தேர்த்திருவிழா கலவரம் – சேஷசமுத்திரமும், ஓரியூரும் – தேர் எரிந்ததும், மனித உடல் எரிந்ததும் – சில ஊடகங்களின் பாரபட்சம் மிக்க செய்தி வெளியீடுகள் (2)
சிவகங்கை பிஷப் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்பாட்டம் (01-09-2015): செவ்வாய்கிழமை ஆர்பாட்டம் நடத்தியவர்களை தடுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது[1]. கிராமத்தவர், சர்ச்-வளாகத்தில் புகுந்து, ஒரு அலுவலகரைத் தாக்கினர். இளைஞர்கள் சிவகங்கை சர்ச்-சுபீரியர் மற்றும் சர்ச்-துறவி முதலியோரை கண்டித்து போஸ்டர்கள் ஒட்ட வந்தனர். போஸ்டர்கள் ஒட்டிய பிறகு, ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் தடுத்த போது, சிவகங்கை பிஷப், சர்ச்-சுபீரியர் மற்றும் சர்ச்-துறவி முதலியோர் மீது கொலைக்குற்றத்திற்க்காக வழக்குத் தொடர கோரிக்கையிட்டு வற்புறுத்தினர். அவர்கள் சிவகங்கை பிஷப் ரெவ்.சூசை மாணிக்கம்[2], சர்ச்-சுபீரியர் வொய்.எஸ். யகு மற்றும் சர்ச்-துறவி ஐ. வேதநாயகம் முதலியோர் மீது கொலைக்குற்றத்திற்க்காக இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 3012ன் கீழ் வழக்குத் தொடர போலீஸாரிடம் கட்டாயமாக பிடிவாதம் பிடித்தனர்[3]. சர்ச் வளாகத்தில் இயங்கி வரும் பள்ளிக்கு செப்டம்பர்.9 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்த விழாவும் செவ்வாகிழமையோடு நிறுத்தப்பட்டதால், அவ்விடம் வெறிச்சோடு கிடந்தது. செப்டம்பர் 8ம் தேதி அவ்விழா முடிவதாக இருந்தது. தேர்த்திருவிழா இவ்வாறாக முடிந்தது போலும்! ஆனால், போராட்டத்தை கிராம மக்கள் விடவில்லை.
பரஸ்பர புகார்கள்: சர்ச்-அதிகாரம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் மீது வன்முறையைத் தூண்டுவதாக புகார் கொடுத்தது. இந்நிலையில் திருவிழாவை தன்னிச்சையாக நடத்தியதாகவும், வன்முறையை தூண்டும் விதமாக நடந்து கொண்டதாகவும் ஓரியூர், புல்லூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த சார்லஸ், அருள் ராஜசேகர், அருள்சாமி, சூசை அருள், ஆரோக்கியசாமி, ஆரோக்கிய அருளானந்து, குமார், ஆரோக்கிய சாமி, அருளானந்து உள்ளிட்ட 10 பேர் மீது எஸ்.பி. பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்[4]. “கடந்த 28ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. இதில் குறிப்பிட்ட ஒரு பிரிவினரை புறக்கணிப்பதாக புகார் எழுந்தது. இதனால் கொடியேற்றத்தின்போது, இருதரப்பு இடையே பதற்றம் நிலவி வந்தது. போலீசாரின் சமாதான நடவடிக்கையால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை,” என்று தினகரன் குறிப்பிடுகிறது[5]. செங்கல்சூளை உரிமையாளர் மர்மமான முறையில் உயிரிழந்ததையடுத்து அவரது சடலத்தை 2ஆவது நாளாக புதன்கிழமையும் அவரது உறவினர்கள் வாங்க மறுத்து திரும்பிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது, என்று தினமணி செய்தியை வெளியிட்டுள்ளது[6]. அதாவது சார்லஸ் செங்கல்சூளை உரிமையாளர் உரிமையாளர் என்ற கூடுதல் தகவலைக் கொடுத்துள்ளது[7]. போராட்டத்தின் மீது, போலீஸார் தடுத்த போது, சிவகங்கை பிஷப், சர்ச்-சுபீரியர் மற்றும் சர்ச்-துறவி முதலியோர் மீது கொலைக்குற்றத்திற்க்காக வழக்குத் தொடர கோரிக்கையிட்டு வற்புறுத்தினர். அவர்கள் சிவகங்கை பிஷப் ரெவ்.சூசை மாணிக்கம்[8], சர்ச்-சுபீரியர் வொய்.எஸ். யகு மற்றும் சர்ச்-துறவி ஐ. வேதநாயகம் முதலியோர் மீது கொலைக்குற்றத்திற்க்காக இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 3012ன் கீழ் வழக்குத் தொடர போலீஸாரிடம் கட்டாயமாக பிடிவாதம் பிடித்தனர்[9], என்ற நிலையிருந்தது கவனிக்கவேண்டும். எனவே, பதிலுக்கு பதில் புகார்கள், வழக்குப் பதிவுகள் என்று தொடரும் போலிருக்கிறது.
