனிதா்களே சுத்தம் செய்வது வெளிப்படையாக தெரிகிறது.
இந்திய கழிவறைப் பயன்பாட்டிலும் கட்டமைப்பிலும் பெரும் மாற்றம் ஏற்படுத்திய தூய்மை இந்தியா இயக்கம், தூய்மைப் பணியாளா் வாழ்விலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்; ஏற்படுத்தும் என நம்புவோம். நன்றி: தினமணி (06 – 03 – 2022)
திராவிடநாடுஎதற்காகமனிதமலத்தைஅள்ளஊக்குவிக்கிறது – நீதிமன்ற தீர்ப்புகள் விடிவுகாலத்தை எட்டச் செய்கிறதா? (4)
2008 முதல் 2023 வரைபிரச்சினைதொடர்வது: பல ஆண்டுகளாக இப்பிரச்சினை தமிழகத்தில் இருந்து வருவது, நீதிமன்றங்களில் வழக்குகள் இழுத்தடிப்பது, செப்டிக் டேங்கில் வேலை செய்யக் கூடாது என்றாலும் பணியாளர்களை அமர்த்துவது, போன்றவை தொடர்ந்தன. ஆகஸ்ட் 2008ல், திருமதி சௌத்ரி என்ற தேசிய சபாயி கர்மச்சாரிகளுக்கான கமிஷனின் தலைவர் (Ms. Chowdhary, Chairperson of National Commission for Safai Karamcharis) சென்னைக்கு வந்திருந்தபோது, தமிழ்நாடு, இன்னும் இந்த அவலநிலையை அழிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே என்று வருத்தப்பட்டார்[1]. அப்பொழுது கருணாநிதிக்கு போபம் வந்து, வழக்கம் போல அம்மையால் விவரங்களை அறியாமல் பேசிவிட்டார் என்று, புள்ளிவிவரங்களைக் கொடுத்து மறைக்கப் பார்த்தார்[2]. அதுவும் எடுபடாமல் போகவே, அருந்ததியருக்கு ஒதுக்கீடு என்று ஆரம்பித்தார். ஆனால், அதிலும் பங்கை வெட்டி முஸ்லீம்களுக்கும், கிருத்துவர்களுக்கும் கொடுத்து அவர்களை ஏமாற்றினர். இதன் மூலம், மலம் அள்ளும் பிரச்சினை மறைக்கப்பட்டு விட்டது[3]. இப்பொழுது 14 ஆண்டுகள் ஆன பிறகும் பிரச்சினையும் தீரவில்லை, இறப்புகளும் நிற்கவில்லை. இந்நிலையில் இந்த விசயங்கள் வருகின்றன.
மார்ச்.2023- உச்சநிதிமன்றதீர்ப்பும், தூய்மைசெய்யும்பணியாளருக்கானநலன்களுக்கானஆணை: சஃபாய் கரம்சாரி அந்தோலன் தீர்ப்பில், கையால் சுத்தம் செய்பவர்களின் மறுவாழ்வு, பண உதவி, அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, வீட்டு மனைகள் ஒதுக்கீடு, வாழ்வாதாரத் திறன் பயிற்சி மற்றும் மாதாந்திர உதவித்தொகை, சலுகைக் கடன்கள் உள்ளிட்ட வழிகாட்டுதல்களை நீதிமன்றம் வழங்கியது[4]. மேலும், கழிவுநீர் கால்வாயில் ஏற்படும் இறப்புகளுக்கு குறைந்தபட்ச இழப்பீடு வழங்குவதுடன், தண்டவாளங்களில் கைமுறையாக குப்பைகளை அள்ளுவதை நிறுத்துமாறு ரயில்வேக்கு உத்தரவிட்டது[5]. நாட்டில் துப்புரவு பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவை நீதிமன்றம் பரிசீலித்தது. 2023 பிப்ரவரியில், கையால் தோட்டிகளை வேலைக்கு அமர்த்துவதைத் தடுப்பதற்கும், அவர்களின் மறுவாழ்வுச் சட்டம் 2013 இன் படி, கையால் சுத்தம் செய்பவர்களை வேலைக்கு அமர்த்துவதைத் தடுப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பதிவு செய்யுமாறு இந்திய யூனியனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. 2014 தீர்ப்பில் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் “சஃபை கரம்சாரி அந்தோலன் அண்ட் அதர்ஸ் வெர்சஸ். யூனியன் ஆஃப் இந்தியா அண்ட் அதர்ஸ்” தீர்ப்பில் காணலாம்[6].
அரசுசலுகைகளைஅறிவித்தல்; சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை இணையமைச்சர் திரு. ராம்தாஸ் அதாவலே மக்களவையில் இன்று எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது[7]: கழிவுகளை கையால் அகற்றும் பணியில் ஒருவரும் உயிரிழக்கவில்லை. ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது ஏற்பட்ட விபத்தில் 325 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 276 பேரின் குடும்ப உறுப்பினர்கள் இழப்பீடு பெற்றுள்ளனர். இதன் விவரங்கள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. கடந்த 2003ம் ஆண்டு தாக்கல் செய்த ரிட் மனு மீது, உச்சநீதிமன்றம் கடந்த 2014ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி பிறப்பித்த உத்தரவில், கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் போது இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தீர்ப்பு கூறியது. இது போன்ற விபத்துக்களில் உயிரிழப்பவர்களின் குடும்பங்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் மறுவாழ்வு பலன்களை அளித்து வருகின்றன. மேலும், கழிவுகளை கையால் அகற்றும் துப்புரவு தொழிலாளர்களின் சுய வேலை வாய்ப்பு திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்துகிறது.
துப்புரவுதொழிலாளர்களின்மறுவாழ்வுக்காகஅளிக்கப்படும்உதவிகள்: குடும்பத்தில் உள்ள ஒரு துப்புரவு தொழிலாளிக்கு ரூ.40,000 நிதியுதவி அளிக்கப்படுகிறது. துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களின் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.3,000 உதவி அளிக்கப்படுகிறது. சுகாதாரம் தொடர்பான சுய வேலைவாய்ப்பு திட்டங்களில் கடன் பெறுவோருக்கு ரூ.5 லட்சம் வரை மூலதன மானியம் அளிக்கப்படுகிறது. கழிவுகளை கையால் அகற்றும் துப்புரவு தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு, ஆயுஷ்மான் பாரத், பிரதமரின் ஜன் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீடு அளிக்கப்படுகிறது. கழிவுகளை கையால் அகற்றும் வேலைக்கு தடை மற்றும் மறுவாழ்வு சட்டம்(எம்எஸ்) 2013-ன் கீழ் கையால் மனித கழிவுகளை அகற்றும் வேலை கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி முதல் நாடு முழுவதும் தடை செய்யப்பட்டது . அன்று முதல் யாரும், எந்த நிறுவனமும், கழிவுகளை கையால் அகற்றுவதற்கு துப்புரவு தொழிலாளர்களை ஈடுபடுத்தக் கூடாது. இதை மீறுபவர்களுக்கு எம்எஸ் 2013 சட்டத்தின் 8வது பிரிவுபடி 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ. 1 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்[8]. மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்[9]:
[4] LiveLaw, Prohibition Of Manual Scavenging: Supreme Court Asks Centre To Convene Meeting With Secretaries Of All States, Union Territories, Rintu Mariam Biju, 12 Apr 2023 9:32 PM.
The Court was considering a plea to seeking steps to curb hiring manual scavengers in the country. In February, the Court directed the Union of India to place on record the steps taken by it to prevent the employment of manual scavengers as per the Prohibition of Employment as Manual Scavengers and Their Rehabilitation Act 2013. The Court had asked the Centre to inform the steps taken in pursuance of the guidelines issued in the 2014 judgment “Safai Karamchari Andolan And Others vs. Union of India And Others”.
In Safai Karamchari Andolan judgment, the Court had issued a slew of guidelines for the rehabilitation of manual scavengers, including cash assistance, scholarship for their children, allotment of residential plots, training in livelihood skill and monthly stipends, concessional loans etc. The judgment had also issued prescribed the minimum compensation in cases of sewer deaths and directed the Railways to end manual scavenging on tracks.
முந்தையஅரசாங்கங்களால்உருவாக்கப்பட்டகமிஷன்கள்: நாட்டில் மத சிறுபான்மையினரின் வாழ்க்கை நிலைமைகளை ஆராய பல்வேறு அரசாங்கங்களால் தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன . முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் கீழ் அமைந்த UPA அரசாங்கம் இரண்டு குழுக்களை அமைத்தது. முதலில், மத மற்றும் மொழியியல் சிறுபான்மையினருக்கான ரங்கநாத் மிஸ்ரா தேசிய ஆணையம் அமைக்கப்பட்டது. இரண்டாவது, முன்னாள் தலைமை நீதிபதி ராஜீந்தர் சச்சாரின் கீழ் ஒரு உயர்மட்டக் குழு நியமிக்கப்பட்டது. சச்சார் கமிட்டி நாட்டில் முஸ்லிம்களின் இழிவான சமூக-பொருளாதார நிலையைக் கண்டறிந்து சில சமயங்களில் முஸ்லிம்களின் நிலை தலித்துகளை விட மோசமாக இருப்பதாகக் கூறியது. மறுபுறம், ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அரசு வேலைகளில் முஸ்லிம்களுக்கு 10% இடஒதுக்கீட்டையும், மற்ற சிறுபான்மையினருக்கு 5% இடஒதுக்கீட்டையும் பரிந்துரைத்தது. மிஸ்ரா கமிஷனின் முக்கியமான பரிந்துரைகளில் ஒன்று பட்டியல் சாதியினரிடையே மத பாகுபாடின்மையை உறுதி செய்வது. மேலும் 1950 ஆம் ஆண்டு பட்டியலிடப்பட்ட சாதி மக்கள் பட்டியலில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், ஜெயின்கள் மற்றும் பார்சிகளை விலக்கி வைக்கபட்டத்தை எதிர்த்தது. அதை நீக்க அறிவுறுத்தியது. இருப்பினும், போதுமான தரவு இல்லாததால், பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
2010ல்பாரதியஜனதாகட்சியின்தகவல்தொடர்பாளர்ராம்நாத்கோவிந்த்நிலைப்பாடு: கிறிஸ்தவ மதத்துக்கோ, முஸ்லிம் மதத்துக்கோ மாறிய தலித் மக்களுக்கு தாழ்த்தப்பட்டவர்களுக்குரிய சலுகைகளை அளிக்க பாரதிய ஜனதா கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொடர்பாளர் ராம்நாத் கோவிந்த் இது குறித்து கூறியதாவது[1]: “மதம்மாறியதலித்துகளுக்கு 15 சதவீதஇடஒதுக்கீடுஅளிக்கும்படிரங்கநாத்மிஸ்ராகமிஷன்பரிந்துரைசெய்துள்ளது. இந்துமதத்தில்தான்தீண்டாமைபழக்கம்இருந்துள்ளது. கிறிஸ்தவமதத்திலோமுஸ்லிம்மதத்திலோதீண்டாமைவழக்கம்இல்லை. எனவே, இந்தமதங்களுக்குமாறியதலித்துகளுக்கு, தாழ்த்தப்பட்டர்வர்களுக்குரியசலுகைஅளிக்கக்கூடாது. ஏற்கனவே, இவர்கள்மிகவும்பிற்படுத்தப்பட்டவர்களுக்குரியசலுகைகளைஅனுபவித்துவருகின்றனர். இந்துமதத்தைசேர்ந்ததலித்துகள்அரசுப்பள்ளிகளில்படிக்கின்றனர். மதம்மாறியதலித்குழந்தைகள், கான்வென்ட்டில்படிக்கின்றனர்என்பதைஅனைவரும்அறிவர் . அம்பேத்கர், நேரு, சர்தார்படேல்போன்றவர்கள்மதம்மாறியதலித்துகளுக்கானஇடஒதுக்கீட்டைஏற்கவில்லை.மதம்மாறியவர்களுக்கு, தாழ்த்தப்பட்டவர்களுக்குரியசலுகைஅளிக்கப்பட்டால்மேலும்மதமாற்றம்நடப்பதுஅதிகரிக்கும். இதுஆரோக்கியமானபோக்கல்ல. ரங்கநாத்மிஸ்ராகமிஷன்அனைவராலும்ஏற்றுக்கொள்ளப்பட்டதல்ல. எனவே, இந்தகமிஷன்அளித்தஅறிக்கையைஅமல்படுத்தக்கூடாது.அதேசமயம், புத்தஅல்லதுசீக்கியமதத்தில்உள்ளதலித்என்கிறபோதுஅவர்கள்அடிப்படைவேறானது. சலுகைதொடரவேண்டும்,” இவ்வாறு ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்[2].
2021ல்மத்தியசட்டத்துறைஅமைச்சர்ரவிசங்கர்பிரசாத்சலுகைமுடியாதுஎன்றுஎடுத்துக்காட்டியது: கிறிஸ்துவம் அல்லது இஸ்லாமுக்கு மதம் மாறிய பட்டியலினத்தவர்கள் இட ஒதுக்கீடு சலுகைகளை கோர முடியாது என பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதிலளித்துள்ளார்[3]. மாநிலங்களவையில் பாஜக உறுப்பினர் ஜி.வி.எல். நரசிம்ம ராவ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இதனை தெரிவித்தார்[4]. இது தொடர்பாக ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் இஸ்லாம் அல்லது கிறிஸ்துவ மதத்திற்கு மாறினால் அவர்களால் இட ஒதுக்கீடு சலுகைகளை கோர முடியாது. அவ்வாறு மதம் மாறிய பட்டியலினத்தவர்கள் பாராளுமன்ற அல்லது சட்டமன்றத் தேர்தலில் பட்டியல் சாதியினருக்கு (எஸ்சி) ஒதுக்கப்பட்ட தொகுதிகளிலிருந்து (reserved constituencies) இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் போட்டியிட முடியாது எனவும் கூறினார். அதே நேரத்தில் இந்து, சீக்கிய அல்லது பெளத்த மதத்திற்கு மாறிய பட்டியலினத்தவர்கள் இட ஒதுக்கீடு பலன்களை கோரவும், பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் இருந்து தேர்தலை சந்திக்க தகுதி பெற்றவர்களாகவும் உள்ளனர் எனவும் தெரிவித்தார்.