சிபி–சிஐடி புலன் விசாரணைக்கு விடவேண்டும் என்று கோரிக்கையிட்ட கிராமத்தவர்களும், கிரைம்–பிராஞ்சு–போலீஸ் விசாரணைக்கு ஒப்படைத்த போலீஸும் (02-09-2015)[10]: புதன்கிழமையும் போராட்டத்தைத் தொடர்ந்த கிராமத்தவர்கள் சிபி-சிஐடி புலன் விசாரணைக்கு விடவேண்டும் என்று கோரிக்கையிட்டு, எஸ். சார்லஸின் உடலைப் பெற மறுத்து ஆர்பாட்டம் செய்தனர். தலித் தலைவரான பி. சந்திரபோஸ் போஸ்ட் மார்டம் அறிக்கையைப் பார்த்தபிறகு தான் உடலை வாங்குவது பற்றி தீர்மானிப்போம் என்று உறுதியாகக் கூறினார்[11]. ஒரு மருத்துவர் குழு போஸ்ட் மார்டம் செய்தது மற்றும் அந்த முழு நிகழ்வும் விடியோ எடுக்கப்பட்டது. ஆனால், போராட்டக் காரர்கள் மசிவதாக இல்லை. போஸ்ட் மார்டம் அறிக்கை மூலம் கொலை என்று தெரியவந்தால், வழக்கு பதிவு செய்து கொலையாளியைப் பிடித்து தண்டிக்க வேண்டும் அல்லது தற்கொலை என்று தெரியவந்தால், அவ்வாறு தற்கொலைக்குத் தூண்டியவர்களின் மீது வழக்குப் பதிவு செய்யப்படவேண்டும் என்று அவர்கள் கூறினர். சி. சார்லஸின் மகன், சி. அருள் செபாஸ்டியன், “எது எப்படியாகிலும், இவ்வழக்கை சிபி-சிஐடி புலன் விசாரணைக்கு விடவேண்டும்”, என்று “தி இந்துவிடம்” சொன்னார்[12]. சர்ச்-அதிகாரத்திற்கும், சார்லஸுக்கும் பேதம் இருந்ததினால், அவரது இறப்பில் சந்தேகம் உள்ளது என்று கிராமத்தினர் கூறினர். போலீஸ் சூப்பிரென்டென்டன்ட், விசாரணை நேர்மையாக நடக்கும் என்று உறுதியளித்து, கணபதி டி.எஸ்.பி(கிரைம் பிராஞ்சு)யிடம் அப்பொறுப்பை ஒப்படைத்தார்[13].