அரசியலமைப்புசட்டப்பிரிவின்படிமுடியாது; அரசியலமைப்பின் பாரா 3 (பட்டியல் சாதிகள்) உத்தரவு, இந்து, சீக்கிய அல்லது பெளத்த மதத்திலிருந்து வேறுபட்ட ஒரு மதத்தை சார்ந்த எந்தவொரு நபரும் பட்டியல் சாதியைச் சேர்ந்தவராக கருதப்படமாட்டாது என்பதை குறிப்பதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். ரவிசங்கர் பிரசாத் தனது பதிலில், பட்டியலினத்தவர்கள் இஸ்லாம், கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்வோருக்கும், இந்து மதத்தை ஏற்றுக்கொள்வோருடன் தெளிவான வேறுபாடு இருப்பதை தெளிவுபடுத்தினார். 2015 ஆம் ஆண்டில், உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பில், “ஒரு நபர் இந்துவாக இருந்து கிறிஸ்தவராக மாறியவுடன், இந்து மதத்தின் காரணமாக எழும் சமூக மற்றும் பொருளாதார குறைபாடுகள் நின்றுவிடுகின்றன, எனவே அவருக்கு இனி பாதுகாப்பு அளிக்க வேண்டிய அவசியமில்லை, இதன் காரணமாக அவர் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் அல்ல என்று கருதப்படுகிறார்.” என கூறியுள்ளது.
தமக்குள்ஜாதிஇல்லைஎன்றுதம்பட்டம்அடித்துக்கொண்டுஇடவொதிக்கீடுகேட்கும்முரண்பாடு: இங்கு கூட இடவொதிக்கீடு மதரீதியில் அல்லது ஜாதி ரீதியில் கொடுக்கப் படவேண்டுமா, கூடாதா என்ற பிரச்சினை உள்ளது. செக்யூலரிஸ நாட்டில், மத ரீதியில் யாருக்கும் இடவொதிக்கீடு கொடுப்பதில்லை. ஆகவே, முஸ்லிம்கள்-கிறிஸ்தவர்கள் என்று இடவொதிக்கீடு கேட்பதும், கொடுப்பதும் அட்டப் படி இயலாது. பிறகு பொருளாதார ரீதியில் கொடுக்கப் பட வேண்டும் என்றாலும், அது மற்ற எல்லா மதத்தினருக்கும் பொறுந்தும். ஆனால், அவ்வாறும் இடவொதிக்கீடு கொடுக்கப்படுவதில்லை. எனவே, இவ்விசயத்தில், அவர்களது இரட்டை வேடங்களே அவர்களுக்கு எதிராக இருக்கின்றன மற்றும் அவர்களது போலித் தனத்தை வெலிப்படுத்திக் காட்டுகிறது. மதம் மாற்றமே பொய்யானது, நிச்சயமாக சமுதாயத்தில் உயர-மேன்மைப் பட ஜாதியக் கொடுமைகளினின்று விடுபட-மேன்பட உதவுவது இல்லை என்பதும் வெளிப்படையாக தெரிகிறது. அந்நிலையில், தமக்கும் இடவொதிக்கீடு வேண்டும் என்று கேட்பது கவனிக்கத் தக்கது.
2008 – சதீஷ்தேஷ்பாண்டேகமிஷன்: இருப்பினும், 2008 ஆம் ஆண்டில், தேசிய சிறுபான்மையினர் ஆணையம், புகழ்பெற்ற சமூகவியலாளர் சதீஷ் தேஷ்பாண்டேவின் கீழ், தலித் முஸ்லிம்கள் மற்றும் தலித் கிறிஸ்தவர்களின் பொருளாதார நிலைமை, அவர்களின் இந்து, சீக்கிய மற்றும் பௌத்த சகோதரர்களுடன் ஒப்பிடுதல் மற்றும் அவர்களின் தொடர்ச்சியை ஆய்வு செய்ய மூன்று களங்களை ஆராய ஒரு ஆய்வை நியமித்தது. சாதிகளுக்கு இடையேயான திருமணம் முதல் இட ஒதுக்கீட்டு வரையிலான பல்வேறு அடிப்படையில், இந்த ஆணையம் தலித் மதம் மாறியவர்களுக்கு எதிராக வலிமையான பாகுபாட்டைக் கண்டறிந்தது. இருப்பினும், இந்த அறிக்கைகள் எந்தவொரு செழிப்பான வளர்ச்சிக்கும் வழிவகுக்கவில்லை[5]. ஏனெனில், அவர்களது மதத்தலைவர்களிடம் உடன்பட்ட, ஒப்புக்கொள்ளும் ரீதியில் ஒத்த கருத்து உருவாக முடியவில்லை. நிச்சயமாக, ஆசார கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் இதனை ஏர்ருக் கொல்வதில்லை. அரசியல் ரீதியில் தான் தீவிரமாக இடவொதிக்கீடு கேட்டு வருகிறார்கள். தற்போது இதே காரணத்திற்காக, முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது[6].
2024 தேர்தலும், பிஜேபிநிலையும்: 2024க்குள் கமிஷன் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றால், அவ்வாண்டில் பாராளுமன்ற தேர்தலும் நடக்கப் போகின்றது. இருமுறை அமோக வெற்றி பெற்று ஆட்சியில் இருக்கும் பிஜேபிக்கு இது ஒரு முக்கியமான தேர்தல் என்றாகிறது. மூன்றாவது முறையாக வெற்றி பெற்றி ஆட்சி அமைக்க முடியுமா, சீட்டுக்கள் குறையுமா, சரிகட்ட கூட்டணி ஏற்படுத்தி போட்டியிடுமா போன்ற பல வினக்கள் எழும் நிலையில், இந்த விசயம், மைனாரிடி / சிறுபான்மையினரை கட்டுப் படுத்தும், பாதிக்கும் விவகாரம் ஆகையால், எவ்வாறு அணுகும் என்றும்கவனிக்க வேண்டியுள்ளது. நிச்சயமாக, அரசியல் நிர்ணய சட்டத்தின் படி, அரசியல் சாசனம் (பட்டியல் சாதிகள்) ஆணை- 1950 –யின் படி, இது முடியாது. அப்படியென்றால், நிச்சயமாக அதை மாற்ற வேண்டும் அல்லது நீக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இந்து- SCக்கள் நிச்சயமாக பாதிக்கப் படுவார்கள். அதனால், இந்துக்கள் ஓட்டு பிஜேபிக்குக் குறையலாம், பிறகு, சிறுபான்மையினற் ஓட்டு தேவையாகிறது. அந்நிலையில் பேரம் அதிகமாக இருக்கும்.
[5] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், மதம்மாறியபட்டியலினமக்களுக்குஎஸ்.சிஅந்தஸ்து: முன்னாள்தலைமைநீதிபதிதலைமையில்ஆணையம்அமைப்பு, Written by WebDesk, October 8, 2022 10:36:26 am
பட்டியலினமக்கள்பட்டியலில் 1950 இல்தலித்இந்துக்களைச்சேர்க்கமுதல்உத்தரவுவந்தது. ஜாதி அமைப்பு மற்றும் தீண்டாமை என்ற நடைமுறை இந்து சமூகத்தில் மட்டுமே இருந்ததாக அரசாங்கம் அறிவித்து மற்ற மதத்தவர்களை சேர்க்க முடியாது என்ற நிலை உள்ளது. இதனை சூசை வெர்சஸ் யூனியன் ஆப் இந்தியா (Soosai vs UOI 1985 SC) உச்சநீதி மன்ற தீர்ப்பிலும் உறுதி செய்யப் பட்டது. பின்னர் சீக்கியம் மற்றும் பௌத்தம் இந்து மதத்தின் கிளையாக கருதப்பட்டு அவர்களை மட்டும் பட்டியலின மக்கள் பட்டியலில் 1956 மற்றும் 1990 ஆம் ஆண்டுகள் முறையே இணைத்தனர்[1]. தவிர இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தின் பிரிவு 25ன் படி, இந்து என்றால் ஜைன, பௌத்த மற்றும் சீக்கியரும் அடங்குவர் என்றுள்ளது. அதனால், இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மற்றும் கிருத்துவ மதத்திற்கு மாறியவர்களுக்கு இந்த அந்தஸ்து வழங்கப்படாது என்று அரசு அறிவித்தது[2]. ஆனால், கிருத்துவர்கள் இதனை அரசியலாக்கி போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில், கிருத்துவத்தில் நிறவெறி, நிறவெறித்துவம், பாகுபாடு முதலியவை இறையியல் ரீதியில் இருக்கின்றன என்பதனை பலநாடுகளில் பல நேரங்களில் மெய்ப்பிக்கப் பட்டுள்ளன[3]. இதனால், “விடுதலை இறையியல்” (Liberation Theology) என்ற போர்வையிலும் தங்களது நிறவெறித்துவத்தை மறைத்து ஆர்பாட்டம் செய்வதும் வழக்கமாக இருக்கிறது.
30-08-2022 உச்சநீதிமன்றதீர்ப்பும், கமிஷன்அமைப்பும்: கடந்த ஆகஸ்ட் 30 2022 அன்று உச்ச நீதிமன்றத்தில் ஜாதி இடஒதுக்கீட்டை மதத்திலிருந்து பிரிக்கக் கோரி தொடரப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்தது[4]. விசாரணையைத் தொடர்ந்து அரசு சார்பில் வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தலித் மதம் மாறிய இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடஒதுக்கீட்டை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை மூன்று வாரங்களுக்குள் சமர்பிப்பதாக உறுதியளித்தார்[5]. பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் போன்றவை இதை எதிர்த்து வந்தாலும், சில பிஜேபி எம்பிக்கள் ஆதரவு தெரிவித்து வந்தார்கள்-வருகிறார்கள். அரசியல் நிர்ணய சாசனப் பிரிவைத் திருத்த மூன்றில் இரண்டு ஆதரவு தேவை என்ற நிலையில், ஆதரவாக ஓட்டளிக்கவும் தயார் என்று கையெத்தும் போட்டதாக முன்னர் செய்தி வந்துள்ளது. இப்பொழுது, உச்சநீதி மன்ற விசாரணையினால், அதன் பேரில் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது[6].
அரசியல்சாசனம் (பட்டியல்சாதிகள்) ஆணை– 1950 தெளிவாகஉள்ளது: நமது நாட்டின் அரசியல் சாசனம் (பட்டியல் சாதிகள்) ஆணை- 1950, இந்து, சீக்கிய, பவுத்த மதத்தை தவிர்த்து பிற மதங்களை சேர்ந்த ஒருவரும் எஸ்.சி. வகுப்பினராக கருதப்பட முடியாது என்று கூறுகிறது[7]. அதாவது ஜாதீய அமைப்பு, ஜாதி இல்லை என்று கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் பிரகடனப் படுத்திக் கொண்டு வருகின்றன. சமத்துவம், சகோரத்துவம், எல்லோரும் சமம் என்றெல்லாம் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். பிறகு அவர்களுக்கு இடவொதிக்கீடு ஏன் என்று தெரியவில்லை. ஆகவே, ஜாதியின் பெயரில் அவர்கள் இடவொதிக்கீடு கேட்க முடியாது. அப்படி கேட்க வேண்டும் என்றால், தங்கள் மதங்களிலும் அத்தகைய ஜாதிகள், ஜாதிப் பிரிவுகள் உண்டு என்று வெளிப்ப்டையாக அறிவித்துக் கொள்ள வேண்டும். ஆனால் அவ்வாறு செய்வது இல்லை. இருப்பினும், இஸ்லாமிய, கிறிஸ்தவ குழுக்கள் தங்கள் மதங்களுக்கு மாறியுள்ள தலித்துகளுக்கு எஸ்.சி. வகுப்பினருக்குரிய அந்தஸ்து, சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்று கோரி வருகின்றன[8]. ஆனால் இந்த கோரிக்கையை பா.ஜ.க. எதிர்க்கிறது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது[9], என்று முன்பே குறிப்பிடப் பட்டது.
சட்டப்பிரிவு 341-இன்கீழ்கமிஷன்அமைக்கப்பட்டுள்ளது: இந்த நிலையில், இதுதொடர்பாக ஆராய்வதற்கு சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் மத்திய அரசு ஒரு கமிஷனை அமைத்துள்ளது. மூன்று உறுப்பினர்களை கொண்ட இந்த கமிஷனில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி டாக்டர் ரவீந்தர் குமார் ஜெயின், பல்கலைக்கழக மானியக்குழு பேராசிரியர் சுஷ்மா யாதவ் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். இதற்கான கெசட் அறிவிப்பை மத்திய சமூக நீதி மற்றும் அதிகார வழங்கல் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தக் குழு, அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 341-இன் கீழ் அவ்வப்போது வெளியிடப்படும் குடியரசுத் தலைவா் உத்தரவுகளின் அடிப்படையில் இந்த விவகாரத்தை ஆய்வு செய்யும்[10]. மேலும், தலித் சமூகத்தினா் வேறு மதங்களுக்கு மாறிய பிறகு அவா்களின் பழக்கவழக்கங்கள், மரபுகள், அவா்களின் சமூக பாகுபாடு மற்றும் தாழ்வு நிலை ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கணக்கில் எடுத்துக்கொள்வதோடு, இவா்களுக்கு மீண்டும் எஸ்.சி. அந்தஸ்து அளிக்கப்படும்போது தற்போதைய எஸ்.சி. பிரிவினருக்கு ஏற்படும் தாக்கங்ளையும் ஆய்வு செய்து, அதுதொடா்பான அறிக்கையை அடுத்த 2 ஆண்டுகளுக்குள் மத்திய அரசிடம் சமா்ப்பிக்கும் என்றும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது[11].
மூன்றுஅங்கத்தினர்கமிஷன்ஆராயவேண்டியஅம்சங்கள்: கமிஷனின் பார்வையில், கீழ்கண்ட அம்சங்கள் ஆராயவேண்டியுள்ளது:
* வரலாற்று ரீதியாக தாங்கள் எஸ்.சி. வகுப்பை சேர்ந்தவர்கள், அதே நேரத்தில் அரசியல் சாசனத்தின் 341-வது ஷரத்தில் குறிப்பிடப்படாத பிற மதங்களுக்கு மாறி உள்ளோம் என்று கூறுகிறவர்களுக்கு எஸ்.சி. அந்தஸ்து வழங்கப்படுவது குறித்து இந்த கமிஷன் ஆராயும்.
* தலித்துகள் மதம் மாறிய பிறகு, அவர்களது பழக்கவழக்கங்கள், மரபுகள், சமூக பாகுபாடு, தாழ்வு நிலை ஆகியவற்றால் ஏற்படும் மாற்றங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளும். இது குறித்த முடிவினால் ஏற்படுகிற தாக்கங்கள் குறித்தும் இந்த கமிஷன் ஆராயும்.
* இந்த விவகாரத்துடன் பொருத்தமானதாக கருதும் மற்ற தொடர்புடைய கேள்விகளையும் மத்திய அரசுடன் கலந்தாலோசித்து அதன் ஒப்புதலுடன் கமிஷன் ஆராயும்.
மதம்மாறியSCக்களுக்குஎப்படிSCஅந்தஸ்துகொடுக்கமுடியும்?: இந்த கமிஷன் டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும். இந்த கமிஷனின் தலைவர் பொறுப்பேற்றது முதல் 2 ஆண்டுகளுக்குள் தனது அறிக்கையை மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் மத்திய அரசின் ‘கெசட்’ (அரசிதழ்) அறிவிப்பில் இடம்பெற்றுள்ளன. கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமிய மதத்துக்கு மாறிய தலித் மக்களுக்கு எஸ்.சி. வகுப்பினருக்கான அந்தஸ்து வழங்கினால், அவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் வழங்கப்படுகிற இட ஒதுக்கீடு சலுகை, இவர்களுக்கும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி நாட்டில் சில குறிப்பிட்ட இனத்தை ‘பட்டியலின மக்கள்’ என்று வகைப்படுத்தி அவ்வப்போது உத்தரவுகளை பிறப்பிக்கலாம். SC களாகக் கருதப்படும் ‘இனம், பழங்குடியினர், சாதிகள் அல்லது பிற குழுக்களை’ அடையாளம் காண ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. கிறிஸ்தவர் மற்றும் முஸ்லிம்கள் இதற்கு எவ்வாறு எதிர்வினை உரிவார்கள் என்று கவனிக்க வேண்டும்.
[3] Apartheid Enquiry Commission கூட இதனை இவரங்களுடன் எடுத்துக் காட்டியுள்ளது.
[4] தமிழ்.நியூஸ்.18, மதம்மாறியதலித்துகளுக்குஎஸ்சிஅந்தஸ்து? ஆராயகுழு– மத்தியஅரசுஅறிவிப்பு !, NEWS18 TAMIL, Published by:Ilakkiya GP, First published: October 08, 2022, 09:20 IST , LAST UPDATED : OCTOBER 08, 2022, 09:23 IST
[10] தினமணி, மதம்மாறியதலித்சமூகத்தினருக்குஎஸ்.சி. அந்தஸ்து: ஆய்வுசெய்யமத்தியஅரசுகுழுஅமைப்பு, By DIN | Published On : 08th October 2022 12:28 AM | Last Updated : 08th October 2022 12:28 AM
இங்கிலாந்தில், அமெரிக்காவில்உள்ளபொருளாதாரமற்றும்பாரம்பரியசமூகப்பிரிவுகள்–ஜாதிகள், “வர்க்கங்கள்” போர்வையில்இருப்பது! ஆராய்ச்சியாளர்கள் தத்தமது நாட்டுப் பிரசினைகளில் கவனம் கொள்வது நல்லது [2]
பெயர்கள்மாறினாலும், தொழில்மாறவில்லை: தனிமனிதன் உருவாக்கும் உற்பத்தி செய்யும் அழுக்கை தானே சுத்தப் படுத்துகிறான். முடியாது என்ற நிலை வந்தால், அவனது குடும்பத்தார் செய்கின்றனர். அது போலவே, சமூகம் உருவாக்கும் உற்பத்தி செய்யும் அழுக்கை சமூகமே சுத்தப் படுத்துகிறது. அந்நிலையில், சமூகத்தில் சிலரால் முடியவில்லை என்ற நிலையில் அடுத்தவர் செய்ய முன்வருகிறார்கள், அதற்கு ஊதியம் கொடுக்கப் படுகிறது. இன்றைக்கு அவர்கள் வேறு பெயர்களில் அழைக்கப் படுகிறார்கள். கொள்ளைக்குப் போகும் இடத்தை, கக்கூஸை ரெஸ்ட் ரூம் [Rest Room] என்கிறார்கள், மாதம் ரூ 20,000/- என்றால் செய்வதற்கு தயாராக ஆட்கள் இருக்கிறார்கள். 1960களில் அத்தகைய வேலைகளுக்கு வளைகுடா நாடுகளுக்குச் சென்றுதான் பணக்காரர்கள் ஆகினர். பிறகு நர்சுகள், பெண்-வேலையாட்கள், பெண்-ஊழியர் என்ற பெயர்களில் சென்றனர். இப்பொழுது, ரெஸ்ட்-ரூம், அவுட்-சோர்சிங் வொர்கர்ஸ் என்ற ரீதியில் செல்கிறாற்கள். அங்கேயே தங்கி விடும் போது, அவர்கள், ஒரு சமூக அடுக்கில் வைக்கப் படுகிறார்கள். உள்ளூர் வெள்ளைக்கார சேவகர்கள், வேலையாட்கள், ஊழியர் இருக்கும் போது, அவர்களுக்குக் கீழாக வைக்கப் படுகிறார்கள். அவர்கள் மேலடுக்குகளில் வைக்கப் படுகிறார்கள். மற்ற வேலைகளும் அவ்வாறே அடுக்குகளை உருவாக்குகிறார்கள். ஆனால், “எலைட்டுகள்” அப்படியே தான் இருக்கிறார்கள்.
அமெரிக்காவில்உள்ளசமூகப்பிரிவுகள்: வெள்ளையர் முதலில் அமெரிக்கக் கண்டங்களில் குடியேறிய போது, தம்மை விட நாகரிகம், கலாச்சாரம், முதலியவற்றில் சிறந்த மக்களைப் பார்த்தனர். ஆனால், தங்களுடைய வஞ்சம், சதி, அடக்குமுறைகளால், அவர்களை ஏமாற்றி, கோடிக் கணக்கான மக்களைக் கொன்று குவித்தனர். செவ்விந்தியர், அஸ்டெக், மாயா, இன்கா போன்ற நாகரிகங்கள் இவர்களால் அழிக்கப் பட்டன. உண்மைகளை மறைக்க சரித்திரத்தையும் மாற்றி எழுதினர். அவர்களை அடக்கி வைக்க, சமூகப் பிரிவுகள், கட்டமைப்புகளை உண்டாக்கினர். அமெரிக்காவில் பல அடுக்குகளில் செயல்படும் நிறவெறி ஜாதியம், மூன்றாகப் பிரிக்கப் பட்டுள்ளது[1]:
எண்
ஆங்கிலத்தில்
தமிழில்
சதவீதம்
சொத்து
1
Upper
உயர்ந்த
1%
35%
2
Upper middle
உயர்ந்த நடுத்தர
14%
74%
54%
Middle
நடுத்தர நடுத்தர
20%
Lower middle
கீழ் நடுத்தர
30%
3
Working
உழைக்கும்
13%
25%
11%
Lower
கீழான
12%
மேலேயுள்ளது அதிகார, ஆட்டிப் படைக்கும் அமெரிக்க ஜாதியினர், ஐரோப்பிய வழி வந்தவர்.
இடைப் பட்ட மூவகை கலப்பின ஜாதியினர் – ஐரோப்பிய மற்றும் ஆசிய, ஆப்பிரிக்க மற்றும் செவ்விந்தியர் கலப்பினங்கள், ஜாதியினர்.
பழுப்பு மற்றும் கருப்பு நிறத்தவர் – கீழ் ஜாதியினர்.
ஆஸ்திரேலியாவில்நிறவெறிஜாதியம்அதிகமாகவேஉள்ளது: ஆரம்பம் முதலே ஆஸ்திரேலியா நிறவெறித்துவத்துடன் இருந்தது. வெள்ளையர், குடியேறும்போது, பூர்விகக் குடிகளை அதிகமாக, வேட்டையாடி கொன்று குவித்தனர். பிறகு, வெள்ளையர்-அல்லாதவர்களை கட்டுப் பாடுகளுடன் அனுமதித்தது. இருப்பினும், அலநிலைகளில் நிறவெறித்துவம் வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது. அங்கிருக்கும் ஜாதிய அமைப்பு இவ்வாறுள்ளது:
எண்
Australian social hierarchy
வர்க்கம்
1
Established affluent class
நிறுவனப் படுத்தப் பட்டுள்ள உயர்ஜாதி
2
Emerging Affluent class
உருவாகி வரும் உயர்ஜாதி
3
Mobile middle class
நிரந்தரமற்ற நடுத்தர ஜாதி
4
Established middle class
நிறுவனப் படுத்தப் பட்டுள்ள நடுத்தர ஜாதி
5
Established working class
நிறுவனப் படுத்தப் பட்டுள்ள ஜாதி
இந்திய மாணவர்கள் தாக்கப் படுவது, இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது இனரீதியிலான கமென்ட்டுகள், வசைபாடுவது முதலியவற்றைக் கவனிக்கலாம்/
. எனவே இவற்றையெல்லாம் கூர்ந்து படுக்கும் போது, அவர்கள் இந்தியாவைப் பற்றி விமர்சிப்பது போலியானது என்று தெரிகிறது. மேலும், இந்தியாவில், அச்சு மற்றும் மின்னூடங்கள் சுதந்திரமாக செயல்படு வருகின்றன. அதனால், எல்லா விதமான ஆதரவு-எதிர்பு விமர்சனங்கள் வெளிவருகின்றன. இதனை பயன்படுத்திக் கொண்டு, இந்திய விரோத சித்தாந்திகள், பிரச்சாரம் செய்பவர்கள் தொடர்ந்து அத்தகைய பிரச்சாரத்தை செய்து வருகின்றனர்.
சமூக கட்டமைப்பு [Social stratification] மற்றும் சமூக மோதல்கள் [class conflict] : அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் ஆஸ்த்ரேலிய சமூகங்களில் சமூக கட்டமைப்பு [Social stratification] மற்றும் சமூக வர்க்க / மோதல்கள் [class conflict] இருப்பதை இனம் [race], இனவெறி [racism], மற்றும் இனவெறித்துவம் [racialism] முதலியவற்றால் அறியப் பட்டு, ஒப்புக் கொண்டு, நியாயப் படுத்தப் படுகிறது. இத்தனை ஆண்டுகள் ஆனாலும், விஞ்ஞானம்-தொழிற்நுட்பங்கள் வளர்ந்தாலும், பொருளாதாரம் வளர்ந்து, வசதிகள் பெருகினாலும், புறத்தோற்றங்களில் மாறுதல்கள் ஏற்பட்டாலும், பெரிய நகரங்களில் அவை இல்லாமல் இருப்பது போன்று உள்ளது. ஆனால், நகர, கவுன்டிகளில் வெளிப் படுகின்றன. கருப்பர், பழுப்பு நிறத்தவர், குடிபெயர்ந்தவர் குற்றங்களை செய்வர் என்ற பொது நம்பிக்கை உள்ளது. அதன்படியே, சட்டம் மற்றும் ஒழுங்குமுறை அமூல் படுத்தும் துறைகள், அதிகாரிகள் வேறுபாட்டை, வெறுப்பைக் காட்டி வருகின்றனர். வெள்ளைக் காரர்கள் அத்தகையோரை ஏற்றுக் கொள்வதில்லை. தங்களது உரிமைகளை, வசதிகளை, வேலைகளை அவர்கள் பரித்துக் கொள்கின்றனர் என்ற எண்ணம் தான், அவர்களது இனம் [race], இனவெறி [racism], மற்றும் இனவெறித்துவம் [racialism] முதலியவற்றில் வெளிப் பட்டுள்ளன.
இந்தியர் ஏன் தாக்கப் படுகின்றனர்?: ஓரளவிற்கு வெள்ளையாக இருக்கும் இந்தியர்கள் பலமுறை தாக்கப் பட்டிருக்கின்றனர். காரணம் அவர்கள் வெள்ளைய அல்லர். மருத்துவம், தொழிற்நுட்பம், கம்பூட்டர்-மென்பொருள் துறைகள்முதலியவற்றில், இந்தியர் முன்னேறி 1960களில் இருந்து, குடியேறி, வளர்ந்து, பிரஜைகளாக மாறினாலும், இந்த 2019ல் அவர்கள் தாழ்ந்தவர்களாக, தமது உடைமைகளைப் பரித்துக் கொண்டவர் என்று தான் கருதப் படுகின்றனர். “பார், அவனால் முடிகிறது, உன்னால் முடியவில்லை,” என்று சொல்வதும், “பார், நேற்று வந்தவன், இக்காரை வாங்கி ஓட்டுகிறான்,” போன்ற விமர்சனங்களையும் கேட்க முடிகிறது. எதிர்த்து கேட்டால் சண்டை வரும், என்று அமைதியாக சென்று விடுவதால், அத்தகைய நிகழ்வுகள் பதிவாகாமல் மறைந்து விடுகின்றன, மறைக்கப் படுகின்றன. வளைகுடா நாடுகளில், பிரபலமான நெடுஞ்சாலைகள், தெருக்களை விட்டு, குடியிருப்பு போன்ற வீதிகளில் குறுக்கு வழி என்று சென்றால், கார்கள் மீது, மனித கழிவுகள் வீசப் படுகின்றன, பலமாகத் தட்டப் படுகின்றன, “ஒழுங்காக போ………………………………..” என்று வசைப் பாடுதல்களுக்கு உள்ளாகின்றனர். ஆனால் “லட்சங்களில் மாத சம்பளம் கிடைக்கின்றது,” என்பதால், வெளியே சொல்வதில்லை.