இருவிதமான தேர்த்திருவிழாக்கள், வெவ்வேறான கருத்து பதிவுகள், மௌனங்கள்: தமிழகத்தில் 17 நாட்கள் இடைவெளியில், இரண்டு தேர்த்திருழாக்களில், கலவரங்கள் ஏற்பட்டுள்ளன. தமிழகத்தின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் நடந்துள்ளன. சேஷசமுத்திரத்தில் தேர் எரிக்கப்பட்டது, அதாவது தலித்துகளின் தேர். ஓரியூரில் ஒரு மனித உடல் எரிந்துள்ளது, அதாவது ஒரு தலித்தின் உடல். இரண்டுமே ஒரே நிலயில் தான் ஏற்பட்டுள்ளது. எரிந்தது எப்படி, யார் எரித்தனர், எதற்காக எரிந்தது-எரிக்கப்பட்டது போற்ற கேள்விகளை எழுப்பலாம். ஏற்கெனவே எழுப்பியும் உள்ளனர். ஆனால், பதில் சொல்வதில் ஒருதலைப்பட்சம், பாரபட்சம், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் கருத்து அடமானம் வைத்த தனம், கருத்தடிமைத்தனம், செக்யூலரிஸம் என்ற பற்பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. செய்திகளை வெளியிடுவதில் அவை தாராளமாகவே வெளிப்பட்டுள்ளன. சேஷசமுத்திர விசயம், உலக செய்தியாகக் கூட மாறிவிட்டது. ஜாதி-இந்துக்கள் தலித்துகளை கொடுமைப்படுத்துகிறார்கள் என்று சந்தோஷமாக செய்திகளை வெளியிட்டன. “ஜாதி தேர்தலில் எரிந்து போன ஆலயத் தேர்” என்று பிபிசி நக்கலாகவோ, காட்டமாகவோ, கிண்டலாகவோ தலைப்பிட்டு இச்செய்தியை வெளியிட்டது அதற்குத்தான் தெரியும்[14]. தினத்தந்தியும் அவ்வாறே செய்தி வெளியிட்டது[15]. எவிடென்ஸ் கதிர், சமூகச் செயல்பாட்டாளர் என்றொருவர்[16],
தமிழ்.இந்துவில், “தேர் சாம்பல் எழுப்பும் கேள்வி” என்ற தலைப்பில் பொரிந்து தள்ளினார்[17]. “தேர் ஏன் கண்களை உறுத்தியது?…என்று ஆரம்பித்து, “ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தினத்தை நாடே கொண்டாடிக் கொண்டிருந்த போது, தங்களுடைய வழிபாட்டு உரிமையை நிலைநாட்ட முயன்றதற்காக தலித் மக்கள் உலா இழுத்துச் செல்லவிருந்த தேரை எரித்தழித்திருக்கிறார்கள் சாதி வெறியர்கள். அரசை மட்டும் குறை சொல்லி ஆகப்போவது ஒன்றும் இல்லை. நமக்குள் இருக்கும் சாதியை என்ன செய்யப்போகிறோம்? சேஷசமுத்திரத் தேரின் சாம்பலிலிருந்து எழும் எரிக்க முடியாத கேள்வி இதுதான்!”, என்று கேள்வி கேடு முடித்துவிட்டார்[18]. இவையெல்லாம், அந்நிய ஊடகங்களுக்கு அல்வா சாப்பிட்டது போலத்தான். ஆனால், ஓரியூர் விசயத்தில், அமுக்கி வாசித்துள்ளது வியப்பாக உள்ளது. இந்த “எவிடென்ஸ் கதிருக்கும்” இதுவரை, எரிந்த தலித்-உடல் உறுத்தவில்லை போலும்!
ஓரியூர் தேர்த்திருவிழா நிறுத்தப்பட்டது பற்றி திருமாவளவன், கிருஷ்ணசாமி போன்றோரும் இதுவரை வாய் திறக்கவில்லை. ஒரு தலித் தலைவர் மர்மமாக இறந்தது அல்லது தூண்டுதல் பேரில் தற்கொலை செய்து கொண்டது பற்றிய செய்திகளும் அடக்கியே வாசிக்கப்பட்டுள்ளன. இங்கு ஒரு தலித்தின் உடல் எரிந்துள்ளது என்று யாரும் சீறவில்லை, குரல் கொடுக்கவில்லை. அப்படியென்றால், சர்ச்-அதிகாரம் அதனை கட்டுப்படுத்துகிறதா? இதைப்பற்றிய விவரங்கள் அதிகமாக வெளிவந்தால், அவர்களது குட்டு வெளிப்படும் என்று அஞ்சுகிறார்களா? கற்பழிப்புகள், பணமோசடி, போன்ற விசயங்களைத் தான் மறைக்கிறார்கள் என்றால், “தலித்” விவகாரங்களையும் ஏன் மறைக்கிறார்கள் என்று தெரியவில்லை.
© வேதபிரகாஷ்
03-09-2015
———————————————————————————————————————–
[1] D. J. Walter Scott, Villagers storm churh, assault employee, Ramanathapuram, September.2, 2015; The Hindu, Updated: September 2, 2015 10:41 IST
[2] Bishop Jebamalai Susaimanickam was born on Sept. 25, 1945, in Marudakanmoi, Andichurani parish in Sivagangai diocese. He was ordained a priest on Jan. 27, 1971, and appointed the second Bishop of Sivagangai on April 1, 2005. His episcopal ordination was on May 15, 2005. Bishop Susaimanickam was vicar general of Madurai archdiocese before his appointment as the diocesan prelate. He is also now secretary of the Tamil Nadu Bishops’ Council’s Commission for Bible. Bishop Jebamalai Susaimanickam Bishop’s House, Britto Nagar, Melur Road, Sivagangai 630561, Tamil Nadu, India; (91) 4575-246666 (personal), 241744 (official); Fax :(91) 4342-262200; svgbishop@sancharnet.in
[3] http://www.thehindu.com/news/national/tamil-nadu/villagers-storm-church-assault-employee/article7605645.ece
[4] http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=485779&cat=504
[5] தினகரன், தொண்டி அருகே திருவிழாவில் பிரச்னை 10 பேர் மீது வழக்கு, பதிவு செய்த நேரம்:2015-09-01 10:39:41.