அமெரிக்க, ஐரோப்பிய, ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்களுக்கு: இத்தகைய காரணங்களுக்காக, முதலில் அவர்கள் தத்தமது நாடுகளில் உள்ள பிரச்சினைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து, அவற்றை போக்க, தீர்க்க வழி தேடலாம். “தலித்” போர்வையில், இங்கு, குறிப்பாக தமிழகத்தில் ஆராய்ச்சி செய்வது, பொய்யான தலங்களின் மீது நின்று செய்வது என்பது, உங்களுடைய கட்டுரைகள் மூலமே வெளிப்படுகின்றன. மற்றவர்கள் சொல்லி, நாளிதழ்களில் வரும் பிரச்சார ரீதியிலான செய்திகளை ஆதரமானவை என்று முடிவுக்கு வந்து, ஆராய்ச்சி செய்வது ஆபத்தானவை. மேலும் இடதுசாரி, கம்யூனிஸ்ட், தீவிரவாத கருத்துகளை வெளியிடும், பொதுவாக யாரும் பொருட்படுத்தாத, நாளிதழ்களை வைத்து எழுதுவது, உங்களது நிலையினையே தாழ்த்தி விடும். ஆனால், நீங்கள் அதைத் தான் செய்திருக்கிறீர்கள். இந்திய பிரஜைகளாக இல்லாதவர், என்ன வேண்டுமானாலும், பேசலாம்-எழுதலாம், அவர்கள் மீது இதிய சட்டங்கள் பாய முடியாது. இந்தியாவிற்கு வரும் போது, புகார் கொடுத்தாலும், எந்த நாட்டவரோ, அந்நாட்டிற்கு தெரிவிக்கப் பட்டு, நடவடிக்கை எடுக்கப் படி வேண்டியுள்ளது. அதனால், தான், அவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். ஆனால், கூறியவை-எழுதப்பட்டவை உண்மையாகாது. என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளவேண்டும். பொய் பிரச்சாரம் செய்யும் கூட்டங்களுக்கு, நீங்கள் ஆதரவு தருகிறீர்கள், அத்தகைய கூட்டங்களில் பங்கு கொள்கிறீர்கள் என்றாகிறது.
இந்தியாவைப்பற்றியஎதிர்மறைவிமர்சனம்நியாயமாதா?: பெரும்பாலான இந்தியர் அல்லாத சமூக, பொருளாதார, சமூகவியல், சரித்திர எழுத்தாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் முதலியோர், மாறி வரும், உயர்ந்து வரும், இந்திய சமூகத்தை இன்னும் எதிர்மறையாக, சித்தரித்து வருவது வியப்பாக இருக்கிறது. 130 கோடி மக்கள் கொண்ட சமூகத்தை, 10-50 கோடி மக்கள் கூட இல்லாத நாடுகளின் பிரஜைகள் இவ்வாறு எழுதுவது வேடிக்கையாக இருக்கிறது. குடும்பம், சமூகம், நாடு முதலியவை பெரிதாக இருக்கும் போது,பொருளாதார ரீதியில் வேறூபாடுகள் இருக்கத் தான் செய்யும். இது ஒன்றும் பெரிய கண்டுபிடிப்பு அல்ல. 130 கோடி மக்கள் கொண்ட நாட்டை 5000 வருடங்களுக்கும் மேலாக மற்ற நாடுகள் கவனிக்கின்றன என்றால், அது எதிர்மறையாக அல்ல, இத்தனை பிரச்சினைகளை வைத்துக் கொண்டும், தொழிற் மற்றும் விஞ்ஞான துறைகளில் சிறந்து விளங்குகிறதே என்றதால் தான். அத்தகையோர் இந்தியாவிலேயே தங்கி விட்டால், இல்லை மற்ற நாடுகளில் இருக்கும் இந்தியர் மற்றும் இந்திய் வம்சாவளியினர் இந்தியாவுக்கு வந்து விட்டால், நிச்சயமாக இந்தியா, வல்லரசாக உருவாகி விடும். அதனால் தான், எப்பொழுதும், இந்திய தேசத்தை, தேசப்பற்றைக் கொச்சைப் படுத்தி வருகிறார்கள். அதற்காக, உள்ளூர் விசுவாசிகளையும் ஊக்குவித்து வருகிறார்கள். அந்நிலையில் தான், இப்பொழுது “தலித்” போர்வையில், அந்நியர்களின் நுழைவு காணப்படுகிறது.
மற்றவர்கருத்தைமதிக்கத்தெரியாத, கருத்துரிமைபோராளிகள்: கௌதம சன்னா படைப்பில் நான்கு நூல்கள் வெளியீடு விழா அழைப்பிதழ் என்று இணைதளத்தில் சுற்றில் உள்ளது. இதைப் படித்தவுடன், கீழ்கண்டவாறு கமென்ட் போட்டேன்[1]. ஹூகோ கோரிட்ஜ் [Hugo Gorringe[2]] மற்றும் மைக்கேல் ஏ. காலின்ஸ் [Michael A. Collins[3]] இந்தியா மற்றும் இதிய சமூகத்திற்கு எதிரான, பாரபட்சக் கருத்துக்களைக் கொண்டுள்ளார்கள் என்பது தமது ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம், வெளிப்படுத்தியுள்ளார்கள்[4]. அவர்கள் கட்டுரைகளைப் படித்துப் பார்த்தாலே, அவர்களது புரிதல் எவ்வளவு குறைவாக இருக்கிறது என்று தெரிந்து கொள்ளல்லாம்[5]. இவர்களது அத்தகைய, பாரபட்சமான கட்டுரைகளால், பாதிக்கப் பட்ட மக்களுக்கு எந்த பலனும் கிடைக்காது, மாறாக சமூகத்தில் வேற்றுமையை வளர்த்து, வன்முறையைத் தூண்டும். முன்னர் கைல் வோம்வெட் [Gail Omvedt] என்ற பெண்மணி, இதைப் போன்ற கட்டுரைகளை, வழக்கம் போல “தி இந்து”வில் எழுதிவந்தார். பிறகு புத்தகமாகக் கூட வெளிவந்தது, ஆனால், இப்பொழுது அவரை யாரும் நினவுகொள்வதில்லை. ஆகையால், இந்தியாவில் இருக்கும் குழுக்கள், கட்சிகள் முதலியோர் இத்தகைய வெளிநாட்டவர்களின் எழுத்துகளை, புத்தகங்களை கவனமாகப் பார்க்க வேண்டும். அத்தகைய விழாக்களை நடத்துவோரும், உண்மைக்குப் புறம்பாக மேலும் மோதல்களை உருவாக்கும் போக்கைக் கவனித்து, உள்ள அமைதி கெடுக்கா வண்ணம் இருக்க முயற்சிக்க வேண்டும். ஒரு வேளை, அப்பதிவு அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்று நீக்கிவிட்டார்கள்[6]. ஆனால், அவர்கள் தாம், கருத்துரிமை பற்றியெல்லாம், அதிகமாக ஆர்பாட்டம் செயவர்கள்.
ஜாதியம், வர்ணம்வளர்ந்தசரித்திரம்: இந்தியாவில் தான் ஜாதி இருக்கிறது என்று எல்லோராலும் சொல்லப் பட்டு, நம்பப் பட்டு வந்து, அதன் படியே எல்லாம் எழுதப் பட்டு வருகின்றது. ஆனால், அதே போல அல்லது, மற்றும் அதைவிட இருக்கமான, சமூகக் கட்டமைப்புகள், இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருப்பதை இந் தியாவில் விவாதிப்பது கிடையாது. போர்ச்சுகீசியர் தாம், தாம் சென்ற நாடுகளில், அந்தந்த நாட்டினர் பெண்களுடன் புணர்ந்து, புதியதாக கலப்பினத்தவரை உண்டாக்கினர். அத்தகையோர் தமக்கு விசுவாசமாக இருப்பர் என்பது அவர்களது கொள்கையாக இருந்தது. அவ்வாறு உருவாக்கிய குழுமத்தை காஸ்டா [casta] என்று குறிப்பிட்டனர். அது பிறகு காஸ்ட் [caste] / ஜாதி என்றாகியது. அதனால், இனம் [Race], இனசித்தாந்தம் [Racism], மற்றும் இனவெறித்துவம் / நிறவெறித்துவம் [Racialism] முதலியவற்றில் நம்பிக்கைக் கொண்ட அவர்கள், தங்களது இனத்தூய்மையை காத்திட அத்தகைய ஜாதி அமைப்பை உருவாக்கினர். ஆனால், அவர்களுடைய காலனிய ஆதிக்கத்தில் அவர்கள் மற்ற இனத்தவருடன் தொடர்பு கொண்டதால், கலப்பினத் தோற்றம் அல்லது கலப்பினம் உருவாக்கம் சேர்ந்திருந்தன. அதன்படியே, அத்தகைய கலப்பினத்தவரை சமூக அந்தஸ்த்தில் கீழே வைத்தனர். இதனால், காலனிகள் இருந்த நாடுகளில் இத்தகைய கட்டமைப்புகளைக் காணலாம்.
பார்ப்பனீயம்என்றசுலமானஎதிர்ப்பு–இலக்கைவைத்துஉண்மைகளைமறைப்பது: சமூக கட்டமைப்பு [Social stratification] மற்றும் சமூக / வர்க்க மோதல்கள் [class conflict] இருப்பதும் அவர்களுக்குத் தெரிந்தவை தாம். அவர்களது நாளிதழ்களை தொடர்ந்து படித்து வந்தால், அப்பிரச்சினைகள் எவ்வாறு மோசமாக இருக்கின்றன, இருந்து வருகின்றன என்பதனை அறியலாம். ஆனால், அங்கு, அதற்கான காரணங்கள் அடக்கியாள்பவர்களைச் சுட்டிக் காட்டுகின்றன. இந்தியா என்று வரும் போது, அத்தகையோரை மறைத்து, எல்லாவற்றிற்கும் “பார்ப்பனீயம் தான் காரணம்” என்ற போலித்தனமான வாதத்தை வைத்து, தங்களது குற்றங்களை மறைக்கப் பார்க்கிறார்கள். எஸ்.சி / எஸ்.டி மற்றும் இதர ஜாதியினர், அவர்களுக்குள் இருக்கும் வேறுபாடுகள், அரசியல் ஆதரவுகள், ஆதிக்கப் பகிர்வு போட்டிகள் முதலியவற்றால் ஏற்படும் மோதல்களில் அவர்களே காரணமாகின்றனர். அங்கு பார்ப்பனர் யாரும் இல்லை மற்றும் சம்பந்தமும் இல்லை. இருப்பினும், தங்களது இயலாமை, மனங்களில் இருக்கும் துவேசம், வன்முறையாக வெளிப்படும் போக்கு, கலவரங்களை உண்டாக்கும் திட்டம், கொலைகளில், சொத்து நாசம் முதலியவை ஏற்படுவதில் முடிய, அவர்கள் தலைவர்களே திட்டமிடுகிறார்கள். அத்தகைய தியாகங்களை வைத்து, பதவிகளை அடைய, தொழிலாளர்களை மிரட்டி பணம் வசூலிப்பது போன்ற காரியங்களிலும் ஈடுபட்டுள்ளனர். அவற்றால் வளர்ந்து வருகிறனர்.
இங்கிலாந்தில்உள்ளசமூகக்கட்டமைப்பு, பிரிவினைகள்: ஆங்கிலேயர், நிறத்தின் அடிப்படையில், பிறகு அரச வம்சம், பிரபுக்களென்ற நிலையில் பிரிவுகளை வைத்துக் கொண்டனர். பிறகு, அவற்றை, பொருளாதாரத்துடன் இணைத்தனர். அவற்றை கீழ்கண்ட அட்டவணையில் பார்க்கலாம்:
எண்
ஆங்கிலத்தில்வழங்கப்படும்சொற்றொடர்
%
தமிழ்மொழிபெயர்ப்பு
1
Elite
6
உயரடுக்கு
2
Established middle class
25
நிறுவனப்படுத்தப் பட்ட மத்திய வர்க்கம்
3
Technical middle class
6
தொழிற்நுட்பம் அறிந்த மத்திய வர்க்கம்
4
New affluent workers
15
புதிய வாதி படைந்த உழைக்கு வர்க்கம்
5
Traditional working class
14
பாரம்பரிய உழைக்கும் வர்க்கம்
6
Emerging service sector
19
புதியதாக உருவாகும் சேவக வர்க்கம்
7
Precariat
15
கீழடுக்கு / தாழ்ந்தவர்
அவர்கள் ஏழடுக்குகளில் பிரித்து காண்ப்/இத்தாலும், கீழ்கண்டவாறு நான்கடுக்குகளில் அடங்குவர் என்பதை கவனிக்கலாம்.
எண்
ஆங்கிலத்தில்வழங்கப்படும்சொற்றொடர்
%
தமிழ்மொழிபெயர்ப்பு
1
Elite
6
உயரடுக்கு
2
Established middle class
Technical middle class
25
6
நிறுவனப்படுத்தப் பட்ட மத்திய வர்க்கம்
தொழிற்நுட்பம் அறிந்த மத்திய வர்க்கம்
3
New affluent workers
Traditional working class
Emerging service sector
15
புதிய வாதி படைந்த உழைக்கு வர்க்கம்
பாரம்பரிய உழைக்கும் வர்க்கம்
புதியதாக உருவாகும் சேவக வர்க்கம்
14
19
4
Precariat
15
கீழடுக்கு / தாழ்ந்தவர்
அவர்கள் இந்தியாவைப் பற்றி ஆராய்ச்சி செய்வது போல, நாமும் அவர்களது சமூகத்தைப்பற்றி ஆராய்ந்தால், உண்மை விளங்கும். மனிதர்கள் இருக்கும் வரை, அழுக்குகள் வெளியேறிக் கொண்டுதான் இருக்கும், அவற்றை சுத்தப் படுத்த ஆட்கள் தேவைப் பட்டுக் கொண்டுதான் இருப்பார்கள்.
[1] Hugo Gorringe and Michael A. Collins have been biased researchers writing against India and therefore, how their writings would help Indians or the so-called affected people. Some years back, Gail Omvedt used to write or “The Hindu” promoted her to do so, about the same issues in the same fashion. Now, none remembers her, because of bias and misinterpretation. Thus, the organizers have to be careful about the import of such ideas leading conflict promotion instead of bringing peace.
[2] Hugo Gorringe, Senior Lecturer, Sociology; Co-director – Centre of South Asian Studies, .02, Number 22, George Square, Edinburgh, UK, EH8 9LD, +44 (0)131 650 3940, h.gorringe@ed.ac.uk, Interst-Dalit Politics, Policing, Protest, Social movements, Social Violence, Political Economy of India, Caste, Indian Politics
[3] Michael Collins received his doctorate in South Asia Studies from the University of Pennsylvania. His dissertation, “Recalling Democracy: Electoral Politics, Minority Representation, and Dalit Assertion in Modern India,” provides an ethnographic study of Dalit (ex-untouchable) politics, chronicling the democratic transition of the Viduthalai Chiruthaigal Katchi (Liberation Panthers Party; VCK) from social militancy into electoral politics. His research bridges the disciplines of history, anthropology, and political science to engage with theories of democracy, representation, and political practice in modern South Asia. His most recent work provides an ethnographic study of how election finance norms affect the democratic participation and political representation of social minorities in modern India.
Collins, Michael. Writing Dalit assertion: early Dalit Panther politics and legal advocacy in 1980s Tamil Nadu, Contemporary South Asia 25.3 (2017): 238-254.
[4] Gorringe, Hugo. Untouchable citizens: Dalit movements and democratization in Tamil Nadu. Vol. 4. Sage, 2005.
[5] Collins, Michael. Writing Dalit assertion: early Dalit Panther politics and legal advocacy in 1980s Tamil Nadu, Contemporary South Asia 25.3 (2017): 238-254.
[6] As usual, Subashini Tremmel has posted the invitation and she deleted my comment and also the papers of Hugo Gorringe and Michael Collins referred to.
திராவிடஅரசியலில்சூத்திரன்உருவானநிலை: சங்க இலக்கியத்தை சரித்திரமாக கொண்டு வரலாற்றுரீதியில் புத்தகங்கள் எழுதப்பட்டன. சங்க காலத்தை, சரித்திர காலமாக உலக அறிஞர்கள், அகழ்வாய்வு நிபுணர்கள் மற்றும் சரித்திர ஆசிரியர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். ஆனால், சங்க இலக்கியங்களில் சூத்திரன் என்ற சொல்லாடல் இல்லை, பிராமணன் என்ற வார்த்தையும் இல்லை அதேபோல திராவிடன் என்ற சொல்லும் இல்லை, ஆனால் ஆரியர் ஆரியர் போன்ற பிரயோகங்கள் 7 இடங்களில் காணப்படுகின்றன. ஆகவே புலையன், இழிபிறப்பாளர் மற்றும் துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று இந்நான்கல்லது குடியும் இல்லை போன்ற புறநானூற்றின் குறிப்புகளை வைத்துக் கொண்டு பார்த்தாலும், சூத்திரன் போன்ற பிரயோகம் இல்லை. சுமார் 1000 வருடங்களுக்கு பிறகு தேவாத்தில் காணப்படுகின்ற சூத்திரன், வர்ணாசிரம சூத்திரன் ஆக முடியாது அதேபோல அதிலிருந்து ஒரு ஐநூறு ஆண்டுகளுக்குப் பிறகு கல்வெட்டில் காணப்படும் சூத்திரர்கள், சூத்திரன் ஆக முடியாது எனவே 19-20ம் நூற்றாண்டுகளில் இவ்வார்த்தைக்கு வேண்டுமென்று விளக்கம் கொடுத்து அதனால் சூத்திரர் என்ற வார்த்தை சூத்திரன் ஆகி நான்காவது வண்ணத்துடன் ஒப்புமை படுத்தப் பட்டது. ஒரு புதிய தவறான கருதுகோளை முன்வைத்து அரசியல் ரீதியாக அதனை உண்மையான சித்தாந்தம் போன்ற வழக்கில் ஏற்றி விட்டனர்.
கல்வெட்டுகளில்காணப்படும் “சூத்திரர்”: கே. ஆர். அனுமந்தன்[1], “தமிழகத்தில் தீண்டாமை,” என்ற தனது ஆராய்ச்சியில், எவ்வாறு சூத்திரர், எஸ்.சிக்கள் முதலியோர், குறுநில மன்னர்களாக, தலைவர்கள், வீரர்களாக இருந்துள்ளனர், கோவில்களுக்கு தானம் வழங்கியிருந்தனர் என்பதையெல்லாம் சரித்திர ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டியுள்ளார்[2]. ஆனால், எந்த ஆராய்ச்சியாளனும், இத்தகைய உண்மைகளை மறைப்பதால், பொய்மைகளையே உண்மை என்று நம்பிக் கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். உதாரணத்திற்கு சில கொடுக்கப் படுகின்றன. கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டத்தில் உள்ள சோழமாதேவியில் உள்ள குலசேகரசுவாமி கோயிலில் சோழர்கள் காலத்திய பல கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவற்றில், “பறையனான சூத்திர ராயன்” என்ற சொற்றோடர் காணப்படுகிறது.
ஈவேராவின்ஜாதிஎன்ன?: ஈவேராவை கிருத்துவ மிஷினரிகள் [Dr. S.Robertson teaches Religions at Bethel Bible College, Guntur. Dr. S.Robertson teaches Religions at Bethel Bible College, Guntur] – அவர் சூத்ரர்களில் மேலட்டுக்கில் நாயக்கர் ஜாதியைச் சேர்ந்தவர் [He belonged to the Naicker caste the upper stratum of the Sudras[3]] மற்றும் சிலர்[4] நாயக்கர் என்றும் குறிப்பிடுகின்றனர். கன்னட பலிஜ நாயுடு வகுப்பினர், ‘நாயக்கர்’ என்பது பட்டப்பெயர். .. என்றும் குறிப்புள்ளது[5]. இவர்களை ஈவேரா (பெற்றோரை) கன்னடிடய நாயக்கர் என்றும் நாயுடுகள் என்றும் வழங்குவர்[6]. மேலும் அம்பேத்கரையும், ஈ.வே.ராமசாமி நாயக்கர் குறைகூறியுள்ளார்[7], “…………டாக்டர்அம்பேத்கரைசுவாதீனம்செய்துகொண்டுவிட்டார்கள். பிராமணர்கள், சூத்திரன், பஞ்சமன்என்றபிரிவுஇருக்கக்கூடாதுஎன்றுஅரசியல்நிர்ணயசபையில்வாதாடமல்செய்துவிட்டார்கள்……. தனித்தொகுதியைஓழிப்பதற்குக்கூடஅவரால்தொல்லைநேராமல்பார்த்துக்கொண்டார்கள்”. அம்பேத்கருக்கு, சட்டப் படி, நிலைஎன்ன என்பது தெரியும் என்பதால் தான், எஸ்.சி, எஸ்.டி என்று குறிப்பிட்டார். ஜாதிகளை வைத்து சண்டை, சச்சரவுகள் உருவாக்க வேண்டும், அரசியல் செய்யவேண்டும் என்பது அவருடைய எண்ணம் அல்ல.
ஈவேரா பறையர்களை, மற்ற பட்டியல் ஜாதியினரை மதிக்கவில்லை: ஈவேரா தன்னை சூத்திரன் என்று சொல்லிக் கொண்டாலும், உயர் ஜாதித்துவ முறையில் தான் நடந்து கொண்டார். ஜின்னாவிடம் தோற்றார், அம்பேத்கரை விமர்சித்தார். ஆனால், அவர் “சூத்திரத்துவம்” பேசி தோல்வி கண்டார். உதாரணங்கள் சில கொடுக்கப் படுகின்றன:
‘… என்போன்ற ‘சூத்திரன்’ என்று சொல்லப்படுபவன் ‘பறையன்’ என்று சொல்லப்படுவோருக்கு உழைப்பதாகச் சொல்லுவதெல்லாம், ‘சூத்திரர்கள்’ என்று தம்மை யாரும் கருதக்கூடாது என்பதற்காகத் தானேயல்லாமல் வேறில்லை. ஆகையால், எனக்காக நான் பாடுபடுவதென்பது உங்கள் கண்ணுக்கு உங்களுக்காகப் பாடுபடுவதாய்த் தோன்றுகிறது.’’ (குடியரசு4.1926).
‘திராவிடர் கழகம்’ என்பது, 4வது வருணத்தாராக ஆக்கப்பட்டு சமுதாயத்தில் இழிவுபடுத்தப்பட்டு, சரீரம் பாடுபட வேண்டியதாகக் கட்டாயப்படுத்தித் தாழ்த்தப்பட்டு வைத்திருக்கும் கோடி மக்கள் சமுதாயத்தின் விடுதலைக் கழகம் என்றுதான் சொல்ல வேண்டும்.” (குடியரசு).
“……சாயபுகளும் பதவி விகிதாச்சாரம் பெற்று, ஷெட்யூல்டு வகுப்பாரும் பதவி உத்தியோகமும் கல்வி விகிதாச்சாரமும் பெற்று, மீதி உள்ளதில் பார்ப்பனர் ஏகபோகமாய் உட்கார்ந்து கொண்டால் – திராவிடனே அல்லது தமிழனே, அதாவது பார்ப்பானல்லாத, முஸ்லிம் அல்லாத, கிறிஸ்தவன் அல்லாத, ஆதித்திராவிடன் அல்லாத (ஷெட்யூல்டு வகுப்பார்) திராவிடனே! ‘சூத்திரனே!’ உன் கதி, உன் எதிர்காலம் என்ன ஆகும்? சிந்தித்துப்பார்! அரசியல் நிர்ணய சபையில் உனக்கு பிரதிநிதி எங்கே? ஷெட்யூல்டு வகுப்புக்கு, பார்ப்பானுக்கு, கொள்ளை அடிக்கும் வியாபாரிக்கு, கொடுமை முறை சங்கராச்சாரிக்கு அங்கே பிரதிநிதிகள் இருக்கிறார்கள். ‘நான் ஏன் சூத்திரன்’ என்று பதறுகிற திராவிடனுக்குப் பிரதிநிதிகள் எங்கே? சிந்தித்துப்பார்.(நூல் – இன இழிவு ஒழிய இஸ்லாமே நன்மருந்து, 1947).
“இன்று சமுதாயத்தில் பார்ப்பனர், சூத்திரர், பஞ்சமர் என்ற மூன்று பெரும் பிரிவுகள் இருக்கின்றன. இதில் மேல்சாதிக்காரன் என்ற காரணத்தினால் பார்ப்பனனும், கீழ்சாதிக்காரன் என்ற காரணத்தினால் பஞ்சமனும் தங்களுக்கு வேண்டிய சலுகைகள் பெறுகின்றனர். ஆனால், இடையில் இருக்கும் சூத்திரர்கள் சலுகை இல்லாமல் வேதனைப்படுகின்றனர்.” (விடுதலை 16-4-1950).
3.1963 ஆம் ஆண்டு “நாத்திகம்” வார இதழுக்கு ஆசிரியர் அவர்களுக்கு பகுதியில் “ஆதிதிராவிடர்களும்பெரியாரும்” என்றதலைப்பில்கடிதமொன்றைஎழுதினார். அதுவருமாறு: “துணிவிலைஏறிவிட்டதற்குகாரணம்இப்போதுபறைச்சிகளெல்லாம்ரவிக்கைப்போடுவதுதான்!வேலையில்லாததிண்டாட்டம்அதிகரிப்பதற்குக்காரணம் பறையன்களெல்லாம்படித்துவிட்டதுதான்.”
“நான் எதிர்பார்ப்பது நடைபெறவில்லை. படிச்சவனுக்கு வேலை கிடைக்கல்லியே! ஒரு பையன் எட்டாம் வகுப்பு வரைக்கும் படிச்சா, உடல் உழைப்பிலே அவன் நம்பிக்கை இழக்கிறான். வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாயிடுத்து. உதாரணம் சொல்றேன். 1940-இல் கம்மானுக்கு 9 அணா 10 அணா கூலி கொடுத்தேன். கொல்லத்துக்காரனுக்கு ஒரு நாள் சம்பளம் 12 அணா. பெண் பிள்ளைக்கு ஒரு அணாதான் கூலி. இன்னிக்கு எட்டு ரூபா பத்து ரூபா கூலி கேட்கிறாங்க. காரணம், ஜனங்க எண்ணம் படிப்பிலே ஈடுபட்டது. கொஞ்சம் படிச்சவன் மண்வெட்டி கையிலே எடுக்கிறது கௌரவக் குறைச்சல்னு நினைக்கிறான். வேலைக்கு ஆள் இல்லை. இன்னொரு பக்கம் படிச்சவனுக்கு வேலையில்லை; வேலையில்லாத் திண்டாட்டம். காலேஜ் இருந்து என்ன உபயோகம்?”[8]
1970களில்செத்துவிட்டசூத்திரன்மற்றும்காலமானபெரியார்ஈவேரா: கருணாநிதி, “சுத்திரன்” என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு, பார்ப்பன-எதிர்ப்பு பிரச்சாரம் செய்து வந்தார். ஆனால், பெரியாரிடம் இது எடுபடவில்லை. 24 டிசம்பர் 1973 அன்று இறந்து விட்டதற்குப் பிறகு, இவ்வார்த்தை பிரயோகம் குறைந்து, மறைந்து விட்டது எனலாம். விவாத-விவாதங்களில் மட்டும் குறிப்பிடப் படுகிறது. ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் போது, கருணாநிதி, சில திமுக பேச்சாளர்கள் முரசொலியில், மேடைகளில் “பாப்பாத்தி,” என்றும் “ஆரிய அம்மையார்” என்று எதிர்மறை வாதங்கள் மூலம், தங்களது வெறுப்பைக் காட்டியுள்ளனர்[9]. இன்று யாரும் தமிழகத்தில் “சூத்திரன்” என்று சொல்லிக் கொள்ள யாரும் இல்லை. அம்பேத்கர் சிலைகள் அதிகமாகும் நிலையில், பெரியாரும் பிந்தள்ளப் படுகிறார்.
வேதபிரகாஷ்
19-06-2019
[1] Hanumanathan, K.R., Evolution of Untouchability in Tamil Nadu A.D. up to 1600, IHR 23/1–2, 1996–1997, pp.41–65.
[2] Hanumanthan, Krishnaswamy Ranaganathan. Untouchability: A Historical Study Upto 1500 AD: with Special Reference to Tamil Nadu. Madurai: Koodal Publishers, 1979.
[3] Robertson, S. “Periyar EV Ramasami’s critique of priestly Hinduism and its implications for social reforms.” Indian Journal of Theology 45 (2003): 75-87.
[4] Anita Diehl, Periyar E. V. Ramasami: A Study of the Influence of a Personality in Contemporary South india, B. J. Publications, 54. Janpath, New Delhi, 1978, p.19.
[5] ந. சுப்புரெட்டி, தந்தைபெரியார்சிந்தனைகள், யாழ் வெளியீடு, சென்னை, 2001, ப.136.