[6] தினமணி, ஓரியூரில் செங்கல்சூளை உரிமையாளர் மர்மச் சாவு: 2ஆவது நாளாக சடலத்தை வாங்க உறவினர்கள் மறுப்பு, By ராமநாதபுரம், First Published : 03 September 2015 01:31 AM IST.
[7]http://www.dinamani.com/edition_madurai/ramanathapuram/2015/09/03/%E0%AE%93%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE/article3007458.ece
[8] Bishop Jebamalai Susaimanickam was born on Sept. 25, 1945, in Marudakanmoi, Andichurani parish in Sivagangai diocese. He was ordained a priest on Jan. 27, 1971, and appointed the second Bishop of Sivagangai on April 1, 2005. His episcopal ordination was on May 15, 2005. Bishop Susaimanickam was vicar general of Madurai archdiocese before his appointment as the diocesan prelate. He is also now secretary of the Tamil Nadu Bishops’ Council’s Commission for Bible. Bishop Jebamalai Susaimanickam Bishop’s House, Britto Nagar, Melur Road, Sivagangai 630561, Tamil Nadu, India; (91) 4575-246666 (personal), 241744 (official); Fax :(91) 4342-262200; svgbishop@sancharnet.in
[9] http://www.thehindu.com/news/national/tamil-nadu/villagers-storm-church-assault-employee/article7605645.ece
[10] D. J. Walter Scott, CB-CID probe into church employee’s death, Ramanathapuram, September.3, 2015; The Hindu, Updated: September 3, 2015 05:45 IST
[11] Demanding a CB-CID probe, villagers and family members refused to accept the body of S. Charles, vice president of the Parish Council of St Arulanandar Church in Oriyur, who allegedly immolated himself on Monday. A team of doctors conducted the post mortem at the Government District headquarters hospital here and videographed the process, but leaders led by Dalit leader P Chandrabose said they would take a decision on accepting the body only after seeing the post-mortem report.
[12] If the report suggested that it was a case of murder, police should immediately book those responsible for the murder and if it was a case of self-immolation, police should register a case against those who were responsible for the suicide, they said. “In any case, we will accept the body only after the case was transferred to the CB-CID,” C Arul Sabastian, son of Charles told The Hindu .
[13] The villagers suspected foul play in the death as Charles as he had a rift with the church priests over carrying the flag at the festival on August 29. Before the post-mortem, the team held talks with Superintendent of Police N M Mylvahanan, who explained the line of investigation and assured that the investigation would be done in a fair manner by a Deputy Superintendent of Police (DSP) under his direct supervision. Later in the evening, the SP ordered that the investigation would be done by Ganapathy, DSP, District Crime Branch (DCB).
[14] தமிழ்.பிபிசி, ஜாதி தேர்தலில் எரிந்து போன ஆலயத் தேர், ஆகஸ்ட்.16, 2015.
http://www.bbc.com/tamil/india/2015/08/150816_templecar_burnt
[15]தினத்தந்தி, சங்கராபுரம் அருகே கோவில் தேர் எரிப்பு:கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு; 144 தடைஉத்தரவும் பிறப்பிக்கப்பட்டது, மாற்றம் செய்த நாள்: திங்கள் , ஆகஸ்ட் 17,2015, 5:18 AM IST;பதிவு செய்த நாள்:திங்கள் , ஆகஸ்ட் 17,2015, 5:18 AM IST.
[16] எவிடென்ஸ் கதிர், சமூகச் செயல்பாட்டாளர், தொடர்புக்கு: info@evidence.org.in
[17] எவிடென்ஸ் கதிர், தேர் சாம்பல் எழுப்பும் கேள்வி, Published: August 29, 2015 08:53 ISTUpdated: August 29, 2015 08:53 IST.
[18]http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/article7593373.ece