[6] சாமி.சிதம்பரனார், தமிழர் தலைவர், சென்னை, 1939, ப.25.
காபிர்–நாயக்கர், ஜின்னாவின்முன்தாக்குப்பிடிக்கமுடியவில்லை: ஜின்னாவைப் பொறுத்த வரையில், அவர் மிகத்தெளிவாக இருந்தார் என்று தெரிகிறது. 1940 மற்றும் பிறகு நாயக்கரை சந்தித்த போது, அதனை உறுதி செய்தார். ஆமாம், தான் முஸ்லிம்களுக்குத் தான் பாடுபட முடியும், முஸ்ல்லிம் அல்லாதவர் – காபிர்களுக்கு பாடுபட முடியாது என்று தெளிவாக தெரிவித்தார். ராமசாமி நாயக்கர் தான், இவ்விசயம் தெரிந்தும், அவரிடம் தேவையில்லாமல் உறவு வைத்துக் கொண்டு, வலிய-வலிய பேசினார். ஆனால், என்னைக்கு வந்தபோது கூட அவரை ஜின்னா கண்டு கொள்ளவில்லை. ஆக, சூத்திரன் பற்றியெல்லாம் ஜின்னாவுக்கு கவலையில்லை, தேவையில்லை. ஈவேரா இதே போலத்தான், அலி சகோதரர்களை வீட்டிற்கு வரவழைத்து உபசரித்தார். ஆனால், அவர்களோ, காந்தி விசயத்திலேயே, கேடுகெட்ட-மோசமான முஸல்மானை மதிப்பேனேத் தவிர, ஒரு காபிரை மதிக்க முடியாது என்று சொன்னது, ஒருவேளை பிறகு உறைத்திருக்கலாம்.
அம்பேத்கரும், நாயக்கருடன்ஒத்துப்போகவில்லை: அம்பேத்கர், தெளிவாக ஆரிய இனம் இல்லை என்பதை எடுத்துக் ஆகவே, ஈவேராவின் “சூத்திரன்” அல்லது பெரியாரின் “சூத்திரன்கள்” அவருடைய உருவாக்கம் தான். அதற்கு மற்ற உயர்ஜாதியினர் ஒத்துழைத்தனர்.
அம்பேத்கரின் “சூத்ரர்” பற்றியமுடிவுகள் [1946]: அம்பேத்கர், தம்முடைய “சூத்ரர் யார்?” [“Who were Shudras?”] என்ற புத்தகத்தில், சூத்ரர் ஆரியர் மற்றும் க்ஷத்திரியர் [degraded khatriyas] என்பதை எடுத்துக் காட்டினார் என்பது முன்னமே குறிப்பிடப் பட்டது. அவர், இனி சூத்ரர் பற்றி வந்த முடிவுகளை, கீழ் கண்டவாறு கொடுக்கப் படுகிறது[1]:
சூதரர், சூரியகுலத்து ஆரிய சமுதாய கூட்டகளில் ஒரு சமுதாயமாக இருந்தது.
காட்டினார். இது, ஈவேராவின் “ஆரிய சித்தாந்தத்திற்கு” பேரிடியாக போனது. மேலும், சூத்திரர் அதாவது சூத்ரர் விசயத்திலும், அம்பேத்கரின் முடிவு தெளிவாக இருந்தது. ஆகவே, அந்நிலையில், ஈவேராவின் பேச்சை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஈவேராவின்சூத்திரன்ஏன்தோற்றது? –ஈவேராகொடுத்துள்ளவிளக்கம் [1945]: ஜின்னா மற்றும் அம்பேத்கர் பற்றி ஈவேரா சொன்னதே திகைப்பாக இருக்கிறது. இதோ அவர் சொன்னது[2], “ஜின்னாவின்வெற்றிஎன்னவென்றால்முஸ்லீம்களுக்கு, இந்துக்களுக்குஉள்ளதுபோல், சமஉரிமைபங்கில்உண்டுஎன்பதல்லாமல், முஸ்லீம்களுக்குமுஸ்லீம்லீக்தவிரவேறுயாரும்பிரதிநிதித்துவம்அல்லஎன்பதைஉறுதிப்படுத்திவிட்டார். அம்பேத்கருக்குவெற்றிஎன்னவென்றால் – ஷெட்யூல்டுவகுப்புக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும்அம்பேத்கர்தான்பிரதிநிதிஎன்பதோடு, காங்கிரஸ்பிரதிநிதித்துவம்கொண்டாடுவதுசரியல்லஎன்றுசெய்யப்பட்டுவிட்டது. இனி, நமக்குவெற்றிஎன்னவென்றால், இனப்படி, மதப்படி, வகுப்புப்படிஎந்தஅரசியல்பிரதிநிதித்துவமும்இருக்கவேண்டும்என்றுபோராடினவர்கள்இந்நாட்டில்நாமேயாகும். வகுப்புவாரிபிரதிநிதித்துவத்திற்காக, காஞ்சிபுரத்தில்காங்கிரஸ்மாநாட்டில்காங்கிரஸ்ஸ்தாபனத்தைதலைமையைஉதறித்தள்ளிவிட்டு, நடுமாநாட்டில்நாலாயிரம்பேர்இடையில், ‘காங்கிரஸ்இங்குவகுப்புவாரிப்பிரதிநிதித்துவத்தைஒப்புக்கொள்ளாததினால், நான்கவலைப்படவில்லை. இதற்காகவெளியேறிவேறுஸ்தாபனம்ஆரம்பித்து, வகுப்புவாரிப்பிரதிநிதித்துவத்தைஒப்புக்கொள்ளச்செய்கிறேன்இல்லையாபார்’ என்றுபந்தயம்கூறி, மீசையைமுறுக்கிக்காட்டிவிட்டுவந்தஎன்பந்தயப்பிரச்சனை, சிம்லாமாநாட்டில்ஏகமனதாய்ஒப்புக்கொண்டுகல்சாசனமாக்கப்பட்டுவிட்டதுஎன்பதேயாகும். அதுவும்நம்விகிதப்படிஎன்றால்இன்னும்மகிழ்ச்சிஅல்லவா?”,
ஈவேராஅம்பேத்கரிடம்மாறுபட்டது [1947]: ஈவேரா சொன்னதாவது[3], “……ஆதித்திராவிடர்களுக்குத்திடீர்என்றுவந்தயோகம்டாக்டர்அம்பேத்கர் ‘நான்இந்துஅல்ல; பஞ்சமன்அல்ல; இந்துமதத்தின்எந்தப்பாடுபாட்டுக்கும்சம்பந்தப்பட்டவன்அல்ல’ என்றுசொன்னதால்தான். கோயில்திறக்கப்பட்டதும், ‘லிஸ்ட்டுகொடுங்கள்; உத்தியோகம்கொடுக்கிறேன்’ என்றுமந்திரிகேட்பதும், ‘உங்களுக்குநீதிக்குமேல், அளவுக்குமேல்நன்மைசெய்கிறேன். என்னவேண்டும்? கேள்’ என்றுபட்டேல்சொல்லுவதும், ‘நானும்ஆதித்திராவிடன், பங்கி’ என்றுகாந்தியார்சொல்வதும்ஆனகாரியங்களுக்குக்காரணம் ‘நான்இந்துவல்ல’ என்றுஅஷ்டாட்சரமந்திரமேயாகும். டாக்டர்அம்பேத்காருக்கும்அய்ந்துவருடத்துக்குமுன்பே, நான், 1925ல்சொன்னேன், ஆனால்எனக்கு 5 வருடத்துக்குப்பின்புசொன்னஅவர்கள்வெற்றிபெற்றுவிட்டார்கள். ஆனாலும், அவர்கள்இனியும் ‘இந்துஅல்ல’ என்றுதான் – வாயிலாவதுசொல்லிக்கொண்டேஎல்லாஉரிமைகளும்பெறப்போகிறார்கள்”…… அதாவது ஈவேரா அம்பேத்கரிடம் என்ன பேசினார் என்பது கூட முழுமையாகத் தெரியவில்லை[4].
அம்பேத்கர் எண்ணிக்கைக்குத்தகுந்தபடிசகலவற்றிலும்பங்குகொடுக்கவேண்டும்என்று கேட்டார், ஆனால், நாம் (சுத்திரர்) கேட்கவில்லை [1951][5]: ‘‘டாக்டர் அம்பேத்கர் மட்டும் ஏதோ ஆதித்திராவிடர்களுக்காகப் போராடினார். இவரிடம் ‘உம் சங்கதிக்கு மட்டும் தடையில்லாமல் எது வேண்டுமானாலும் சொல் – செய்கிறோம்; ஆனால், மற்றவர்கள் விஷயத்தைப் பற்றிப் பேசாதே’ என்று கூறிவிட்டனர். அதன்படியே அம்பேத்காரும் தன் சமூகத்தாருக்கு வழிதேடிக் கொண்டார். ஆகவே, ஆதித்திராவிடர்களின் எண்ணிக்கைக்குத் தக்கபடி விகிதாச்சாரம் கொடுப்பதாகக் கூறிச் சட்டமும் செய்துவிட்டனர். அந்தச் சட்டத்திலே ஆதிதிராவிடர்களின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி சகலவற்றிலும் பங்கு கொடுக்க வேண்டும் என்று டாக்டர் அம்பேத்கர் கேட்டபடி, மக்கள் தொகை விகிதாச்சாரத்தின்படி ஸ்தானங்கள் கொடுத்துவிட்டனர். ஆகவே அவராவது அவ்வளவு பெற்றுவிட்டார். ஆனாலும், நம்மவர்களுக்காக (நான்காம் சாதி) எவனாவது இதுவரை ஏதும் கேட்டது கிடையாது. ஆதித்திராவிடர்களுக்கு இவ்வளவு ஒதுக்கிவிட்டு, நாம் விகிதாச்சாரம் கேட்பது தப்பு என்று சொல்லுகிறார்கள். ஆகவே, யாராவது இதைப் பற்றி கேட்டால், அவரை ‘வகுப்புவாதி’ என்று கூறிவிடுகிறார்கள்.’’
‘‘அம்பேத்கர் கொஞ்சம் நம் உணர்ச்சியுள்ளவர். அவர் என்னைக் கேட்டார். ‘உன்னுடைய மக்களுக்கு என்ன செய்யவேண்டும்?’ என்று. நிறைய விவரங்களையெல்லாம் அவரிடம் கொடுத்தேன்; அதையெல்லாம் அவர் பேச ஆரம்பித்தார். உடனே பார்ப்பனர்கள் அவருக்கு விலை கொடுத்துவிட்டார்கள். அது என்னவிலையென்றால், அவர் தன்னுடைய மக்களுக்கு 100-க்கு 10 இடம் கல்வி வசதியில், உத்தியோக வசதியில் கேட்டார். அவன் ‘15-ஆகவே எடுத்துக் கொள்’ என்று சொல்லிவிட்டான்.! அவனுக்குத் தெரியும் 25 இடம் கொடுத்தால்கூட அவர்களில் மூன்று அல்லது நான்கு பேர்கூட வரமாட்டார்கள் என்பது. பார்ப்பான் எழுதிக் கொடுத்த சட்டத்தில் அவர் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டார். மற்றவர்களுடைய சங்கதியைப் பற்றி அவர் சிந்திக்கவில்லை.’’ (விடுதலை 11.11.1957).
உள்ளசூத்திரன்ஆட்சியைக்காப்போம்: 1960-1970களில் திராவிட கட்சி வேட்பாளர்கள் ஜாதி பெயர் சொல்லி மேடைகளில் பேசுவது வழக்கமாக இருந்தது. சில நிலைகளில், ஜனாதிபதி ஆட்சி அமூல் படுத்தப் போகிறது, என்ற விவரம் அறிந்த போது, “உள்ளசூத்திரன்ஆட்சியைக்காப்போம்” என்று சுவரொட்டிகள் ஒட்டினார்கள். ஜெயலலிதாவை “பாப்பாத்தி” என்று மேடைகளில் பேசி, மறைமுகமாக “சூத்திரன்” என்று காட்டிக் கொள்ளவும், அதாவது, உணர்ச்சிகளைத் தூண்டி, ஜாதி துவேசத்தை கிளப்ப, உண்டாக்க முயன்றது தெரிந்த விசயமாக உள்ளது. இப்பொழுது பன்றிக்கு பூணூல் போடும் விசயத்தில் கூட, ““பார்ப்பானை பிராமணன் ஆக்குவதும்– தமிழர்களை சூத்திரனாக்குவதும் பூணுலே..”” என்று சுவர்களில் எழுதினர். அதாவது, அப்பொய்மையை, பிரச்சார ரீதியாக பரப்பும் குணம், மனப்பாங்கு, போக்கு முதலியவற்றை தொடர்ந்து காணலாம்.
ஜின்னாசூத்திரர்களுடன்விளையாடியது [1940-47]: 1946 நேரிடை செயல்பாடு [Direction Action Day] என்ற தீவிரவாத தாக்குதல் மூலம், துலுக்கர் தமது வெறித்தனத்தை வெளிப்படுத்தினர். இதில் பாதிக்கப் பட்டது இந்துக்கள் தாம், அதாவதி எஸ்.சி இந்துக்கள். 14-08-1946 அன்று துலுக்கர் கல்கத்தாவில் ஊர்வலமாகச் சென்று ஜின்னா-அம்பேத்கர் தலைமை ஏற்போம் என்று குரல் கொடுத்தனர்[1]. ஜோகேந்திர நாத் மண்டல் [Jogendra Nath Mandal] என்ற எஸ்சியை வைத்துக் கொண்டு, ஜின்னா மோசடி வேலை செய்தார். சூத்திரர்-துலுக்கர் ஒற்றுமை போர்வையில், வங்காளத்தில், அவரை உபயோகித்துக் கொண்டார். பிறகு, பாகிஸ்தான் உருவானதும், “இந்துவிற்கு” பிரதிநிதுத்துவம் அளிக்கிறேன் என்ற போர்வையில். இவரை சட்ட அமைச்சராக்கினார். ஆனால், அடிப்படைவாத-மதவெறி துலுக்கர்களால் அதிகமாக இம்சிக்கப் பட்டார். இதனால், இவர், ராஜினாமா செய்து, இந்தியாவிற்கு ஓடிவர நேர்ந்தது. ஆக, நாயக்கருக்கு நேரிலும், கடிதம் மூலமும் அதிர்ச்சி கொடுத்தார் என்றால், ஜோகேந்திர நாத் மண்டலுக்கு, இன்ப அதிர்ச்சி கொடுத்து வெளியேற்றினார் எனலாம். ஏனெனில், சூத்திரனாக இருந்தாலும், காபிர் பதவி தான் கிடைக்கும், சூரையாடப் படுவான். ஆனால், ஈவேரா துலுக்கனாக மாறாலாம் என்றெல்லாம் எழுதி, பேசியுள்ளது, அவரது போலித் தனத்தையே காட்டுகிறது.
அலி சகோதரர்களும், ஈவேராவும்: மௌலானானா மொஹம்மது அலி ஜௌஹர் (Maulana Mohammad Ali Jouhar) மற்றும் மௌலானா சௌகத் அலி (Maulana Shaukat Ali) ராமசாமி நாயக்கர் வீட்டிற்கு வந்ததாக சொல்லிக் கொள்கிறார்கள். மொஹம்மது அலி ஜௌஹர் (10 December 1878 – 4 January 1931) மற்றும் சௌகத் அலி (1873 – 1939) “அலி சகோதர்கள்” என்று குறிப்பிடப் படுகிறார்கள், கிலாபத் இயக்கத்தின் போது, காந்தி இவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். ஆனால், அவர்கள் காந்தியை மதிக்கவில்லை. அலி சகோதரர்களை, பெரியார் தமது தாயார், மனைவிகளுக்கு அறிமுகம் செய்து வைக்கும்போது, ”இந்த உலகமே காந்தியுடன் இருக்கும்போழுது, அந்த மஹாத்மாவோ, இந்த மௌலானா முஹம்மது அலியின் சட்டைப்பையில் இருக்கிறார்” என்று சொன்னார், என்றெல்லாம் பெரியாரைப் பற்றியுள்ள புத்தகங்களில் காணப்படுகிறது. அலி சகோதரர்களுக்கு தமிழ் தெரியாது, அப்படியானால். நாயக்கர் இந்தியில் / உருதில் அவர்களுடன் பேசியிருக்க வேண்டும். ஆங்கிலத்திலும் பேசியிருக்கலாம். காசி எல்லாம் சென்று வந்திருப்பதாலும், பெரிய வியாபாரி என்பதாலும் நாயக்கருக்கு இந்தி தெரியும். ஆகவே, அவர் எப்படி இந்தி எதிர்த்தார் என்று தெரியவில்லை!
அம்பேத்கரின்விளக்கம் [1946]: வேத-இலக்கியங்கள் மூலமாகப் பெறப்படும் விவரங்களை, “பிராமண கருதுகோள் மூலம் சூத்ரரகளின் தோற்றம்,” என்ற தலைப்பில் அலசி, அவையெல்லாம் அர்த்தமற்றவை, சரித்திர மாணவன் அவற்றை பொருட்டாக எடுத்துக் கொள்ளமாட்டான் என்று ஒதுக்கிறார்[2]. அம்பேத்கர், தம்முடைய “சூத்ரர் யார்?” [“Who were Shudras?”] என்ற புத்தகத்தில், சூத்ரர் ஆரியர் மற்றும் க்ஷத்திரியர் [degraded khatriyas] என்பதை எடுத்துக் காட்டினார்[3]:
1) சூத்திரர்களும் ஆரியர்களே.
2) சூத்திரர்கள் சத்திரிய வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.
3) பழங்கால ஆரிய சமுதாயத்தினரின் மிகச் சிறந்த சக்தி வாய்ந்த மன்னர்களில் சிலர் சூத்திரர்களாக இருந்தனர் என்பதால் சூத்திரர்களும் சத்திரியர்களின் ஒரு முக்கிய வர்க்கத்தினராக இருந்தனர்.
அவர், அவர் காலத்தில் இருந்த புத்தகங்களை எல்லாம் தீர படித்தவர். அவருக்கு அந்நேரத்தில் இருந்த விவரங்களை வைத்து எழுதியதால், “ஆரியர்” என்றார். மேலும், பௌத்தத்தை ஏற்றுக் கொண்ட அவருக்கு, பௌத்தமத நூல்களில் “ஆரியர்” என்பது, இனப்பெயர் கிடையாது என்பதும் தெரியும். ஏனெனில், புத்தரையே “ஆரிய” என்று சீடர்கள் விளித்துள்ளனர். ஆனால், ஈவேராவுக்கு இதெல்லாம் தெரியாது. இல்லை தெரிந்தாலும், தெரியாதது போல நடந்து கொண்டார். ஏனெனில், அவரது பேச்சு, எழுத்து எல்லாமே ஆதாரங்கள் இல்லாமல், அரைகுறையாக இருந்தன.
அம்பேத்கரின்சூத்ரர்பற்றியஆராய்ச்சி [1946]: அம்பேத்கர் சமஸ்கிருதம், பாலி, ஆங்கிலம் முதலிய மொழிகளில் உள்ள நூல்களைப் படித்த்து, சூத்ரர், சத்திரியர் தான், காலப் போக்கில், சூத்ர-சத்திரியர்களுக்கும் பிராமணர்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டது என்று எடுத்துக் காட்டினார். அதனால், சூத்ரர், சத்திரியர்களிடமிருந்து பிரிந்து, சூத்ரர் என்ற நான்காம் பிரிவாக உருவெடுத்தார்கள். ஆனால், ஈவேரா அத்தகைய நூல்களை / புத்தகங்களைப் படித்தாரா இல்லையா அல்லது அவருக்கு அம்மொழிகள் தெரியுமா-தெரியாதா, இல்லை, படித்து அவருக்கு சொன்னவர், முறையாக சொன்னார்களா இல்லையா என்று தெரியவில்லை. அதனால் தான், அம்பேத்கருடன் மாறுபட்டு, சூத்திரன் என்று உருவாக்கி, அவர்களை வேறுவிதமாக, தாழ்த்தி, கேவலப்படுத்தினார். ஈவேரா, அம்பேத்கர் அவ்வளவு அந்நியோன்னிய நண்பர்கள் என்றால், ஒன்று கூடி பேசினார்கள், திட்டம் போட்டார்கள் என்றால், இவ்விசயத்தில் எப்படி எத்ரும்-புதிருமாக ஆனார்கள்? இந்தோ-ஆரிய சமூகத்தில், சத்திரிய-வர்ணத்தில், அவர்கள், சத்திரியர்களுக்கு இணையாக வைத்து மதிக்கப் பட்டனர்.
அக்காலத்தில் பிராமணர், சத்திரியர், வைசியர் என்று ஆரிய சமூகத்தில் மூன்று வர்ணத்தவர் தான் இருந்தனர். சூத்திரர் தனியாக வர்ணமாக இருக்கவில்லை. சத்திரிய வர்ணத்தவராக இருந்தனர்.
சூத்ர-அரசர்களுக்கும், பிராமணர்கக்கும் சச்சரவுகள் இருந்தன [விசுவாமித்திரர்-வசிஷ்டர்[4]]. அவற்றில் பிராமணர்கள், சூத்ரர்களால் பலவித அவமானங்களுக்கும், கொடுமைகளுக்கும், உட்பட நேர்ந்தது.
சூதரர்களின் அத்தகைய கொடிய மற்றும் அடக்குமுறைகளால் பாதிக்கப் பட்ட பிராமணர் அவர்களுக்கு, பூணூல் அணிவிக்கும் சடங்கை செய்ய மறுத்தனர்.
பூணூலை இழந்த சூத்ரர் சமூகத்தில் தாழ்ந்தவர்களாகினர். இதனால், சத்திரிய நிலையை இழந்து, வைசியர்களுக்கும் கீழாக வைக்கப் பட்டனர். இவ்வாறுதான், சூதரர் என்ற நான்காவது வர்ணம் உண்டாயிற்று.
சூத்ரர்பற்றிஈவேரா: ஈவேரா ஒழுங்காக புத்தகங்களைப் படிக்காமல், மொழிபெயர்ப்புகள் மற்றும் பாலசுப்ரமணியன், ராமநாதன், அண்ணாதுரை போன்றோர் மொழிபெயர்த்து சொனதை வைத்துக் கொண்டு எழுதியது அரைகுறையாகத்தான் உள்ளது. சமஸ்கிருதம் தெரியாது. எனவே, கருத்துகளும் இவ்விசயத்தில் பிழையாகவே இருக்கின்றன:
“நான் பிறப்பதற்கு முன்னோலேயே தேவடியா மக்கள் நீங்கள், நான் பிறப்பதற்கு முன்பே சூத்திரர்கள் நீங்கள்- நான்காவது சாதி நீங்கள், இப்போது நாளைக்கு நான் சாகப்போகிறேன் – சூத்திரனாய் விட்டுவிட்டுத்தானே சாகிறேன்… (பெரியார் ஈவெரா சிந்தனைகள் தொ.1:1:3205)”
“… சாஸ்த்திரத்திலே தேவடியாள் மகன் என்கிறான், பார்ப்பானுக்கு பிறந்தவன் என்கிறான், சூத்திரனுக்கு பெண்டாட்டியே கிடையாது என்கிறான். சூத்திரச்சி பார்ப்பானுடைய வைப்பாட்டி என்று எழுதி இருக்கிறான்…(இதையெல்லாம்) யார் கவனித்தீர்கள்… ((பெரியார் ஈவெரா சிந்தனைகள் தொ.1:1:3234)”
“..ஆனதினாலே, நாம் முதலாவது இப்போது மானத்துக்காகப் போராடுகிறோம், வேறே எதற்காகவும் இல்லை. இழிவு – தேவடியாள் மகன், பார்ப்பானுடைய வைப்பாட்டி மகன், தாசிப் புத்திரன் என்று சட்டத்திலே இருக்கிறது.. (பெரியார் ஈவெரா சிந்தனைகள் தொ.1:1:3249):
‘‘ஆதிதிராவிடர் நன்மையைக் கோரிப் பேசப்படும் பேச்சுகளும் செய்யப்படும் முயற்சிகளும் ஆதிதிராவிடரல்லாத மக்களில் பார்ப்பனரல்லாத எல்லோருடைய நன்மைக்கும் என்பதாக உணருங்கள்.’’ (குடியரசு10.1931).
‘திராவிடர் கழகம்’ என்பது, 4வது வருணத்தாராக ஆக்கப்பட்டு சமுதாயத்தில் இழிவுபடுத்தப்பட்டு, சரீரம் பாடுபட வேண்டியதாகக் கட்டாயப்படுத்தித் தாழ்த்தப்பட்டு வைத்திருக்கும் கோடி மக்கள் சமுதாயத்தின் விடுதலைக் கழகம் என்றுதான் சொல்ல வேண்டும்.” (குடியரசு 6-7-1946)
இதிலிருந்தே, ஈவேரா, அம்பேத்கரை விட எந்த அளவுக்கு முரண்படுகிறார் என்பதை கவனிக்கலாம். மேலும், எம். பாலசுப்ரமணிய முதலியார் போன்றோரை, சூத்திரர் என்று சொல்லியே வசைப் பாடியுள்ளார்[5].
[1] A day prior, the Secretary of the Calcutta District Muslim League issued a statement urging Muslims to support the Federation’s protest.10 A procession of Federation and League activists paraded through several streets in central Calcutta and converged at the designated Ochterlony monument. Mandal presided over a meeting where the speakers condemned the Cabinet Mission and the Congress for by passing the legitimate demands of the Scheduled Castes and called upon the members to be prepared for any future struggle under the leadership of Dr Ambedkar and Mr. Jinnah.
[2] On reading these Brahmanic speculations on the origin of the four Varnas and particularly of tlie Shudras one is very much reminded of tliese words of Prof. Max Muller. All these speculations are really the twaddles of idiots and ravings of madmen and as such they ore no use to the student of history who is in search of a natural explanation of a human problem.
Max Muller, Ancient Sanskrit Literature (Panini’s office edition), p. 200.
[3] .R. Ambedkar, Who were Shudras?, Chapter.VIII, The Shudras were Kshatriyas, p.121
see Chapter.XII, The Theory in the crucible, p.241.
[4] Chapter.IX, Brahmins verss Shudras, pp.155-176.
[5] மக்கள் மூடர்களாயிருக்கும் வரையில் தான் திரு. எம். பாலசுப்பிரமணியம் போன்ற வருணாச்சிரம அழுக்கு மூட்டைகளின் ஏமாற்றுதல்களும் ஆஸ்திகப் பிரசாரமும் பலிக்குமே ஒழிய வேறில்லை. திரு. பாலசுப்பிரமணியம் அவர்கள் வெற்றி பெற்றால் நமது மக்களை இன்னும் மூடர்களாய் இருக்கிறார்கள். பகுத்தறிவற்றவர்களாயிருக்கிறார்கள் என்பது தான் உறுதிப்படுமே தவிர மற்றபடி சுயமரியாதைக் கொள்கையில் ஒரு அணுவளவும் அதற்காக அசைந்து விடாது. ஜாதியையும், கடவுள்களையும், மதத்தையும், கோவில்களையும் காப்பாற்றுவதற்காக திரு. பாலசுப்பிரமணிய முதலியார் சட்டசபைக்குப் போவதும் அவரை மக்கள் அனுப்புவதும் உண்மையானால் திரு. பால சுப்பிரமணியம் ஜாதிப்படி சூத்திரராகவும், மதப்படி பார்ப்பனர் அடிமை யாகவும் தான் இருக்கத் தகுதி உடையவரே தவிர அவர் சட்டசபையில் இருந்து ராஜரீக விஷயம் கவனிக்க சிறிதும் யோக்கியதை அற்றவர் என்று நம்மால் மெய்ப்பிக்க முடியும். திரு. கள்ளிப்பட்டி கிருஷ்ணசாமி நாயக்கராவது தன்னை க்ஷத்திரியன் என்று சொல்லிக் கொள்ளுகின்றார். திரு. பாலசுப்ரமணிய முதலியார் தன்னை சூத்திரன் அல்லது சற்சூத்திரன் என்று தானே தேவாரம், திருவாசகம் பெரியபுராணம், இராமாயணம் முதலிய “நம் அரும் பெரும் நூல்கள்” படி சொல்லிக்கொள்ள வேண்டும். குடி அரசு – துணைத் தலையங்கம் – 17.08.1930
சைவத்தைப்பற்றி, தவறானவிளக்கம்மற்றும்முறைதவறிசென்றநிலை: சைவர்களின் புராணங்களைக் குறித்த எதிர்மறையான கருத்துக்கள் இடம் பெற்ற கட்டுரைகள் ‘குடிஅரசு’ இதழில் 1927-ஆம் ஆண்டு தொடங்கி வெளிவரத் தொடங்கின. இது நவீனர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதன் பின்னர் சுயமரியாதை இயக்கத்தையும் அதன் தலைவரான பெரியாரையும் பகைஉணர்ச்சியுடன் பார்க்கத் தொடங்கினர். இது எந்த அளவுக்கு இருந்ததென்றால் ‘சுத்த சைவ இரத்த ஓட்டம் உள்ளவர்கள் இன்னமும் இவர்களைக் கொல்லாமல் இருக்கலாமா?’ என்று தம் உரையில் மறைமலை அடிகள் குறிப்பிடும் அளவுக்குச் சென்றது (குடிஅரசு, 29.7.1928). பின்னர் இக்கூற்றை மறுத்து பெரியாருக்கு எழுதிய கடிதத்தில் “தமிழ் மக்கள் முன்னேற்றத்தின் பொருட்டுத் தாங்கள் செய்துவரும் நன்முயற்சிகள் இனிது நடைபெறுக” என்று மறைமலை அடிகள் வாழ்த்தி உள்ளார். (குடிஅரசு, 27.8.1928) இந்நிகழ்வுகளின் விளைவாக ‘சைவ சமயமும் சுயமரியாதை இயக்கமும்’, ‘சைவ சமயத்தின் நெருக்கடியான நிலை’ என்ற கட்டுரைகளை அடிகளார் எழுதினார். இந்நிகழ்வுகள் அடிகளாரை மிகவும் பாதித்தன. 1928 ஜுலை 31ஆம் நாள் எழுதிய நாட்குறிப்பில் அடிகளார் இவ்வாறு எழுதியுள்ளார், “கடந்தநான்குநாட்களாகஇரவும்பகலும்நன்றாகஉறங்கஇயலவில்லை. அத்துடன்என்கனவில்கூடநாத்தீகசுயமரியாதைஇயக்கம்என்சிந்தனையில்இடம்பெறுகிறது. இதன்சித்தாந்தங்களையும், எப்படிமறுப்பது, இதன்பரவுதலைஎவ்வாறுதடுத்துநிறுத்துவதுஎன்பதுகுறித்துநான்எப்போதும்சிந்தித்துக்கொண்டுள்ளேன்.”
ஈவேராவின்சைவதூஷணத்தால்துடித்தது – மறைமலைஅடிகளின்இரட்டைநிலைஏன்?:இருந்தபோதிலும் சுயமரியாதை இயக்கமானது எரிச்சலூட்டும் இயக்கமாகவே அடிகளாருக்கு இருந்துள்ளது என்பதை 1929 பிப்ரவரி 14ஆம் நாள் அவர் எழுதிய நாட்குறிப்புச் செய்தி வெளிப்படுத்துகிறது[1]: “கடவுள்மறுப்புஇயக்கம்எல்லாப்பகுதிகளிலும்பரவிவருகிறது. வேதங்கள், புராணங்கள், ஸ்மிருதிகள், சமஸ்கிருதஇதிகாசங்கள்அதன்தமிழ்வடிவங்கள்மீதானகருணையற்றவிமர்சனங்களைநான்வரவேற்கிறேன். இருந்தாலும்அருளாளர்களானமாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர்ஆகியோர்மீதும்இவர்களைஒத்தவர்கள்மீதும்நிகழ்த்தும்குறும்புத்தனமானமுறையற்றதாக்குதலைநான்விரும்பவில்லைஎன்பதோடுஅதைக்கடுமையாகக்கண்டிக்கிறேன். இவர்களுக்குநல்லறிவையும், கருணையையும், அச்சத்தையும்இறைவன்அருள்வாராக”. சமஸ்கிருத இலக்கியம் ஆதாரம் இல்லாமல், சைவமே இல்லை. மேலும், சங்க இலக்கியத்தில், “சிவன்” என்ற சொற்பிரயோகமும் இல்லை. “வேதங்கள், புராணங்கள், ஸ்மிருதிகள், சமஸ்கிருதஇதிகாசங்கள்அதன்தமிழ்வடிவங்கள்மீதானகருணையற்றவிமர்சனங்களைநான்வரவேற்கிறேன்,” என்றது, அவரது, சமஸ்கிருத-எதிர்ப்பு, பிராமண-எதிர்ப்பு என்பதையெல்லாம் மீறி, வேறோதையோ தான் காட்டுகிறது. “கருணையற்றவிமர்சனங்களைநான்வரவேற்கிறேன்,” என்றது, அவரது மெத்தப் படித்த பாண்டித்யம், பண்பாடு, ஞானம் முதலியவற்றையும் தாண்டியுள்ள வெறுப்பை எடுத்துக் காட்டுகிறது. எனவே, முதலியாரின், நாயக்கருடனான நட்பு, பொல்லாதது, அதனால், இழிவு தான் வந்து சேர்ந்தது.
வேதாசலமுதலியாருக்கும், ராமசாமநாயக்கருக்கும்நடந்தலடாய்என்ன?: “22.7.1928 அன்றுசென்னை, இராயப்பேட்டை, பாலசுப்பிரமணியபக்தசனசபையின்ஆண்டுவிழாஒன்றில்தலைமையேற்றஈ.வெ.ரா.வும்அவரியக்கமும், இயக்கத்தாரும்மடிகட்டிமுன்னின்றுநாயன்மார்களையும்ஆழ்வார்களையும்இழிவாகப்பழிப்பதுபொறுத்தற்கரியதென்றும், இப்படிஇசுலாமியமதத்தையும்அதன்தலைவர்களையும்தாக்கிப்பேசுவோர்உளரானால்அச்சமயத்தவர்அவரைக்கொன்றுஅவர்குடலைமாலையாகஅணிவரல்லரோ? என்றுஅடிகள்பேசினார்”, என்று படிக்கும் போது, வியப்பாக உள்ளது[2]. அடிகளார் பேச்சுக்கு எதிர்வினையாகத் ‘திராவிடன்’ ஏட்டில் தொடர்ந்து கடுமையான எதிர்த்தாக்குதலில் பல கட்டுரைகள் வெளியாகியுள்ளன. ‘குடலைப் பிடுங்கி மாலையாகப் போடுவது போலெல்லாம் பேசுவதா?’ எனத் ‘திராவிடன்’ ஆசிரியர் கண்ணப்பன் போன்றோர் மறைமலையடிகள் மீது வழக்குப் போடவும் முனைந்துள்ளனர்[3]. ஆனால் இந்நிகழ்வுகளின் போது வெளியூர்ப் பயணங்களில் இருந்த ஈ.வெ.ரா. உடனே இதில் தலையிட்டுத் தம் இயக்கத்தார் செயல்களுக்காக மறைமலையைடிகள் மன்னித்துக் கொள்ள வேண்டு மென்று மடல் எழுதியுள்ளார்[4]. “சுயமரியாதைஇயக்கத்தலைவர்ஒருவைஷ்ணவர்ஆவர். அவரதுசகோதரரும், வைஷ்ணவராகஇருந்துகொண்டு, பலஅப்பாவிசைவர்களைவைஷ்ணவர்களாகமாற்றியிருக்கிறார்கள். அதற்குதுணைபோனவர்களும்வைஷ்ணவர்கள்தான். சிலநீதிகட்சிதலைவர்களும்வைஷ்ணவர்கள்தான். மேலும்அவர்கள்வைஷ்ணவர்கள்மட்டுமில்லை, தெலுங்குபேசுபவர்களாகவும்இருக்கின்றனர்,” என்றார் மறைமலையடிகள். அப்படியென்றால், ஆராய்ச்சியாளர்கள் அத்தகைய நிலையினையும் ஆராய வேண்டியுள்ளது. ஏனெனில், அது சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்தி, அமைதியைக் குலைப்பதாக உள்ளது.
சைவ–வைணவமோதலைஉண்டாக்கமுயன்றநாயக்கரும், முதலியாரும்: மறை. திருநாவுக்கரசு. ‘கம்பராமாயணம் பற்றி அடிகள்’ என்று தலைப்பிட்டு எழுதியது : “நம்அடிகளோ, கம்பர்பாடல்கள்சிறந்தநல்லிசைப்புலமையால்எழுந்தனஅல்லவென்றும், பண்டைத்தண்டமிழ்ச்சங்கப்பாடல்களோடுஅப்பாடல்களைஒப்பிட்டால், கம்பர்கவிகள்சிறந்துநில்லாஎன்றும், அவைபகுத்தறிவுக்கொவ்வாக்கதைகளால் – ஆரவாரமான – ஏராளமானபொருளற்றகற்பனைகளால்வரைதுறையின்றியாக்கப்பட்டவைஎன்றும், கம்பரைப்பின்பற்றிஎழுந்தஏனையகாவியங்களும்அவர்முறையைப்பின்பற்றிச்சிறப்பிழந்தனஎன்றும், பாட்டுப்பற்றியபண்டைத்தமிழர்மரபேகம்பரால்புறக்கணிக்கப்பட்டதென்றும், தமிழர்நாகரிக – இனஉணர்வைத்தம்கதையால்கெடுத்துவிட்டார்என்றும்கருதினார்…அத்துடனில்லாதுஅடிகள்தமிழர்நாகரிகசமய – இனஉணர்வுக்குமாறான – கம்பராமாயணத்தைப்பயிலுதலும், அவைக்களங்களில்அதனைவிரித்தெடுத்துஓதிப்பரப்புதலும்தவறென்றுதம்சொற்பொழிவுகளிலும், எழுத்துகளிலும்வெளியிட்டும்எழுதியும்வந்தார்[5]. தமிழேந்தி[6], “உண்மையில்மறைமலையடிகளின்கம்பராமாயணஎதிர்ப்புபகுத்தறிவுநெறியின்பாற்பட்டதன்று. அவர்நெஞ்சுக்குள்புகுந்தசைவநெறிப்பூதம்அவரைஅப்படியெல்லாம்எழுதவைத்தது. ….இராமாயணத்திற்குஎதிராகத்தன்மானஇயக்கம்போர்முரசுகொட்டியபோது, பூரித்துமகிழ்ந்தஅடிகளார், அவ்வியக்கம்பெரியபுராணத்தின்மீதுகைவைத்தபோது, அலறியடித்துக்கொண்டுஓடினார்……,” என்று நக்கலாக எழுதியுள்ளார்[7]. இவ்வாறு விமர்சித்தாலும், சைவர்கள் அமைதியாகத்தான் இருக்கிறார்கள்.
போலிபிராமணஎதிர்ப்பில்உயர்ஜாதியினரில்அரசியல், மேம்பட்டதுஅவர்கள், பாதிக்கப்பட்டதுமற்றவரே: பிராமணர், பார்ப்பனர் என்று சொல்லிக் கொண்டு பிரச்சாரம் செய்து, ஆட்சிக்கு வந்தது, முதலியார், சூத்திரர், மேனன், கவுண்டர் போன்றோரே. இதில் ஜெயலலிதாவை ஜாதி ரீதியில் குறிப்பிட முடியாது. 60 ஆண்டுகளில் பார்ப்பனர் ஓடி மறைந்து விட்டனர். எல்லா இடங்க்களிலும், பார்ப்பனர்-அல்லாதவர் தாம் ஆட்சி செய்கின்றனர். பிறகு, இந்த 60 ஆண்டுகளில் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன, பொருளாதார ரீதியில் உண்டான சிறப்புகள் என்ன, அரசிய ஆளுமையில் நடந்த நன்மைகள் என்ன என்று கூற முடியுமா என்று கவனிக்க வேண்டும். லஞ்சம், மோசடிகள், குற்றங்கள், சட்டமீறல்கள் குறைந்தனவா? கல்வி, மருத்துவம், பொது வாழ்வு, குடும்பம், முதலியவற்றில் தேவையான ஒழுக்கம், வேலை நேர்மை, தொழில் தர்மம் முதலியவை கடைப்பிடிக்கப் படுகின்றனவா? தினசரி வழக்கமான காரியங்கள் அமைதியாக செய்ய முடிகிறதா? எல்லா விண்ணப்பங்களிலும் ஜாதி கேட்கப் படுகிறது, படிப்பு-தொழில்-சலுகைகள் எல்லாமே ஜாதி கேட்டுத்தான் நடக்கிறது. இத்தனை போதித்தும், ஜாதித்துவம் இருக்கிறது, கொலைகள் நடக்கின்றன. இவற்றில் எப்பொழுதும் தாக்கப்படும் பார்ப்பனீயம் அல்லது சமத்துவம் அல்லது …….த்துவம் உள்ளதா? அனுபவிக்கும் மக்கள் தான் சொல்ல வேண்டும்.
[2] 22.7.1928 அன்று சென்னை, இராயப்பேட்டை, பாலசுப்பிரமணிய பக்த சன சபையின் ஆண்டு விழா ஒன்றில் தலைமையேற்ற ஈ.வெ.ரா.வும் அவரியக்க மும், இயக்கத்தாரும் மடிகட்டி முன்னின்று நாயன்மார் களையும் ஆழ்வார்களையும் இழிவாகப் பழிப்பது பொறுத்தற்கரியதென்றும், இப்படி இசுலாமிய மதத் தையும் அதன் தலைவர்களையும் தாக்கிப் பேசுவோர் உளரானால் அச்சமயத்தவர் அவரைக் கொன்று அவர் குடலை மாலையாக அணிவரல்லரோ? என்று இன் றைய இந்து முன்னணி இராமகோபாலன், எச். இராசா, அருச்சுன் சம்பத் பாணியில் பேசியுள்ளார்.
[4] “On the 24′ of August 1928, Adigal noted in his diary:” … Mr.T.V. Kalyanasundara Mudaliar, Mr. Balasundara Mudaliar and Mr. Viswanatha Pillai of Trichi came to conciliate me to Mr. E.V. Rarnasarni Naicker’s side and requested me to write him a letter in a fiendly tone which I readily did and gave the letter to Visvanatha Pillai … By the grace of Lord rnay there be peace over all!”
Maraimalai Adigal. Marai Malai Adiagal Diaries. (“MMAD”) available at Marai Malai Adigal Library, Madras, Tamil Nadu:unpublished, 1898-1950.